Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய வடிவத்தில் பேனர், கறுப்புச் சட்டையுடன் நிர்வாகிகள்..! தொடங்கியது தி.மு.க செயற்குழுக் கூட்டம்

Featured Replies

புதிய வடிவத்தில் பேனர், கறுப்புச் சட்டையுடன் நிர்வாகிகள்..! தொடங்கியது தி.மு.க செயற்குழுக் கூட்டம் #liveupdates

 

தி.மு.க செயற்குழு கூட்டத்தில் சிறப்புத் தீர்மானமாக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டார். தீர்மானத்தை டி.கே.எஸ் இளங்கோவன் வாசித்தார். இரங்கல் தீர்மானத்தில், 'பொது வாழ்வில் ஈடுபடக் கூடியவர்கள் பார்த்து படித்து கற்றுக் கொள்ளக் கூடிய பல்கலைகழகமாக இருந்தவர் கருணாநிதி. தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

ஏற்றத்தாழ்வு போக்கி, சமத்துவம் உருவாக்குவதற்கு மாநிலம் முழுவதும் சமத்துவபுரம் அமைத்தவர் கருணாநிதி. பெரியாரின் விருப்பப்படி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டத்தை நிறைவேற்றினார். கருத்துச் சுதந்திரத்துக்காக, ஆட்சியை இழந்தவர். மாநிலச் சுயாட்சிக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர். சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் கொடி ஏற்றுவதற்கான உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி. அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரவித்துகொள்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் தி.மு.க செயற்குழுக் கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகைதந்துள்ளார். 

 

 

63daebf9-76d6-4de9-977c-b02215efc542_104

 

தி.மு.க செயற்குழு கூட்டத்துக்கு காரில் வருகை தந்த கனிமொழி

b0bb8d40-86fa-4f76-83b5-444f229ab10e_101

தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். அவருடைய இறப்பைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் பதவி காலியாக உள்ளது. விரைவில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தி, தி.மு.க தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று தி.மு.க செயற்குழுக் கூட்டம் தொடங்கியது.

trbalu_10314.jpg

அந்தக் கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வருகைதந்தனர். அதில் பலர், கறுப்புச்சட்டை அணிந்து வந்தனர். கட்சி ரீதியான 65 மாவட்டங்களிலிருந்து தலா 3 பேர் வருகைதந்துள்ளனர். அழகிரிக்கு ஆதரவாக நிர்வாகிகள் யாரும் இல்லாததால், அழகிரியின் கருத்து எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது என்றே கூறப்படுகிறது. செயற்குழுக் கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில், பெரியார், அண்ணா, கருணாநிதி படங்களை அடுத்து மு.க.ஸ்டாலின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/133923-dmk-executive-committee-meets-going.html

  • தொடங்கியவர்

மு.க.ஸ்டாலினைத் தலைவர் கருணாநிதியாகத்தான் பார்க்கிறோம்..! செயற்குழு கூட்டத்தில் ஜெ.அன்பழகன் #liveupdates

 

இரங்கல் தீர்மானத்துக்கு பிறகு பேசிய ஜெ.அன்பழகன், 'தற்போதைய சூழலில் தி.மு.கவினர் கட்டுக்கோப்புடன் இருக்கவேண்டும். இந்திய அரசியலில் அவர், அனைவருக்கும் கலங்கரை விளக்கமாக உள்ளார். 13 முறை, வெற்றி பெற்ற கருணாநிதி, 14-வது முறையாக மெரினாவுக்காக போட்டிபோட்டு வெற்றிபெற்றார்.

கருணாநிதிக்கு யாரெல்லாம் நமக்கு மெரினாவில் இடமில்லை என்றார்களோ, அவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்ற சூழலை உருவாக்க வேண்டும். செயல் தலைவராக இருந்தாலும், மு.க.ஸ்டாலினைத்  தலைவராகத் தான் பார்க்கிறோம். தலைவர் கருணாநிதியாகத் தான் பார்க்கிறோம்' என்று தெரிவித்தார்.

8b463156-d80a-4ae8-8603-f2d025936c47_114

https://www.vikatan.com/news/tamilnadu/133923-dmk-executive-committee-meets-going.html

  • தொடங்கியவர்

`அந்த உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்'- செயற்குழுவில் அழகிரியை மறைமுகமாகச் சாடிய ஜெ.அன்பழகன்

 
 

`தி.மு.க தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் மூலம் பார்க்கப்போகிறோம்’ என்று ஜெ.அன்பழகன்  நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அன்பழகன்
 

சென்னை  அண்ணா அறிவாலயத்தில் தற்போது,  தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானமாக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்துக்குப் பிறகு பேசிய ஜெ.அன்பழகன்,   `60 ஆண்டு காலம் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக இருந்தவர். 80 ஆண்டுக்காலம் தன்னைப் பொதுவாழ்வில் அர்ப்பணித்துக் கொண்டவர். இந்திய அரசியலின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர். நம்மை தவிக்கவைத்துவிட்டுச் சென்றுவிட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக தலைவர் கருணாநிதியின் குரல் ஒலிக்கவில்லை. ஆனால், கலைஞரின் குரலாக நமது செயல் தலைவர் ஸ்டாலினின் குரல் ஒலித்தது. அதுதான், நாம் அனைவருக்கும் ஆறுதலாக இருந்தது. இப்போது கலைஞர் இல்லாமல் இனி எப்படி வாழப்போகிறோம் என்று தெரியவில்லை. நமக்கு இணை எதிரிகள் ஏராளமானோர் இருக்கும் நிலையில், அதை நாம் எப்படி முறியடிக்கப்போகிறோம்? அறிஞர் அண்ணா கூறியதுபோல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று இருக்க வேண்டும். அதிலும் கட்டுப்பாடு தற்போது மிகவும் அவசியம். நமது செயல் தலைவர் நாம் எப்படி கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று நம்மை வழிநடத்திவருகிறார். 

மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க முடியாது என்று ஆளும் அரசு சொன்னபோது, லட்சக்கணக்கான தொண்டர்கள் உணர்ச்சிப்பெருக்கில் எதுவும் பிரச்னை செய்யாதபடி  செயல் தலைவர் வழிநடத்தினார். அவரின் அணுகுமுறையும் கட்டுப்பாடும் அனைவரையும் ஈர்த்தது. நமது செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைவராக வரப்போகிறவர். தி.மு.க தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் மூலம் பார்க்கப்போகிறோம். நமக்கு எதிராகச் செயல்படும் அந்த உறவை செயல் தலைவர் ஸ்டாலின்  துண்டிக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிப்பவர்களைக் கண்டிக்க வேண்டும்’ என்று பேசி முடித்தார்.

`நமக்கு எதிராகச் செயல்படும் அந்த உறவு’ என்று அழகிரியை மறைமுகமாகத் தாக்கி அன்பழகன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

https://www.vikatan.com/news/tamilnadu/133938-janbazhagan-request-to-mkstalin.html

  • தொடங்கியவர்

முதல்வரின் கையைப் பிடித்து மெரினாவில் இடம் கேட்டு கெஞ்சினேன்: திமுக செயற்குழுவில் ஸ்டாலின் உருக்கம்

 

 
download%204

திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின்

மெரினாவில் கருணாநிதிக்கு அடக்கம் செய்ய இடம் மறுத்து தீர்ப்பு வந்திருந்தால் என்னையும் அவருக்கு அருகில் அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டிருக்கும் என்று  திமுக செயற்குழுவில் ஸ்டாலின் உருக்கமுடன் பேசினார்.

திமுக செயற்குழுவில் குரல் தழுதழுக்க ஸ்டாலின் உருக்கமுடன் பேசியதாவது:

 

“இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என்ற உணர்வோடு இந்த அவசர செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அத்தனைபேரும் நமது அஞ்சலியை செலுத்திய பின்னர், தலைவருடன் நெருங்கிப் பழகியிருந்த இயக்க முன்னோடிகள் உரையாற்றினார்கள்.

பொதுச்செயலாளர் நிறைவுரை ஆற்றவேண்டும் என்று நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. ஆனால், பேராசிரியர் 'நான் பேச இயலாது, அந்த சூழ்நிலையில் நான் இல்லை, தயவு செய்து யாரும் என்னைக் கட்டாயப்படுத்தக்கூடாது' என்று என்னிடத்தில் தெரிவித்தார்.

தலைவர் இல்லாத இந்தக் கூட்டத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. நீங்கள் எல்லாம் தலைவரை இழந்துள்ளீர்கள். நான் தந்தையையும் சேர்த்து இழந்துள்ளேன். தலைவர் தொண்டையில் ஒரு அறுவை சிகிச்சை செய்து பேச முடியாத நிலையில் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருடைய ஆசியுடன் செயல் தலைவர் பொறுப்பேற்று உங்களின் ஒத்துழைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

அந்த அடிப்படையில் மாவட்டந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன். அந்த ஆய்வு நிகழ்ச்சியில் ஒவ்வொரு கூட்டத்திலும் கட்சி நிர்வாகிகளோடு நான் கலந்துரையாடியபோது நான் அவர்களுக்குச் சொல்லி அனுப்பியது, “அனைவரும் ஒற்றுமையாக இருந்து, ஒன்றாகச் செயல்பட்டு வருகின்ற காலகட்டத்தில் திமுகவை வெற்றிபெறச்செய்து அந்த வெற்றியை அவர் காலத்திலேயே அவர் காலடியில் வைப்போம்” என்று சொன்னேன்.

ஈரோட்டில் நடந்த கூட்டத்திலும் விரைவில் திமுக ஆட்சிக்கு வரும். அந்த வெற்றியை அவரது காலடியில் கொண்டு வைப்போம் என்று பேசினேன். ஆனால் அதை நிறைவேற்றிட முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் நான் உள்ளேன்.

தலைவர் உடல் அவரை உருவாக்கிய அண்ணன் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யவேண்டும் என்று நாமெல்லாம் முடிவு செய்தோம். அது நம்முடைய எண்ணமல்ல, தலைவரின் எண்ணம், ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டோம்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிற கட்டம் வந்துவிட்டது. மருத்துவர்கள் எங்களிடம் 'இவ்வளவு நேரம் தான் அவர் உயிர் இருக்கிற சூழ்நிலை இருக்கிறது, இனி காப்பாற்றவே வழி இல்லை, நாங்கள் முடிந்தவரை போராடிக் கொண்டிருக்கிறோம்' என்று தெரிவித்தனர்.

சோகத்தில் கண்ணீர் மல்க நாங்கள் பேசிக்கொண்டிருந்த நேரம், நம்முடைய முன்னோடிகள் தலைவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிட வேண்டுமே என்று யோசித்து பல நண்பர்கள் மூலம் அரசுக்கு சேதியைச் சொல்லி அனுப்புகிறோம். ஆனால், அங்கிருந்து வந்த செய்தி தலைவரின் ஆசையை நிறைவேற்ற முடியாத செய்தியைத்தான் தெரிவித்தது.

அப்போது நமது முன்னோடிகள் நேரடியாக முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைப்போம் அரசு சாதகமான முடிவெடுக்கும் என்று கூறினார்கள். என்னை வரவேண்டாம், தலைவரின் மகன் நீங்கள் என்று முன்னோடிகள் சொன்னார்கள். இல்லையில்லை தலைவரின் விருப்பம் தான் எனது எண்ணம். அதைத்தாண்டி மானம் மரியாதை எல்லாம் அப்புறம் என்றேன்.

பின்னர் முதல்வரைச் சந்தித்துப் பேசினோம். எங்கள் கோரிக்கையைச் சொல்கிறோம், அப்போது முதல்வர் சொல்கிறார், விதிமுறைகள் கொடுக்க வாய்ப்பில்லை. நாங்கள் லீகல் ஒப்பினியன் கேட்டுள்ளோம். அதற்கும் வாய்ப்பில்லை என்றார்.

அப்போது நான் கூறினேன் “என்ன லீகல் ஒப்பீனியன் அரசு நினைப்பதைத்தான் லீகல் ஒப்பீனியனாகக் கூறுவார்கள். நாங்களும் ஆட்சியில் இருந்துள்ளோம்” என்று கூறினேன்.

வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன், முதல்வரின் கையைப் பிடித்துக்கொண்டு நான் “தலைவரின் இறுதி ஆசை அது. எப்படியாவது நிறைவேற்றிக்கொடுங்கள்” என்று கூறினேன். எங்களை விரட்டவேண்டும் என்ற எண்ணத்தில், 'ஆகட்டும் பார்க்கலாம்' என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். அப்போதும் நம்பிக்கையுடன் வந்தோம்.

அதன் பின்னர் 6.10க்கு தலைவர் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்தார் என்ற சோக செய்தி வருகிறது. கண்ணீருடன் உடனடியாக அனைவரும் கூடி கடிதம் எழுதுகிறோம். முறைப்படி கேட்கவேண்டும் என்று கடிதம் எழுதுகிறோம். ஆனால் அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் கோரிக்கையை நிராகரித்து காந்த ிமண்டபத்தில் இடம் கொடுப்பதாகக் கூறுகின்ற அறிவிப்பு வெளியானது.

என்ன செய்யலாம் என்று யோசித்தபோது வழக்கறிஞர் வில்சன் வந்தார். நீதிமன்றத்தில் வழக்கு போடலாம் என்றார். வெல்ல முடியுமா என்று கேட்டேன். நான் நீதிபதியிடம் இரவே பேசுகிறேன் என்றார். நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. கண்ணீரும் கம்பளையுமாக ராஜாஜி மண்டபத்தில் நாங்கள் நிற்கிறோம், தீர்ப்பு சாதகமாக வந்தது.

அதை நாங்கள்கூட அறியவில்லை, கீழே நின்றுகொண்டிருக்கிற லட்சக்கணக்கான தொண்டர்கள் கோஷமிடுகின்றனர். பிறகுதான் எனக்குத் தெரிகிறது. அந்தத் துக்கத்திலும் எங்களுக்கு சிறிது மகிழ்ச்சி அளித்த சம்பவம் அது.

அதற்கு எல்லோரும் என்னைப் பாராட்டினீர்கள். ஆனால் நான் சொல்கிறேன் இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக வழக்கறிஞர் அணி என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை மறுக்கப்பட்டிருந்தால் என்ன நிலைமை, திமுக பல்வேறு சோதனைகளைச் சந்தித்த காலம் உண்டு. கட்சிக் கொடியை சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு நிலைமை வரக்கூடிய நிலையில் தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடந்தது.

விசாரணை தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்தது. அன்று தலைவர் சொன்னார், தீர்ப்பு நமக்கு ஒருவேளை சாதமாக வராமல் போயிருந்தால் அண்ணாவின் அருகில் என்னை நீங்கள் புதைத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் நீங்கள் எல்லாம் எனக்கு மலர்வளையம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று கூறினார்.

ஒருவேளை தீர்ப்பு மாறியிருந்தால் என்னையும் தலைவர் பக்கத்தில் புதைக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அப்படி ஒரு நிலை வரவில்லை. கருணாநிதியின் போராட்டம் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது, ஆக அவர் மறைந்தும் வெற்றிபெற்றார்.

தலைவர் கருணாநிதிக்கு நாமெல்லாம் நம்முடைய அஞ்சலியை செயற்குழு மூலம் தெரிவித்திருந்தாலும், உங்களுக்கு மட்டுமல்ல, திமுக உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் தலைவர் சார்பில் கேட்டுக்கொள்வது இந்த இயக்கத்தைக் காப்போம், தலைவர் கருணாநிதி வழி நின்று இயக்கத்தை காப்போம். அவர் உள்ளத்திலே கொண்டிருந்த அந்த உணர்வுகளைக் காப்பாற்ற உறுதியெடுப்போம்.”

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24687067.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

  • கருத்துக்கள உறவுகள்

எபிஸோட் # 1 

வாரம்தோறும் 
புதன்  வெள்ளி கிழமைகளில் தொடரும்.............

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.