Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”மீனவர்களின் கறுப்பு கொடி போராட்டம்”

Featured Replies

 ”மீனவர்களின் கறுப்பு கொடி போராட்டம்”

 

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதி மீனவர்கள்  தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை கண்டித்து கறுப்பு கொடி போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். போராட்டமானது  ஐனாதிபதி வருகையின் போது கறுப்பு கொடி போராட்டம் நடத்த வடமராட்சி கிழக்கு மக்கள் தீர்மானித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் தொடர்ச்சியாக சட்டத்தை மீறி கடலட்டை பிடித்து வருகின்றனர். 

இது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் தொடர்ந்தும் அமைதியாக இருப்பதுடன் தென்னிலங்கை மீனவர்களுக்கு ஆதரவாக நடந்து வருகிறது.

குறித்த அப் பகுதி மீனவர்களின் சந்திப்பை அடுத்து தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களை கண்டிக்கும் வகையில் போராட்டம் நடாத்துவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எதிர் வரும் 22 ஆம்  திகதி மயிலிட்டி பகுதிக்கு வரும் ஐனாதிபதிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடாத்த தீர்மானிப்போம் என மீனவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/38743

  • தொடங்கியவர்

சட்­ட ­வி­ரோத மீன்­பி­டிக்கு எதி­ரான போராட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளிப்­போம்!!

image_4f29652b89-1.jpg

வடக்கு மாகா­ணத்­தில் எந்­தப் பகு­தி­யி­லும் சட்­ட­வி­ரோத மீன்­பிடி முறைக்கு ஆத­ர­வ­ளிக்க முடி­யாது. அதற்கு எதி­ராகப் போரா­டும் மீன­வர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு முல்­லைத்­தீவு மாவட்ட மீன­வர்­கள் எப்­போ­தும் தயா­ராக இருக்­கின்­ற­னர்.

இவ்­வாறு வடக்கு மாகாண சபை­யின் முல்­லைத்­தீவு மாவட்ட உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெரி­வித்­தார்.

வட­ம­ராட்­சி­யில் இர­வு­வேளை கட­லட்டை பிடித்த மீன­வர்­கள் கடற்­ப­டை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக, அரச தலை­வ­ரின் யாழ்ப்­பா­ணப் பய­ணத்­தின்­போது எதிர்ப்­புப் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­வ­தற்கு மீன­வர்­கள் முடிவு செய்­துள்­ள­னர்.

இது தொடர்­பில் கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
சட்­ட­வி­ரோத மீன்­பிடி முறையை அனு­ம­திக்க முடி­யாது. பக­லில் கட­லட்டை பிடிப்­ப­தற்கு அனு­மதி வழங்­கி­விட்டு, திடீ­ரென இர­க­சி­ய­மாக இர­வில் கட­லட்டை பிடிப்­ப­தற்கு அனு­ம­தித்­துள்­ள­னர். இதனை ஏற்­றுக் கொள்ள முடி­யாது. இந்த நட­வ­டிக்­கைக்கு எதி­ராக வட­ம­ராட்சி மீன­வர்­கள் முன்­னெ­டுக்­கும் போராட்­டத்­துக்கு நாங்­கள் ஆத­ரவு வழங்­கு­வோம் – என்­றார்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் நாயாற்­றுப் பகு­தி­யில் சட்­ட­வி­ரோத மீன்­பிடி முறை­மைக்கு எதிர்ப்­புத் தெரி­வித்த தமிழ் மீன­வர்­க­ளின் வாடி­கள் எரி­யூட்­டப்­பட்­டி­ருந்­தன. இந்த விட­யம் தொடர்­பில் அரச தலை­வர் தனது யாழ்ப்­பா­ணப் பய­ணத்­தின் போது கவ­னம் செலுத்­து­வார் என்று அமைச்­சர் மனோ­க­ணே­சன் கடந்த செவ்­வாய்க் கிழமை தெரி­வித்­தி­ருந்­தார்.

https://newuthayan.com/story/09/சட்­ட-­வி­ரோத-மீன்­பி­டிக்கு-எதி­ரான-போராட்­டத்­துக்கு-ஆத­ர­வ­ளிப்­போம்.html

  • தொடங்கியவர்

வடபகுதி மீனவர்கள் ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புகொடி காட்டுவதில் தவறில்லை- சிவாஜிலிங்கம்

 

 
 

யாழ்.வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை தமிழ்தே சிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும்  மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் கொண்டுள்ளார்கள் என காட்டுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கூறுகையில்  

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் இணைந்தே வடமராட்சி கிழக்கு மீனவர்களின் உரிமைகக்கான போராட்டங்களை மழுங்கடித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது. 

இந்த குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் மட்டுமேயாகும். தென்னிலங்கை மீனவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்கிறோம். என்றவாறான தோற்றப்பாட்டினை வெளிப்படுத்த அவர்கள் நினைப்பதாக நாங்கள் கருதுகிறோம். 

அவர்கள் தமக்கென தனியான நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டே இவ்வாறான கருத்தக்களை கூறுகிறார்கள். 

அவர்கள் எங்கள் மீது அபாண்டமான பொய்களை கூறுவதை காட்டிலும் தென்னிலங்கையில் தமிழ் மீனவர்கள் எந்த அனுமதியும் பெறாமல் வாடி அமைத்து மீன்பிடிக்க அனுமதிக்கவேண்டும் எனகோரி போராட்டம் நடத்த இயலுமா? 

மேலும் நாங்கள் மக்கள் போராட்டங்களை மழுங்கடித்தோம் என்றால் பகிரங்க விவாதத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் அதற்கு தயாரா? 

அதேபோல் வடமராட்சி கிழக்கு மக்கள் போராட்டம் நடத்தும்போது 

அங்கே பல்வேறு அரசியல் கட்சிகள் சார்ந்தவர்கள் வந்திருந்தார்கள். 

குறிப்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி வந்திருந்தது பின்னர் எப்படி எங்கள் மீது மட்டும் பொய்யை கூறலாம்? மேலும் மீனவர் பிரச்சினைகள் குறித்து பார்க்கும்போது 30 வருடங்கள் இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கரையோரப் பிரதேசங்களை சேர்ந்த மக்கள். அவர்களை இந்த அரசாங்கமும் வஞ்சித்துக் கொண்டிருக்கின்றது. 

வடமராட்சி கிழக்கில் பகலில் மட்டும் கடலட்டை பிடிப்பதற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்ட தாக கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தனர். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரவில் கடலட்டை பிடித்துக்

கொண்டிருந்த தென்னிலங்கை மீனவர்களை கைது செய்தபோது இரவிலும் கடலட்டை பிடிக்கலாம் அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. என கூறுகிறார்கள்.

இதேசமயம் முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மக்களுடைய வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

sivaji.jpg

பாதிக்கப்பட்ட மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். இவை குறித்து அரசாங்கம் எந்தவிதமான கரிசனையும் செலுத்தவில்லை. இந்நிலையில் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக அல்லது ஜனாதிபதிக்கு எதிராக சாத்வீக வழியில் 

எதிர்ப்பு போராட்டங்களை அல்லது கறுப்பு கொடி போராட்டங்களை நடத்துவதில் எந்த பிழையும் இல்லை என்றார்.

http://www.virakesari.lk/article/38830

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.