Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் நிறுத்த உடன்படிக்கையின் சட்டரீதியான அந்தஸ்தை அடையாளப்படுத்திக் காட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு

Featured Replies

போர் நிறுத்த உடன்படிக்கையின் சட்டரீதியான அந்தஸ்தை அடையாளப்படுத்திக் காட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு

2002ஆம் ஆண்டில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அன்றைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் வலிதாந்தன்மை தொடர்பில் இருந்த சர்ச்சைக்கு அவ்வுடன் படிக்கையின் பலத்தை ஒப்புக்கொண்ட அடிப்படையில் சமீபத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையின் வலிதாந்தன்மையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களையும் நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த உடன்படிக்கை நிஜமாகவே வலிதானது என்றும், அதன் 5 வருட இருப்புக்குப் பிறகு ஒப்பந்தத்தின் சட்ட அந்தஸ்துக்கும் வலுவூட்டியிருக்கிறது.

ஜே.வி.பி, ஜே.எச்.யூ, சிங்கள தேசிய சங்கம் ஆகியனவே மூன்று மனுக்களை யுத்தநிறுத்த உடன்படிக்கையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்திருந்தன. குறித்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சட்ட அடிப்படை இல்லை என்பதும், முறையான ஒழுங்குமுறை பின்பற்றப்படாததால் சட்டவிரோதமானது என்பது அக்கால கட்டத்தில் ஜனாதிபதியாகவிருந்த சந்திரிகா நாட்டின் ஜனாதிபதி என்ற கோதாவில் செய்துகொண்ட ஒப்பந்தமல்ல என்பதும் மனுதாரர்களின் ஆட்சேபனைகளாக அமைந்திருந்தன. இந்த ஆட்சேபனைகளை மையமாகக்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் செல்லத்தகாததாக்கப்பட வேண்டுமென்றும் மனுதாரர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

சந்திரிகா அம்மையாரின் உத்தேச கடல்கோள் பொதுக்கட்டமைப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள்காட்டி தீர்ப்பு வழங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம் போர்நிறுத்த உடன்படிக்கை வலிதுடைமை குறித்த பொதுக்கட்டமைப்புத் தொடர்பான வழக்கில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியது. விமல் வீரவன்ச மற்றும் ஏனைய 13பேர் எதிர் சட்டமாஅதிபர் மற்றும் மூவர் வழக்கில் உயர் நீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவிக்கையில் கடல்கோள் பொதுக்கட்டமைப்பு ஒன்றை தாபிப்பதற்காக குடியரசின் ஜனாதிபதி புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை மேற்கொள்வதில் சட்டவிரோதம் இல்லையென்று கூறியது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் சார்பில் குறித்த வழக்கின் மூன்றாம் பிரதிவாதியான நிவாரணம், புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சின் செயலாளரால் 20.06.2005 இல் கையெழுத்திடப்பட்டதும் குறித்தவழக்கின் நான்காம் பிரதிவாதியான புலிகளின் பிரதிநிதியும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை நியாயம் காணப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டது.

போர் நிறுத்த உடன்படிக்கையை ரத்துச்செய்ய வேண்டுமென்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மனுதாரர்களின் மற்றுமொரு பிரதான வாதம் என்னவெனில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமொன்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியிலிருக்க பிரதமருக்குக் கைச்சாத்திடும் அதிகாரம் கிடையாதென்பதாகும். பொதுவாக 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு பிரதமமந்திரியின் தீர்மானம் எடுக்கும் தத்துவத்தை பலவீனப்படுத்தி அப்பதவி, வெறும் பெயரளவிலானது என்பதை சகல அதிகாரமிக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைத் தோற்றுவித்ததன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக இன்றும் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் போர் நிறுத்த உடன்படிக்கையை ரத்துச் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தீர்ப்பின்போது அரசாங்கத்தின் சார்பில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதில் பிரதமருக்குள்ள உரிமை ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளமை எதிர்கால பொருள் கோடல் நோக்கங்களுக்கும் வழியேற்படுத்தியுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி உட்பட நாட்டின் பிரதம மந்திரிக்கும் இத்தகைய உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்கான உரிமையுண்டு என தனது தீர்ப்பில் நீதியரசர் ஷ்ரீஸ்கந்தராஜா தெளிவாகக் குறிப்பிட்டார். காவிதாரிகளும், காவியம் பேசுவோரும் போர் நிறுத்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளைப் பூர்த்திசெய்யக்கூடாதென்றும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.