Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமியர் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான தனிமனித கோபம்... 'ஆருத்ரா'! விமர்சனம்

Featured Replies

சிறுமியர் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான தனிமனித கோபம்... 'ஆருத்ரா'! விமர்சனம்

 

Star Cast: பா விஜய், கே பாக்யராஜ், ராஜேந்திரன், எஸ் எ சந்திரசேகரன் Director: பா விஜய்

சென்னை: குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறது ஆருத்ரா திரைப்படம்

 

 

கதை

 

சென்னை வேளச்சேரியில் பழமையான கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார் சிவா (பா.விஜய்). மாமா வில்ஸ் (ஞானசம்பந்தம்), தங்கை பார்வதி (மெகாலி), அவருடைய மகன் என ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இடையிடையே பள்ளிகளுக்கு சென்று, குட் டச் பேட் டச் பற்றி வகுப்பு எடுக்கிறார் சிவா. இவர்களது அப்பார்ட்மென்டிற்கு குடும்பத்துடன் குடிவருகிறார் பிரைவேட் டிடக்டிவ் ஆவுடையப்பன் (கே.பாக்யராஜ்). இதற்கிடையே சில முக்கிய புள்ளிகளை சம்ஹாரம் செய்கிறார் ஒரு நபர். இதனை கண்டுபிடிக்கும் பொறுப்பு பாக்யராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. கொலை செய்யும் நபர் யார், ஏன் இந்த கொலைகளை செய்கிறார், அந்த மர்ம நபரை பாக்யராஜ் கண்டுபிடித்தாரா என்பதே மீதிக்கதை.

Aaruthra movie review

 

கவிஞர், பாடலாசிரியர், நடிகன் என தனது அடையாளங்களை வளர்த்து வரும் பா.விஜய்யின் இயக்குனர் அவதாரம் தான் ஆருத்ரா. இந்த படத்தை தயாரித்திருப்பதும் அவரே. முதல் படத்தை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரானதாக எடுத்துள்ள பா.விஜய்க்கு பாராட்டுக்கள்.

 

பாடலாசிரியராக உச்சந்தொட்ட பா.விஜய்க்கு, நடிகனாக, இயக்குனராக மேலே உயர இன்னும் நிறைய படிகள் ஏற வேண்டி இருக்கின்றன. படத்தின் கதைக்கரு இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமானது தான். ஆனால் அதை சொல்லியிருக்கும் விதம் தான் உறுத்தலாக இருக்கிறது.

 

அந்நியன் கருடபுராணம் ரேஞ்சுக்கு, ஆகாயவதம், ஜலசமாதி, அக்னிசாபம், காற்று சம்ஹாரம், நில சதுக்கம் என ஒவ்வொரு சம்ஹாரத்துக்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறார். ஆனால் அவை அனைத்தும் படு கமர்சியலாக எடுக்கப்பட்டு இருப்பதால், உணர்வுகளை கடத்த தவறிவிடுகின்றன.

 

முதல் பாதி முழுவதுமே படம் ஏனோ தானோவென பயணிக்கிறது. சுமி மாமி, மொட்டை ராஜேந்திரன், பாக்யராஜ் காமெடி எல்லாம் 'கடுப்பேத்துறாங்க மை லார்டு' சொல்ல வைக்குது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்குகின்றன. அதே நேரத்தில், பாலியல் தொடர்பான காட்சிகளை இவ்வளவு டீடெய்லாக காட்டியிருக்க வேண்டாம் பா.விஜய். இது எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும் ஆபத்தும் இருக்கிறது.

 

நீண்ட நாட்கள் கழித்து விக்னேஷை திரையில் பார்க்கிறோம். எதிர்மறையான கேரக்டராக இருந்தாலும், நேர்த்தியாக செய்திருக்கிறார். வெல்கம்பேக் விக்னேஷ். மெகாலி, யுவா, ஞானசம்பந்தம், எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், சன்ஜனா சிங், தக்சிதா உள்பட மற்ற நடிகர்களும் அவரவர் ரோலை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒரு படத்துக்கு திரைக்கதை மிக முக்கியம். அதில் கவனம் செலுத்த தவறியிருக்கிறார் இயக்குனர் பா.விஜய். எளிதாக யூகிக்கக்கூடிய வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், திரில்லிங், சஸ்பென்ஸ் எல்லாம் முன்கூட்டியே உடைந்துவிடுகிறது. அதேநேரத்தில், ஸ்தபதி தொடர்பான காட்சிகள் நல்ல டீலெய்லாக இருக்கிறது.

 

வித்யாசாகரின் இசையில் 'புலி ஒன்னு வேட்டைக்கு போகுது' பாடல் காதில் ரீங்காரமிடுகிறது. 'செல்லம்மா செல்லம்' பாட்டு மனதுக்கு இதமளிக்கிறது. பின்னணி இசை தான் பொருந்தாமல் துறுத்துகிறது. சஞ்சய்லோக்நாத்தின் ஒளிப்பதிவும், ஷான் லோகேஷின் எடிட்டிங்கும் தன்னால் முயன்ற வரை படத்தை தரம் உயர்த்த போராடியிருக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகளை தட்டிக்கேட்ட விதத்தில் ஓங்கி ஒலிக்கிறது 'ஆருத்ரா'வின் குரல்.

Read more at: https://tamil.filmibeat.com/reviews/aaruthra-movie-review-055458.html

  • தொடங்கியவர்

`எதைப் பேசணுமோ, அதை அப்படிக் காட்டியிருக்கணுமா பா.விஜய்?’ - `ஆருத்ரா’ விமர்சனம்

 

பா.விஜய் இயக்கி நடித்திருக்கும் 'ஆருத்ரா' படம் பற்றிய விமர்சனம்.

`எதைப் பேசணுமோ, அதை அப்படிக் காட்டியிருக்கணுமா பா.விஜய்?’ - `ஆருத்ரா’ விமர்சனம்
 

மிழ் சினிமாவில் இது த்ரில்லர் சீசன் போல! 'எப்பய்யா சஸ்பென்ஸை உடைப்பீங்க?' என நகம் கடிக்க வைக்கும் த்ரில்லர்கள் ஒரு ரகம். 'எப்பய்யா எண்ட் கார்ட் போடுவீங்க?' எனச் சலிக்கவைக்கும் த்ரில்லர்கள் இன்னொரு ரகம். பா.விஜய் எழுதி இயக்கி நடித்திருக்கும் ஆருத்ரா இந்த இரண்டாவது ரகம்.

பா.விஜய்

தமிழக அமைச்சரின் தம்பி ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். அவர் நெஞ்சில் தூய தமிழில் ஒரு பட்டயம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் போலீஸார் விசாரிக்கும்போதே அடுத்தடுத்து கடத்தல்களும் கொலைகளும் நடக்கின்றன. நகரமே நடுங்கும் இந்த சீரியல் கில்லர் வழக்கில் தனியார் துப்பறிவாளரான பாக்யராஜின் உதவியை நாடுகிறது காவல்துறை. இந்த பரபரப்புகள் எதுவுமே பாதிக்காத வகையில் குடும்பத்தோடு பாக்யராஜின் மேல்வீட்டில் வசித்து வருகிறார் பா.விஜய். இருவரின் பாதைகளும் எங்கே குறுக்கிடுகின்றன? கொலைகளைச் செய்வது யார் என்பதுதான் ஆருத்ரா.

 

 

பா.விஜய் இயக்கி நடிக்கும் இரண்டாவது படம் இது. முந்தைய படத்தைவிட இதில் நடிப்பில் தேறியிருந்தாலும் சென்டிமென்ட் காட்சிகளில் இன்னும் தடுமாறவே செய்கிறார். தக்சிதா, மெகாலி என இரண்டு ஹீரோயின்கள். நடிப்பதற்குக் கதையில் எதுவுமில்லை. ஆங்காங்கே வந்து பொருத்தமில்லாத உதட்டசைவில் பேசிச் செல்கிறார்கள். விக்னேஷ், ஜோ மல்லூரி, ஞான சம்பந்தம், பாக்யராஜ்.. ஏன் ஒரே ஒரு காட்சியில் வரும் அஜய்ரத்னம் கூட மிகைப்படுத்தப்பட்ட நடிப்பையே வழங்குகிறார்கள். படத்தில் கொஞ்சம் இயல்பாய் இருப்பது எஸ்.ஏ.சந்திரசேகர் ஒருவர்தான்.

 

 

தமிழ் சினிமாவின் காமெடி காட்சிகளில் (இல்லை அப்படி இயக்குநர்கள் நினைக்கும் காட்சிகளில்) இனி மொட்டை ராஜேந்திரன் வரக்கூடாது என வேண்டிக்கொண்டுதான் தியேட்டர் செல்லவேண்டும் போல. ஒரே மேனரிசம், ஒரே மாதிரியான டயலாக்குகள் என ரொம்பவே போரடிக்கிறார். குழந்தை நட்சத்திரம் யுவாவின் ஒருசில காட்சிகள் ஆறுதல்.

பாக்யராஜ்

வித்யாசாகர் என்ற பெயரை டைட்டில்கார்டில் பார்த்தாலே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஏனோ இந்தப் படத்தில் வித்யாசாகருக்கே பெரிய உற்சாகமில்லை போல! பாட்டும் பின்னணி இசையும் சுத்தமாக ஒட்டவில்லை. இங்கே அங்கே என அலைபாயும் திரைக்கதையை இருப்பதை வைத்து ஒட்டியிருக்கிறார் எடிட்டர் ஷான் லோகேஷ். 90களின் கலர் பேக்ட்ராப்பை கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சஞ்சய்லோக்நாத்.

சிவபக்தனான சீரியல் கில்லர் ஒவ்வொரு கொலையையும் ஒவ்வொரு பஞ்ச பூதத்திற்குக் காணிக்கையாக்குகிறான் என்ற ஒன்லைன் கொஞ்சம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், படமாக்கியவிதத்தில் அநியாய நாடகத்தன்மை. அதுவும் 90 சதவீத காட்சிகளில் க்ரீன் மேட் பயன்படுத்தியிருப்பதால் ஒருகாட்சி கூட இயல்பாகவே இல்லை. இதுபோக எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கி லிஸ்ட் போடுமளவிற்கு லாஜிக் ஓட்டைகள் வேறு.

சமூகப் பிரச்னைகளைப் பற்றி தன் படங்களில் பேச நினைக்கும் பா.விஜய் இதில் சிறார் பாலியல் வன்கொடுமை பற்றி பேச முயன்றிருக்கிறார். ஆனால், அதைப் படமாக்கிய விதம் முகம் சுளிக்கவைக்கிறது. அவ்வளவு டீட்டெயிலாக காண்பித்தே ஆகவேண்டுமா என்ன? போக, பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமை பற்றி மெசேஜ் சொல்லும் அதே வேளையில் இன்னொருபக்கம் போலீஸ் அதிகாரி, அப்பார்ட்மென்ட் மாமி, அவரின் தங்கை என எல்லாரையும் உடல்சார்ந்து அணுகும் காட்சிகள் எக்கச்....சக்கம். ஏன் சாரே இப்படி? அதிலும் 'பின்னழகுப் பித்தர்' எனப் பெருமையாக அடைமொழி வேறு கொடுத்துக்கொள்கிறார்கள். கஷ்டம்!

 

 

ஆருத்ரா

தமிழ் சினிமாவில் தன் பிரதான அடையாளம் தவிர்த்து பல அவதாரங்களில் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள் பலர். ஆனால், கவிஞர் பா.விஜய்யிடம் மிகப் பரிதாபமாக தோற்றுப் போகிறார் இயக்குநர் பா.விஜய்! 

மெசேஜ் சொல்ல நினைத்து கதையை கோட்டைவிட்டு இஷ்டத்துக்கு பயணித்து தடுமாறி நிற்கும் தமிழ்ப்படங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்திருக்கிறது.    

https://cinema.vikatan.com/movie-review/135681-aaruthra-tamil-movie-review.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.