Jump to content

ஊர­றிந்த வழக்கும் உலகப் பஞ்­சா­யத்தும்....மியன்மார் ரோஹிங்கிய முஸ்­லிம்கள் பற்­றிய தாருஸ்மான் அறிக்கை


Recommended Posts

ஊர­றிந்த வழக்கும் உலகப் பஞ்­சா­யத்தும்

SAMAKALAM010918-PG03-R1Page1Image0002-ff1965659ac85c2160351b9a77c4705adaf512cb.jpg

 

மியன்மார் ரோஹிங்கிய முஸ்­லிம்கள் பற்­றிய தாருஸ்மான் அறிக்கை 

 

ஒரு ஒடுக்­கப்­பட்ட இனக்­கு­ழுமம். அதன் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட அட்­டூ­ழி­யங்கள், அவை பற்­றிய அறிக்கை வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.

மியன்­மாரைச் சேர்ந்த ரோஹிங்கிய முஸ்­லிம்கள். ரக்கைன் மாநி­லத்தில் அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட கொடு­மைகள். இவை பற்றி ஐக்­கிய நாடுகள் சபையின் குழு­வொன்று விசா­ரித்­தது.

இந்­தோ­னே­ஷி­யாவின் முன்னாள் சட்­டமா அதிபர் இலங்கை மக்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மா­னவர். மர்­சுக்கி தாருஸ்மான் தலை­மை­யி­லான குழு­வினர் வரைந்த அறிக்கை. சுருக்­க­மாக சொன்னால், இன்­னொரு தாருஸ்மான் அறிக்கை.

கடந்த ஆகஸ்ட் மாதம் ரக்கைன் மாநி­லத்தில் தீவிர வன்­மு­றைகள் நிகழ்ந்­தன. கூட்டுப் படு­கொ­லைகள், பாலியல் வன்­பு­ணர்­வுகள், சூறை­யா­டல்கள். இவற்றில் இருந்து உயிர் தப்­பு­வ­தற்­காக இலட்­சக்­க­ணக்­கான மக்கள் புலம்­பெ­யர்ந்­தார்கள்.

ரோஹிங்கிய முஸ்­லிம்கள் மீதான வன்­மு­றையை ஐக்­கிய நாடுகள் சபை ஏற்­கெ­னவே இனச்­சுத்­தி­க­ரிப்­பாக வர்­ணித்­தது. இன்று தாருஸ்மான் அறிக்கை இன அழி­வாக விப­ரித்­துள்­ளது. இந்தக் குற்­றங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்டும் என்­கி­றது.

தாருஸ்மான் குழு­வி­ன­ருக்கு மியன்மார் செல்ல அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இவர்கள் செய்­மதிப் படங்கள், புகைப்­ப­டங்கள், வீடி­யோக்கள் போன்­ற­வற்றை பரி­சீ­லித்­தனர். சுமார் 875 பேருடன் ஆழ­மான நேர்­கா­ணல்­களை நடத்­தி­னார்கள்.

இவற்றின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை, கடந்த திங்­கட் கி­ழமை வெளி­யா­னது. இந்த அறிக்கை ரக்கைன் மாநி­லத்தில் நிகழ்ந்­த­வற்றை தெளி­வாக படம் பிடித்துக் காட்­டு­கி­றது. வன்­மு­றை­களின் ஆணி­வேர்­களை ஆராய்­கி­றது.

இந்த வன்­மு­றையால் எத்­தனை பேர் இறந்­தார்கள் என்­பது யாருக்கும் தெரி­யாது. எனினும், குறைந்­த­பட்சம் 10,000 மர­ணங்­க­ளா­வது நிகழ்ந்­தி­ருக்­கக்­கூடும் என ஐ.நா.வின் தகவல் அறியும் குழு கூறு­கி­றது.

ரோஹிங்கிய மக்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­கொ­டு­மை­களின் தன்­மையை அறிக்கை விப­ரிக்­கி­றது. இவை சர்­வ­தேச சட்­டங்­களின் கீழ் மிகவும் தீவி­ர­மான குற்­றச்­சாட்­டுக்­க­ளாக இருக்­கக்­கூடும் எனவும் குறிப்­பி­டு­கி­றது.

இவை புதி­யவை அல்ல. ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அந்­தோ­னியோ குத்­தரெஸ் அவர்­களும் விப­ரித்­தவை. இம்­முறை புதிய விடயம் உண்­டெனின், அது ஆறு இரா­ணுவ மேல­தி­கா­ரி­களைப் பெய­ரிட்­டமை தான்.

மியன்­மாரின் இரா­ணுவத் தள­பதி அடங்­க­லாக ஆறு பேர். இனப்­ப­டு­கொலை, மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்­றங்கள், போர்க் குற்­றங்கள் பற்றி விசா­ரிப்­ப­தாயின் இவர்­க­ளையே முதன்­மைப்­ப­டுத்த வேண்டும் என தாருஸ்மான் அறிக்கை கூறு­கி­றது.

மியன்­மாரின் நிகழ்­நிலைத் தலைவி ஆங் சான் சூகி அம்­மையார் உள்­ளிட்ட அர­சியல் தலை­வர்கள் பற்­றியும் அறிக்கை பேசு­கி­றது. ஆட்சி நிர்­வாகக் கட்­ட­மைப்பு வாளா­தி­ருந்து வன்­மு­றை­க­ளுக்கு துணைபோன விதத்தை விப­ரிக்­கி­றது.

ஆன் சான் சூகி உள்­ளிட்ட தலை­வர்கள் இனப்­ப­டு­கொ­லையில் நேர­டி­யாக பங்­கேற்­க­வில்லை. ஆனால், வன்­மு­றை­களின் முன்­னி­லையில் மௌனம் சாதித்து, குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரித்­தார்கள்.

அத்­துடன், ஆட்­சி­யா­ளர்­களை ஆதா­ரங்­களை அழித்து, சர்­வ­தேச சமூ­கத்தின் விசா­ர­ணை­க­ளுக்கு இட­ம­ளிக்க மறுத்­தார்கள் எனவும் தாருஸ்மான் அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த அறிக்கை சொல்­வதை சாராம்­சப்­ப­டுத்­தலாம். ரக்கைன் மாநி­லத்தில் ரோஹிங்கியர்­களின் படு­கொலை இன-­அ­ழிப்­பிற்கு சம­மா­னது. மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்­றங்கள் தொடர்பில் இரா­ணுவ அதி­கா­ரிகள் விசா­ரிக்­கப்­பட வேண்டும்.

இந்த அறிக்­கையின் பரிந்­து­ரைகள் பார­தூ­ர­மா­னவை. இவை ஐ.நா. பாது­காப்பு சபையின் கவ­னத்தைப் பெறும். அறிக்­கையில் கூறப்­படும் விட­யங்கள் ஒட்­டு­மொத்த உல­கத்­திற்கும் உரத்துக் கூறப்­படும். அது மாத்­தி­ரமே.

ஏனெனில், தாருஸ்மான் குழு பரிந்துரைக்க மாத்­தி­ரமே முடியும். இவர் குற்­ற­வாளி என்று தீர்­மா­னிக்கும் அதி­காரம் குழு­விற்குக் கிடை­யாது. குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்கும் அதி­கா­ரமும் அதற்கு இல்லை.

இந்த நிலையில், ரோஹிங்கிய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கொடுமை புரிந்­த­வர்கள் முறை­யாக விசா­ரிக்­கப்­ப­டு­வார்­களா, அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை கிடைக்­குமா என்­பது முக்­கி­ய­மான கேள்வி. அதுவே முதன்­மை­யா­னதும் கூட.

இன-­அ­ழிவு, மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்றம் போன்­ற­வற்றை விசா­ரிப்­ப­தற்கு பொருத்­த­மான அமைப்­பென்றால், அது ஐ.நா. கட்­ட­மைப்­பிற்குள் வரும் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றமே.

அது தவிர, ஐ.நா.வின் தீர்ப்­பா­யங்­களை ஸ்தாபிக்­கலாம். யுகொஸ்­லா­விய நெருக்­கடி, ருவாண்­டாவின் முரண்­பாடு போன்­ற­வற்றில் நிகழ்ந்த அட்­டூ­ழி­யங்­களை விசா­ரிப்­ப­தற்­காக அத்­த­கைய தீர்ப்­பா­யங்கள் ஸ்தாபிக்­கப்­பட்­டன.

ஆனால், ரோஹிங்கிய அக­திகள் விவ­கா­ரத்தை அவ்­விரு நீதி­மன்­றங்­க­ளிலும் பாரப்­ப­டுத்­து­வது அர­சியல் நடை­மு­றை­யாகும். இந்த அர­சியல் ஐ.நா. பாது­காப்பு சபையை சார்ந்­த­தாகக் காணப்­ப­டு­கி­றது.

பாது­காப்பு சபையில் வீற்றோ அதி­காரம் படைத்த நாடுகள் நினைக்கும் பட்­சத்தில், சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திடம் ரோஹிங்கிய முஸ்­லிம்கள் விவ­காரம் பாரப்­ப­டுத்­தப்­ப­டு­வதைத் தடுக்­கலாம்.

சீனாவை எடுத்துக் கொள்வோம். மியன்மார் தண்­டிக்­கப்­ப­டு­வதை சீனா விரும்­ப­மாட்­டாது. ஏனெனில், மியன்­மா­ருடன் கூடு­த­லான வர்த்­தக, பொரு­ளா­தார உற­வு­களைப் பேணும் நாடாக சீனா திகழ்­கி­றது.

அது தவி­ரவும், தமக்கு அரு­கி­லுள்ள நாடுகள் மீது வெளித்­த­லை­யீ­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதை சீனா அனு­ம­திப்­ப­தில்லை. குறிப்­பாக, மேற்­கு­லகத் தலை­யீ­டுகள் என்றால் சீனா­விற்கு அலர்ஜி.

பூகோள அர­சி­யலை ஆராய்ந்தால், மியன்மார் விவ­காரம் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் பாரப்­ப­டுத்­தப்­ப­டு­வதை ரஷ்­யாவும் விரும்பப் போவ­தில்லை. அந்­நாடும் வீற்றோ அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­தலாம்.

அமெ­ரிக்­காவை எடுத்துக் கொள்வோம். மியன்மார் இரா­ணுவ மேல­தி­கா­ரிகள் சிலர் மீது சமீ­பத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒரு­த­லைப்­பட்­ச­மான பொரு­ளா­தாரத் தடை­களை விதித்தார். இவர்­களில் தாருஸ்மான் அறிக்­கையில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட­வரும் உள்ளார்.

ஆனால், டொனால்ட் ட்ரம்பைப் பொறுத்­த­வ­ரையில், சிரியா, ஆப்­கா­னிஸ்தான், யெமன் போன்ற நாடுகள் அள­விற்கு மியன்மார் முக்­கி­ய­மா­னது அல்ல. அங்கு 'ஜன­நா­ய­கத்தை மேம்­ப­டுத்­து­வதில்' ட்ரம்­பிற்கு அவ்­வ­ள­வாக ஆர்வம் இல்லை.

அது தவிர, சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் அமெ­ரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் சேரவும் இல்லை. இந்த நீதி­மன்­றத்தை ஸ்தாபிக்க வழி­வ­குத்த ரோமன் சட்­டத்தில் அமெ­ரிக்­காவும், ரஷ்­யாவும் கைச்­சாத்­திட்­டன. ஆனால் அங்­கீ­க­ரிக்­க­வில்லை.

இந்த நீதி­மன்­றத்தை ஸ்தாபித்த நாடு­களுள் ஒன்­றாக பிரிட்டன் திகழ்­கி­றது. முன்னர் பர்மா என்­ற­ழைக்­கப்­பட்ட மியன்­மாரின் கால­னித்­துவ ஆட்­சி­யா­ள­ராக இருந்த பிரிட்டன், பாது­காப்புச் சபையில் மியன்­மாரை வழி­ந­டத்­து­கி­றது.

இது­வரை காலமும் மியன்­மாரை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்தும் முயற்­சி­களை பிரிட்டன் ஆட்­சே­பித்து வந்­தது. இந்தப் பிரச்­ச­ினையில் உலக நாடுகள் மத்­தியில் கருத்­தொற்­றுமை இல்­லை­யென பிரிட்டன் கூறி­யது.

இந்த வல்­ல­ரசு நாடு­களின் கபட நாடகம் புதி­யதல்ல. தமக்கு நன்மை தரு­மாயின் மனித உரி­மைகள், போர்க்­குற்­றங்கள் பற்றி பேசுவதும், மாறி நடந்தால் மௌனம் காப்பதும் வல்லரசுகள் காலங்காலமாக அனுசரித்த தந்திரம்.

மியன்மாரின் ரோஹிங்கிய அகதி நெருக்கடி பற்றிய தாருஸ்மான் அறிக்கையை ஒருபுறம் தள்ளி வைப்போம். அந்த முஸ்லிம்கள் மீது பாரதூரமான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டதை நிராகரிக்க முடியாது.

இன்று குற்றமிழைக்கப்பட்டிருப்பதை அறிந்தும், குற்றமிழைத்தவர்கள் இவர்களென உறுதியாகத் தெரிந்தும், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஊடாக முறையாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியாமல் இருக்கிறது.

மியன்மாரின் ரோஹிங்கிய அகதிகள் என்ற பிரச்சினை, மனிதகுல நாகரிகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் விடயம் மாத்திரமல்ல, சர்வதேச சட்டத்தின் ஆற்றலைப் பரிசோதிக்கும் பலப்பரீட்சையாகவும் இருக்கிறது என்பதே உண்மை

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-02#page-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.