Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி யாழ்ப்பாணத்தில் எரிப்பு

Featured Replies

as.jpg

வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் கொடும்பாவி இரண்டாவது முறையாகவும் யாழ். முஸ்லிம் மக்களினால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.

இன்று மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹீதீன் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய முஸ்லிம்கள் குறித்த மாகாண சபை உறுப்பினர் அண்மைக்காலமாக யாழ் முஸ்லிம் மக்கள் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது இப்போராட்டத்தில் பங்கு பற்றிய மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பின ரின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைவதை இட்டு மீண்டும் தனக்கான அரசியலை மேற்கொள்ள வட பகுதி முஸ்லிம் மக்கள் குறித்து முன்னுக்குப் பின்னாக முரணான கருத்துக்களை நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் பரப்பி வருவதாக குற்றம் சாட்டினர்.

எனவே மாகாண சபை உறுப்பினர் இவ்விடயங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.

as1.jpg

http://thinakkural.lk/article/18199

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கியெழுந்த யாழ் முஸ்லிம்கள்: வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மினின் உருவப்பொம்மை எரிப்பு!

September 7, 2018
41277105_308699383240050_245558192868268

வடமாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் உருவப் பொம்மையை எரித்து யாழ்ப்பாண முஸ்லிம்கள் சற்று முன் போராட்டத்தில ஈடுபட்டனர். அத்துடன் அஸ்மினிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

அண்மையில் வடமாகாணசபை அமர்வின்போது, விடுதலைப்புலிகள் தொடர்பாக அஸ்மின் பேசி பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தார். விடுதலைப்புலிகள் மக்களாட்சி தத்துவத்திற்கு முரணாக நடந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

அப்படியான நடவடிக்கைகளில் சில, காலத்தின் தேவையானவை என்றும் குறிப்பிட்டார். முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டது இனச்சுத்திகரிப்பு என அஸ்மின் குறிப்பிட்டு வரும் நிலையில், காலத்தின் தேவையான நடவடிக்கைகளில் ஒன்றாக முஸ்லிம்களின் வெளியேற்றமும் அமையுமென்ற கருத்து பரவலாக எழுந்திருந்தது. வலம்புரி பத்திரிகையும் அதை செய்தியாக்கியிருந்தது.

இந்த நிலையில் வலம்புரி பத்திரிகைக்கு எதிராக அஸ்மினின் உறவினர்கள், நண்பர்கள் என பத்து பேரளவில் அண்மையில் வலம்புரி பத்திரிகையின் பிரதிகளை தீயிட்டிருந்தனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் ஜூம்மா பள்ளிவாசலின் தொழுகையின் பின்னர் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பெருமளவில் திரண்டு அஸ்மினின் கருத்துக்களை கண்டித்து போராட்டம் செய்தனர். அவருக்கு எதிரான பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.

போராட்டத்தில் அஸ்மினின் உருவப்பொம்மையும் எரிக்கப்பட்டது.

41072501_251912728816475_29710763546587941116996_477666469375340_42975580761075241155373_308699529906702_79580883852837541158210_682468782153013_88040334546656241223402_2187552931518627_4296873243572141277105_308699383240050_24555819286826841283166_1109380729227562_1751546268137541310716_306447503465618_559068020674763

 

http://www.pagetamil.com/15545/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.