Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாயில் வந்ததை பேசும் கஜேந்திரகுமாரை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் – ரெலோ

Featured Replies

வாயில் வந்ததை பேசும் கஜேந்திரகுமாரை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் – ரெலோ

 

DSC01850-720x450.jpg

வாயில் வந்ததை பேசும் கஜேந்திரகுமாரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் டெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி ஆரம்பிக்கையில் எங்களை உள்வாங்குவது போன்ற கருத்துப்பட கூறியிருந்தால், அதனை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா என தெரியவில்லை.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்களால் நன்கு அறியப்பட்டவர். நேற்றுத்தான் அரசியலிற்கு வந்தவர். அவர் விரும்பினால் கட்சியை தொடங்கலாம் அது அவருடைய உரிமை, ஆனால் அவருடன் நாங்கள் இணைந்து கொள்வோம் என்று எதிர்பார்த்தால் அது என்னைப்பொறுத்த மட்டிலே சிறு பிள்ளைத்தனமானது.

ஏனெனில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டுடன் கூட்டமைப்பிற்குள் பயணிக்கின்றோம். இதே நேரத்தில் ஒரு விடயத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சொல்லக்கடமைப்பட்டிருக்கின்றேன். உங்களை நம்பித்தான் முதலமைச்சராக முன்னிறுத்தினோம். எங்கள் மக்களும் அபரி மிதமான ஆதரவை தந்ததுடன் உங்கள் மீது மதிப்பையும் வைத்துள்ளனர்.

ஆனால் அந்த மதிப்பை நீங்கள் தவறாக எடைபோட்டுவிடக் கூடாது. யார் உங்களிற்கு என்ன சொன்னாலும், எந்த போதனையை கொடுத்தாலும், சரியாக அறிவுபூர்வமாக சிந்தித்து முடிவெடுத்து எமது இனத்திற்கு எது நல்லது என்பதை தீர்மானித்து கூட்டமைப்பின் ஒற்றுமை எந்தவித செயற்பாடும் பாதிக்காத வகையில் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது மக்களுடைய எதிர்பார்ப்பாகும்.

கூட்டமைப்பின் நிலைப்பாட்டை எந்தவொரு தனி மனிதனும் எடுக்கலாம் என்று எவருக்கும் அனுமதி கொடுத்ததாகவும் இல்லை, கொடுக்கப்பபோவதாகவும் இல்லை. கூட்டமைப்பிலே மூன்று கட்சிகள் பிரதான அங்கத்துவ கட்சிகளாக இருக்கின்றதுடன் அக்கட்சிகளில் பல்வேறு தலைவர்கள் இருக்கின்றார்கள்.

சில சந்தர்ப்பங்களில் சில கருத்துக்கள் வெளிவரத்தான் செய்கின்றது. கருத்துரிமை என்பது இருக்கின்றது. ஆனால் கருத்து என்பது ஒன்று, முடிவு என்பது வேறொன்று. வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் இணைந்திருக்கின்ற கூட்டமைப்பு அல்லது சார்ந்திருக்கின்ற கூட்டமைப்பு உரிய நேரத்தில் முடிவெடுக்கும்.

தற்போது இருப்பது ஒற்றையாட்சி அரசியல் முறையாகும். ஒற்றையாட்சி அரசியல் அமைப்பிலான நாடாளுமன்றத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர் என்ற பொறுப்புக்களுக்கு அடுத்த படியாக குழுக்களின் பிரதி தலைவர் என்ற பதவியை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏற்றுக்கொண்டதன் மூலமாக ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டதாக கஜேந்திரகுமார் சொல்லியிருக்கின்றார்.

அவரிடம் ஒன்றை கேட்கின்றேன் நீங்களும் இரு தடவை நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தீர்கள் அப்படியானால் நீங்களும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டுதான் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தீர்கள். சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை சட்டம் படித்த கஜேந்திரகுமார் எழுப்பக்கூடாது.

கஜேந்திரகுமார் அரசியலிலே நீண்டகாலம் பயணிக்க வேண்டியிருக்கின்றது, அத்துடன் நல்லபடியாக பயணிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பமாக இருக்கின்றது. அதற்காக வாயில் வந்ததெல்லாவற்றையும் கஜேந்திரகுமார் பேசுகின்றார் என்றால் அவரை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/வாயில்-வந்ததை-பேசும்-கஜே/

  • தொடங்கியவர்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று அரசியலுக்குள் வந்தவர் ; சிறிகாந்தா

 

 
 

முதலமைச்சர் நேற்று அரசியலுக்குள் வந்தவர். அவருடன் நாம் இணைவோம் என எதிர்பார்த்தால் அது சிறுபிள்ளைத்தனமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும், பேச்சாளருமான சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

srikanndha.jpg

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்றது. 

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பனர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், சிறிகாந்தா உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். 

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

முதலமைச்சருடைய கட்சியில் நாம் இணைவோம் என தெரிவித்திருந்தால் அதையிட்டு நாம் அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எங்களால் நன்கு அறியப்பட்டவர். 

நேற்று அரசியலுக்குள் வந்தவர். அவர் விரும்பினால் கட்சி ஆரம்பிக்கலாம். அது அவருடைய உரிமை. ஆனால் நாங்கள் அவருடன் இணைந்து கொள்கிறோம். இணைந்து கொள்வோம் என அவர் எதிர்பார்த்தால் அது என்னைப் பொறுத்தவரை சிறுபிள்ளைத்தனமானது. 

ஏனெனில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டில் நின்று கொண்டிருக்கின்றோம். நாங்கள் கூட்டமைப்புக்குள்ளே பயணிக்கின்றோம். ஆனால் ஒரு விடயத்தை விக்கினேஸ்வரனுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். உங்களை நம்பித் தான் முதலமைச்சராக முன்நிறுத்தினோம். 

எமது மக்களும் அபரிவிதமான ஆதரவைத் தந்தார்கள். எமது மக்கள் உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த மதிப்பை நீங்கள் தவறாக எடை போட்டு விடக் கூடாது. அவர்கள் எதிர்பார்ப்புக்களுடன் கூடிய ஒரு மதிப்பை வைத்திருக்கிறார்கள். அதாவது அவர்கள் கூட்டமைப்புடன் நீங்கள் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். 

யார் உங்களுக்கு எதைச் சொன்னாலும், எந்தப் போதனையைக் கொடுத்தலும் நீங்கள் சரியாக சிந்தித்து அறிவுபுர்வமாக முடிவெடுத்து எமது இனத்திற்கு எது நல்லது என்று தீர்மானித்து கூட்டமைப்பினுடைய ஒற்றுமையை உங்களுடைய எந்தவொரு செயற்பாடும் பாதிக்காத விதத்திலே நீங்கள் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பது தான் எமது மக்களுடைய விருப்பம் எனத் தெரிவித்தார். 

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரனது கருத்துக்கள் கூட்டமைப்புக்குள் உடைவை ஏற்படுத்துகின்றதா என கேள்வி எழுப்பிய போது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகந்தா தெரிவித்ததாவது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உடைவை ஏற்படுத்துவதாக சுமந்திரனை நாம் கருதவில்லை. அப்படி நாம் கருதி இருந்தால் இன்றைக்கு நான் தம்பி சுமந்திரனை ஒரு பிடி பிடித்திருப்பேன். ஆனால் நாங்கள் அப்படி நினைக்கவில்லை. 

அவருடைய கருத்துக்கள் ஆத்சேவகரமாக இருக்கிற பொழுது நாங்கள் எங்கள் கருத்துக்களை சொல்ல கடமைப்பட்டுள்ளோம். குறிப்பாக ரெலோ தலைமை, புளொட் தலைமைகளைப் பற்றி அவர் கூறிய கருத்துக்களையிட்டு நாம் எங்களுடைய கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்திருக்கிறோம். 

ஆனால் அதற்காக அவர் வெளியிட்ட கருத்துக்கள் உள்நோக்கம் கொண்டவை என்று நாங்கள் கருதவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான சிறிகாந்தா மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/40004

  • தொடங்கியவர்

பேச்சாளர் என்ற ரீதியில் சுமந்திரன் எதையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்; செல்வம் அடைக்கலநாதன்

 

 

பேச்சாளர் என்ற ரீதியில் சுமந்திரன் எதையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

srikanndha.jpg

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்றது. 

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேச்சாளர் என்ற ரீதியில் சுமந்திரன் எதையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். அவர் கூறும் கருத்துக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பான கருத்துக்களாக அமைய வேண்டும். 

அவர் நினைத்த கருத்துக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கருத்துக்களாக சொல்லக் கூடாது.  அதை நாங்கள் அவரிடமும் வலியுறுத்தியிருக்கிறோம். ஆனால் அவருடைய கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாக வருகின்ற போது அதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற கருத்தாக தான் அமைய வேண்டும். 

பேச்சாளர் என்று சொல்லிக் கொண்டு தனிப்பட்ட ரீதியில் அவர் தன்னுடைய கருத்தை சொல்வது நான்றாக இருக்காது என இதன்போது தெரிவித்தார்

http://www.virakesari.lk/article/40009

On 9/8/2018 at 7:39 PM, நவீனன் said:

வாயில் வந்ததை பேசும் கஜேந்திரகுமாரை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் – ரெலோ

நீண்ட காலமாக டெலோ செயற்பட்டது போல காசை வாங்கி கைக்கூலிகளாக, எடுப்பார் கைப்பிள்ளைகளாக செயற்பட வேண்டும் என்று சிறிகாந்தாவும் அடைக்கலநாதனும் எதிர்பார்கிறார்களோ? 

  • கருத்துக்கள உறவுகள்

தனித்து போட்டியிட்ட ரெலோ எப்போதும் வெல்லைவில்லை. அப்போது சுயநலமாக கூட்டமைப்புடன் இணைந்து ( நினைவு கூர்க இப்போதும் எப்போதும் வி.புலிகளால் அமைக்கப்பட்டது தான் கூட்டமைப்பு) வெற்றி பெற்றவர்கள் தான் இந்த சுயநல  ரெலோ  கும்பல். தாதாக்களுக்கு தாதாவாக செயற்பட்டவர் செல்வம் அடைக்கலநாதன் என்பவர் என்பதை வவுனியா மக்கள் கதை கதையாக சொல்வார்கள். இன்று ஏனையோரை விமர்சிக்க ஒரு அரசியல் நேர்மை இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.