Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்குறள் அலசுவோமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில திருக்குறளில் எனக்கும் உடன்பாடும் இல்லை.

அவற்றை தேடி எடுத்துக் கொண்டு வருவன்

அப்படியல்ல கறுப்பியக்கா!

வள்ளுவர் மானுடம் போற்றியவர். அவரது குறளுக்கு பொருள் எழுதிய பரிமேலழகர் போன்றவர்கள்தான் தவறான விளக்கங்கள் கொடுத்து திருக்குறளின் பொருளைக் கெடுத்தனர்.

உங்களுக்கு உடன்படாத குறள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.

இங்கு நான் ஒரு உதாரணம் தருகிறேன்

பெண்ணியவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப் படும்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யனப் பெய்யும் மழை

என்ற குறளுக்கு, பரிமேலழகர் போன்றவர்கள் "தெய்வத்தை வணங்காமல் கணவனை வணங்குபவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்" என்ற கருத்துப்படி பிற்போக்குத் தன்மையுடன் உரை தீட்டியுள்ளனர். ஆனால் அதன் உண்மைப் பொருள் பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் உரை எழுதியதைப்போல் "தொழு என்ற சொல் 'பின்பற்றுதல்' என்றும் 'பெய்யனப் பெய்யும்' மழை என்றால் பெய்த இடத்தில்" என்றும் பொருள்படும் எனவே பெண்ணானவள் மழையைப் போன்றவள். மழை எவ்வாறு பூமியை வளப்படுத்துகிறதோ அவ்வாறு தன் வாழ்க்கைத் துணைவனை வளப்படுத்துபவள் பெண் என்பதே அக்குறளின் பொருள். இங்கே வள்ளுவரும் ஒரு பெண்ணியவாதியாகவே (Feminist) தென்படுகிறார். அடுத்து வள்ளுவர் கூறும் அடக்கம் என்பது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தலைக்கனம் கொள்வது தவறு என்று சொல்கிறதே தவிர பெண்மீதான சமூக ஒடுக்குமுறையை நியாயப் படுத்திக் கூறவில்லை. வள்ளுவர் ஒழுக்கத்தை பெண்களுக்கு மட்டும் வலியுறுத்தவில்லை. "பிறனில் விழையாமை" என்ற அதிகாரத்தில் ஆண்களுக்கும் வலியுறுத்துகிறார்.

Edited by இளங்கோ

  • தொடங்கியவர்

திருகுறளின் மூல வடிவ நூல் கிடைக்காமையால் ஏற்பட்ட தவறான அர்த்தங்கள்!

"எப் பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்ப தறிவு."

எனும் வள்ளுவர் பெரும் தகை வாக்குக்கு இணங்க திருவள்ளுவர் திடுக்கிடுவார் எனும் பொருள் பட இந்திய எழுத்தாளர் திரு. தர்மகுலசிங்கம் எழுதி சர்ச்சைக்குறியதாய் மாறிய கட்டுரையையும் வரலாற்று ஆராட்ச்சியாளர்களின் முடிபையும் சற்று உற்று நோக்குவோம்.

திருகுறளின் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஓர் ஆச்சர்ய குரளும், பொருந்தாத குறள்களும் இருக்கின்றன். அதற்குக் காரணம் பாடல்களை வகுத்திருக்கும் முறைகள் திருவள்ளுவரால் ஆக்கப்பட்டவை அல்ல.

இன்று பரிமேலழகரின் முறைமை என்கிற கருத்தும் சிந்திக்கத்தக்கது. வேறு பகுப்பு முறைமை இன்மையால் இந்த முறையை நாம் ஏற்க வேண்டி உள்ளது.

உதாரணமாக

திக்கவயல் அவர்கள்

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக இவ்வுலகியற்றியான"

எனக் கூறி இவ்வுலகத்தினை இயற்றியவனே இறைவனையே சாபம் போடுவதாகக் கூறியுள்ளார். ஆனால் குறளானது.

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்"

என வரும் இக்குறளின் விளக்கமானது" பிச்சை எடுத்தும் உயிர் வாழ்தலை வித்தித்திருந்தால் அந்த அமைப்பிற்கு காரணமான் அரசன் அவர்களினைப்போல அலைந்து கெடட்டும்" எனக் கூறப்படுகிறது. எனவே அரசன் இரவன் ஆக்கி குற்றவாளிக்கூண்டில் ஏற்றியுள்ளாஎ. கட்டுறையாளர்.

பிச்சை எடுப்பது சோம்பலுக்கு வழி வகுக்கும் என்பதாலேயே அவர் அப்படி கூறுகிறார்.

  • தொடங்கியவர்

டெஸ்டிங் 1, 2,, 3

டெஸ்டிங் 1, 2,, 3

டெஸ்டிங் 1, 2,? :lol: , 3

  • கருத்துக்கள உறவுகள்

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்

கண் என்ப வாழும் உயிர்க்கு.

"கருத்து சுலபமாக விளங்கும்படியுள்ளது". :lol::lol:

  • 3 weeks later...

என் கருத்து உங்களை தொடர்ந்து எழுத விடாது தடைசெய்து இருந்ததால்

என் கருத்தை நீக்கியுள்ளேன் தயவுசெய்து தொடருங்கள் திருக்குறள்

எமக்கு கிடைத்த தரமான வாழ்கை வழிகாட்டி

நான் ரசிந்து ஆச்சரியப்பட்டு கோவப்பட்ட ஒன்றுதான் திருக்குறள்

நான் ரசிந்த குறளை வைத்து விட்டுபோகின்றேன் தயவுசெய்து

தொடருங்ககள்

அன்பகத் தில்லா உயிர்வாழ்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று

உள்ளத்தில் அன்பு இல்லாது வாழும் உயிர்வாழ்கை

கொடிய பாலை நிலத்தில் பட்ட மரம் தளிர்த்தததைப் போன்றது

Edited by கஜந்தி

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யென பெய்யும் மழை

அந்த காலத்தில கனக்கா இப்படி எழுதி இருக்கினம் அதை கண்டு நம்மன்ட வாழ்க்கையை கோட்டை விட கூடாது

:lol:

அந்த காலத்தில கனக்கா இப்படி எழுதி இருக்கினம் அதை கண்டு நம்மன்ட வாழ்க்கையை கோட்டை விட கூடாது

:blink:

இலக்கியத்திலும் நான் இதனை உணர்த்தால் தான் இப்படியொரு பதிவை

எழுதினேன் நாம் இன்னும் கற்பனைக்குள் தான் இருக்கின்றோமா

இல்லை நிஜத்தை உணர்த்து கொண்டோமா என்பது தெரியவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.