Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்புடையதில்ல - இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 05-04-2007 00:58 மணி தமிழீழம் [மயூரன்]

இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்புடையதில்ல - இந்தியா

இலங்கை இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சுக்களை நடத்த முன்வரவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

சார்க் நாடுகளின் 14வது மாநாட்டின் இறுதி நிகழ்வில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு இப்பதிலை முகர்ஜி தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு இரு தரப்பினரும் அமைதிவழியில் தீர்வு காணவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பபாடு என முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு ஏற்புடையதில்லை எனவும் சிறீலங்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தியா சகல உதவிகளையும் வழங்கத் ஏற்கனவே உறுதியளித்துள்ளதாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பதிவு

இப்படியே எல்லா நாடுகளும் "சிறீ லங்கா இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு ஏற்புடையதில்லை!" என்று ஒருபக்கத்தால் சொல்லிக்கொண்டு, ஆனால் மறுபக்கத்தால் சிறீ லங்கா இனவாத அரசிற்கு தொடர்ந்தும் இராணுவ உதவிகள் செய்து கொண்டிருந்தால், சிறீ லங்கா முன்னேறிய மாதிரித்தான்!

இது இந்தியாவினால் இலங்கையரசிற்குச் சொல்லப்படும் சேதியல்ல. இது தமிழர் தரப்புக்கு மறைமுகமாகச் சொல்லப்படும் சேதி. தாக்குதலுக்குத் தயார் நிலையிலும் விடுதலையின் வாசலில் வந்து நிற்கும் தீர்வின் வழியைத் தடுப்பது இவ்வாறான மறைமுகச் சேதிகளைச் சொல்லித்தான். இந்தியாவின் நிலைப்பாடு இதுதானென முகர்ஜி சொல்வது தொடர்ந்து அடிவாங்கிக் கொண்டு அமைதிவழித் தீர்வைக் காணுங்கள் என்பது போல் எனக்குத் தென்படுகிறது.

இந்தியாவின் இக்கருத்து நகைப்புக்கிடமானது. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுறது.

போரைச் செய் சமாதானத்துக்கு உதவுகிறோம் என்று சில நாடுகளும் சமாதானத்தைப் பேசு போருக்கு உதவுகிறோமென்று இன்னும் சில நாடுகளும் கங்கணம் கட்டிக்கொண்டு நிக்கிறமாதிரி தான் தெரியுது.

ஒன்று மட்டும் உறுதி, கிள்ளு வாங்கிற பிள்ளை தொடர்ந்து கிள்ளு வாங்கவும் மாட்டாது அது தொடர்ந்து தொட்டிலுக்குள்ளேயும் இருக்காது. ஒரு நாளைக்கு அது தவழும் அப்புறம் எழும்பி நடக்கும் பின் உதைக்கும்.

Edited by Norwegian

ஆம். இந்தியாவும் இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டு, ஏவுகணைகள் தயாதிப்பதை நிறுத்தி பாகிஸ்தானுடன் அமைதி வழியில் பிரச்சனையத் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுவே எனது நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா உங்கட நிலைப்பாடே நிலைப்பாடு

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான சகல செயற்பாடுகளுக்கும் இந்தியா ஆதரவு வழங்கும்

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக மேற்கொள்கின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் இந்திய அரசாங்கம் முழுமையான ஆதரவினை வழங்கும் என இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் இடையே நேற்று மாலை புதுடில்லியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சந்திப்பின்போதே பிரதமர் மன்மோகன்சிங் மேற்கண்டவாறு தெரிவித்ததாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் . அண்மையில் தென்னிந்திய மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இலங்கை கடற்படையினருக்கு தொடர்பு இல்லை என்பதை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில்,

இலங்கை கடற்படையினருடன் இணைந்து இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் செயற்பாடொன்றை மேற்கொள்வதற்கும் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, விடுதலைப்புலிகள் பல சந்தர்ப்பங்களில் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளனர் எனவும் போர்நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் புலிகள் திட்டமிட்ட வகையில் ஆயுத சேகரிப்பை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் மன்மோகன்சிங்கிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறப்படுகின்றமை தொடர்பாக கிடைக்கின்ற முறைப்பாடுகளை ஆராய மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது தற்போது செயற்பட்டு வருகின்றது. இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கண்காணிக்க பிரதேச மட்டத்தில் கண்காணிப்பாளர் வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும் ஜனாதிபதி எடுத்துக் கூறியுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாண மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுக்க அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமருக்கு விளக்கிக்கூறியுள்ளார் என்று அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/

ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து. அதுவும் குழப்பமான கருத்து.

இராணுவ தீர்வுதான் பிழை என்கிறார்கள் ஆனால் தமிழரின் போராட்டம் பிழை விடுதலைப்போர்வீரர்கள் பிழை என்று சொல்ல இல்லை எனவே இப்போ இருக்கும் தமிழரின் நிழல் அரசாங்கத்தை அங்கீகரித்து ஒரு தீர்வுக்கு வாருங்கள் என்ற தொனியில் தான் இந்தியா சொல்கிறது போலும்.

ஏனென்றால் எல்லாருக்கும் தெரியும் இப்போ இருக்கும் நிழல் அரசாங்கத்தை இலகுவாக இல்லாமல் செய்து விடமுடியாது. அதற்கு இராணுவ நகர்வும் முக்கியமாக தேவை தான். அதை இந்தியா விரும்பவில்லை என்றால் அவர்கள் மறைமுகமாக தமிழரது நிழல் அரசை ஏற்றுகொள்கிறார்கள் என்றுதான் பொருள்.

எனவே நிழல் அரசை அங்கிகரிக்கச்சொல்லி இந்திய மத்திய அரசை வற்புறுத்துவது தமிழக அரசியல் கட்சிகள் தமிழக மக்கள் , தமிழ்மக்களின் விடுதலை விரும்பிகளின் தலையாய கடமையாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.