Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய நாளிதழ்களில்.......ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைக்கு விரைவில் பதில்?

Featured Replies

ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைக்கு விரைவில் பதில்?

முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர்: சர்ச்சைக்கு விரைவில் பதில்?

ஜெயலலிதா மரண சர்ச்சைக்கு விரைவில் பதில்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓராண்டாக விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரணையின் இறுதி கட்டமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கும் இது தொடர்பாக சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் மரண சர்ச்சைக்கு விரைவில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

விசாரணை கமிஷனின் பதவிக்காலம், அக்டோபர் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

Presentational grey line

தி இந்து (ஆங்கிலம்): உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நியமனம்

புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரன்ஞன் கோகாய்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபுதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரன்ஞன் கோகாய்

இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதையடுத்து, அக்டோபர் 3ஆம் தேதி புதிய தலைமை நீதிபதியாக இவர் பதவி ஏற்றுக் கொள்வார்.

அசாம் மாநிலத்தில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஒருவர் பதவி வகிப்பது இதுவே முதல்முறையாகும். 13 மாதங்களுக்கு இந்தியாவின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி வகிப்பார். 2019ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி இவர் ஓய்வு பெறுகிறார்.

Presentational grey line

தினமணி: தில்லி பல்கலைக்கழக தேர்தலில் ஏபிவிபி வெற்றி

ஏபிவிபி வெற்றிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலர் ஆகிய பதவிகளை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கைப்பற்றியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏபிவிபியின் அன்கிவ் பசோயா 1,744 வாக்கு வித்தியாசத்தில் தனக்கு எதிராக போட்டியிட்ட என்.எஸ்.யு.ஐ வேட்பாளர் சன்னி சில்லரை தோற்கடித்து தலைவர் பதவியை கைப்பற்றினார்.

இந்நிலையில் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தம் 1.35 லட்சம் மாணவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்ற இத்தேர்தலில், 44.46 சதவீத வாக்குகள் பதிவாகியதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

Presentational grey line

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - எஸ்.பி.ஐ மீது வழக்கறிஞர் விமர்சனம்

விஜய் மல்லையாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

விஜய் மல்லையா நாட்டைவிட்டு வெளியெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, அவர் இந்தியாவில் இருந்து வெளியேறுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு கடன் வழங்கியவர்களிலேயே அதிகமான தொகையை வழங்கிய எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகத்துக்கு தாம் ஆலோசனை வழங்கியதாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் கூறியுள்ளார்.

பிப்ரவரி 28, 2016 அன்று அந்த வங்கியின் உயர் அதிகாரிகளை தாம் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-45517666

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.