Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களிடம் ஓர் பகிரங்க வேண்டுகோள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களிடம் ஓர் பகிரங்க வேண்டுகோள்.

__________________________________________________________

அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய கிழக்கு மற்றும் வடக்கு மாகாண மக்களின் அவல ஓலங்கள் என் மனதைப் பெருதும் பாதிப்படைய வைத்துள்ளன, ஆகவே தான் அவசரமாக இந்த வேண்டுகோளை பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளேன். இந்த ஆக்கத்தின் கீழ் உங்களால் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு பதில் கருத்துக்களும் மிகவும் தரமானவையாக இருந்தால் அதன் பெறுமதியும் மிக அதிகமாகவிருக்கும். அதாவது இந்த கோரிக்கை போய் சேர வேண்டிய இடத்திற்கு வேகமாக சென்றடைய வாய்ப்புள்ளது என்பதை பணிவன்புடன் கூறிக்கொண்டு எனது கருத்துக்கு நகர விரும்புகிறேன்.

கிழக்கு மாகாண மக்கள் என்றால் என்ன, வடக்கு மாகாண மக்கள் என்றால் என்ன எல்லோரும் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமையை மட்டும் தான் நம்பி தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னால் இணைந்து கொண்டனர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க சந்தர்ப்பமில்லை என்பது எனது கருத்து.

முக்கியமாக கிழக்கு மாகாணத்திலும் பல்லாயிரம் போராளிகள் தங்களை இயக்கத்துடன் இணைத்துக் கொண்டது மாத்திரமின்றி, அங்குள்ள மக்களும் இயக்கத்தின் வளர்சிக்காக எவ்வளவோ தியாகங்களையும், பங்களிப்புக்களையும் செய்திருக்கிறார்கள் என்பதை தேசியத்தலைவர் அவர்கள் மறந்து விட்டாரா? அல்லது கருனாய் தான் கிழக்கு மாகாண மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை என்பதை அங்கீகரிக்கப் போகிறாரா?

இன்று கிழக்கு மாகாண மக்கள் இன வெறி பிடித்த ஸ்ரீலங்கா அரசுப் படைகளினாலும், இரத்த வெறி பிடித்த காட்டுவாசிகள் கருனாய் கும்பல்களினாலும் அடித்து விரட்டப்பட்டு இருக்க வீடுகளோ, உண்ண உணவோ, உடுக்க உடைகளுமின்றி வீதியோரங்களிலும், மரங்களின் கீழும் நிம்மதியில்லாமல் அநாதரவாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வேதனைகளை மனிதாபிமானமுள்ள எவராலுமே சகித்துக்கொள்ள முடியாத விடயமாகும்.

இவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் ஸ்ரீலங்கா அரச நாய்களோ, அல்லது கருனாய்களோ அல்ல. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டும் தான் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

உடனடியாகவே அப்பாவி மக்களை மீட்டு காப்பாற்றப் போகிறீர்;களா? அல்லது உங்களினால் காக்கப்படும் அமைதியிற்கு ஏதாவது காரணம் கூறி நியாயப் படுத்தப் போகிறீர்களா? அல்லது அழிவுகளின்றி, இழப்புகளின்றி, இரத்தம் சிந்தாமல் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாது என்ற வேதாந்தத்தை மீண்டும் மீண்டும் கூறி இனியும் நாட்களைக் கடத்தப் போகின்றீர்களா?

நிலமை அந்த எல்லையைத் தாண்டி மக்கள் மரண விழிம்பில் நிற்கிறார்கள் அவர்களுக்கு நீங்கள் கூறும் பதில் தான் என்ன? மக்களின் வேதனைகளையும், துன்பங்களையும், இழப்புக்களையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்களா? அல்லது தொடர்ந்தும் மௌணம் கடைப்பிடிக்கப் போகின்றீர்களா?

உங்களைக் காப்பாற்ற கையில் ஆயுதமும், கழுத்தில் நஞ்சுக் குப்பியும் இருக்கிறது, ஆனால் மக்கள் நம்பி இருப்பது உங்களை மட்டுந்தானே? அப்படியென்றால் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீது தொடர்ந்தும் குற்றஞ் சுமத்திக் கொண்டிருப்பதின் நோக்கம் என்ன? அவர்கள் எங்களின் எதிரிகள் அவர்;களிடமிருந்து மனிதாபமானத்தையும், நியாயத்தையும் எப்படி எதிர் பார்க்க முடியும்? அவர்கள் எங்களைத் தாக்கத் தான் செய்வார்கள், கொலையும் செய்வார்கள் இந்தச் செயல்களை தமிழ் மக்கள் உங்களிடம் மட்டுந்தானே முறையிடலாம், ஆனால் நீங்கள் ஏன் யாரிடமும் முறையிடவேனும்?

எங்கள் நாடு தமிழீழம், எங்கள் தலைமை நீங்கள், அப்படியென்றால் எங்களை நிர்வகிக்கும் அளவுக்கு, எங்களை மீட்டுப் பாதுகாக்குமளவிற்கு உங்களிடம் சக்தி இல்லையா? அல்லது எங்களது பங்களிப்புப் போதாதா? அப்படியில்லையென்றால் இன்னும் பொறுமை ஏன் என்பதை பரிதவிக்கும் மக்களிற்காக பகிரங்கப் படுத்துங்கள் அல்லது மௌணத்தை கலையுங்கள். உங்களை விட்டால் அவர்களுக்கு யார் இருக்கிறார்கள்?

இயக்கத்தின் ஆரம்பக் காலத்திலிருந்தே உங்களின் கோரிக்கைகளைத் தானே மக்கள் செவி மடுத்து வந்தனர், அப்படியிருக்கையில் யாழ்ப்பாண மக்களையும், கிழக்கு மாகாண மக்களையும் தனிமையில் விட்டிட்டு நீங்கள் மட்டும் நகர்ந்து கொண்டது எந்த விதத்தில் நியாயம்? இதை ஒரு தந்திர நகர்வு என்று எடுத்துக்கொண்டாலும், இவ்வளவு கால பொறுமை உண்மையில் உங்களுக்கு தேவையா?

சர்வதேச நாடுகளை நம்பியா இயக்கத்தை ஆரம்பித்தீர்கள் அல்லது அவங்கள் சொல்லியா நாங்கள் உங்கள் பின்னால் அணி திரண்டோம்? விடுதலைப் புலிகளைத் தடை செய்த நாடுகளில் இருக்கும் எங்கள் உறவுகளுக்கு எவ்வளவு நெருக்குவாரங்கள், நிர்ப்பந்தங்களை எல்லாம் கொடுத்து தொடர்புகளையும் உதவிகளையும் தடுப்பதிற்கு அந்தந்த நாடுகள் முயற்சித்தன. அவர்களின் வெருட்டல்களுக்கெல்லாம் பயந்து எம் மக்கள் பங்களிப்பை நிறுத்திக் கொண்டார்களா?

இல்லைத் தானே அப்படியென்றால் இந்த சர்வதேச நாடுகளுக்கெல்லாம் நீங்கள் ஏன் இன்னும் செவி மடுக்க வேண்டும்?

ஆகவே தேசியத் தலைவர் அவர்களே எங்களின் இந்த நியாயமான குமுறல்களை ஏற்றுக்கொண்டு உங்களின் பின்னால் நாங்கள் அதாவது புலம் பெயர்ந்த தமிழர்கள் அத்தனை பேரும் இருக்கின்றோம் என்பதையும் ஏற்றுக்கொண்டு இனியும் பொறுமை காக்காது தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களை மீட்டெடுப்பதிற்கு விரைவில் செயல்வடிவம் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

நண்றி

வல்வை மைந்தன்.

ஏப்பிரல் 04, 2007.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர வர "தண்ணி"யில் எழுதும்நபர்கள் களத்தில் அதிகரித்துவிட்டார்கள்.

வேற என்னத்தைச் சொல்ல? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் இதை வாசிக்கும் போது பல எண்ணங்கள் தோன்றுகின்றன, கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரு ஆதரவையும், விடுதலைப்புலிகளுக்கு பிரச்சாரமாகவும், வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கு சில விடயங்களை தெளிவு படுத்துவதாகவும் அமைகின்றன. இதை சரியாக வாசிக்காமல் பதில் எழுதுவது நல்லதல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர வர "தண்ணி"யில் எழுதும்நபர்கள் களத்தில் அதிகரித்துவிட்டார்கள்.

வேற என்னத்தைச் சொல்ல? :lol:

:(:lol::lol: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு வல்வை மைந்தன் அவர்களே.

தமிழ் மக்களுடன், அவர்களுடைய பாதுகாப்பிற்கு புலிகள் மட்டுமல்ல, அனைத்து தமிழர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று சிந்தித்து எழுதியிருந்தால் இவ்வாறன தலைவருக்கு மடல் எழுதும் சந்தர்ப்பம் வந்திருக்காது. புலிகள் மட்டும் தான் பொறுப்பு என்று சொல்லிக் கொண்டு யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது.

ஒவ்வொருவரும் தங்களின் பணிகளைச் செய்து வந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்குமா?

வீட்டுக்கொரு போரளியைத் தந்தால் என்றோ வெற்றி பெற்றிருப்போம் என்று பல தடவை புலிகள் சொல்லி விட்டார்கள். எத்தனை பேர் உங்களின் வீட்டில் இருந்து போராளிகளைக் கொடுத்தீர்கள்? சமீபத்தில் தமிழ்செல்வன் பேட்டியளித்தது போன்று, ஒரே குடும்பத்தில் தான் போராளிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்களே தவிர, மற்றவர்கள் ஏதோ வேடிக்கை பார்க்கின்ற நிலமையில் தான் இப்போதும் இருக்கின்றார்கள்.

இந்த நிலை மாற வேண்டும். இதுவரைக்கும் சிங்கள இராணுவத்தால் 4000 பேர் கொல்லப்பட்டனர். ஒரு யுத்தகளம் நடந்தால் கூட இத்தனை பேர் சாவடைந்திருக்க மாட்டார்கள். நாட்டுக்கான வெற்றியும் கிடைத்திருக்கும்.

ஆனால், ஒவ்வொருவரும், தங்கள் தங்களின் நிலைகளில் இருந்து விலகாமல், நியாயம் கதைக்கின்றார்கள். புலிகளால் இன்று கிழக்கு மாகாணத்தை வைத்துக் கொள்ளமுடியாமைக்கு சிறிலங்கா அரசு போன்று ஆள்பலம் போதாது என்றால் உடனே, எத்தனை பேர் இணையத் தயாராக இருக்கின்றீர்கள்?

இப்படிக் நியாயம் கதைப்பவர்களை நிச்சயமாக எனக்குப் பிடிப்பதில்லை. போராட்டத்தில் இருக்கின்ற பிரச்சனைகளை உணராது, வெறுமனே வெற்றுவீச்சுக்காக எழுதும் கட்டுரைகளே இவை.

புலிகள் கேட்கின்ற செயற்பாட்டிற்கு முதலில் முழுமையாக ஒத்துழையுங்கள். பின்பு, நியாயம் கதைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

1984 இல் தலைவர் பிரபாகரன் வெகு தெளிவாக இருந்துள்ளார்.. ஆனால் நம்மில் பலர் சலிப்பின் காரணமாக ஒழுங்காகச் சிந்திக்கமுடியாதவர்களாக மாறிவிட்டோம்!

இணைப்பிலுள்ள கடைசிக் கேள்விக்கான பதிலைப் பார்த்தாலே கொஞ்சம் தெளிவு வரும்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21817&hl=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வர வர "தண்ணி"யில் எழுதும்நபர்கள் களத்தில் அதிகரித்துவிட்டார்கள்.

வேற என்னத்தைச் சொல்ல? :(

*********************************************

சகோதரன் பண்டிதர் அவர்களே..உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது..இந்த ஆக்கத்தின் ஒரு விமர்சனத்தை இறுதியில் கொடுக்கவுள்ளேன்..அதன் பின்பு எனது நோக்கத்தையும் உங்களால் புரியக் கூடியதாகவிருக்கும். ஒரு சொல்லில் பதில் கூறுவதை விட்டிட்டு உங்களுடைய ஆக்க பூர்வமான கருத்துக்களை முன் வையுங்கள் அப்போது தான் நாங்கள் சில பெறுபேறுகளை அடையலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேங்கைகளின் ஒவ்வொரு அசைவையு..உற்று பார்;தால்

இவ்வாறான ஜய நிலை ஏற்ப்படா..து....இற்காண விடை சுலபானது..

கர்திருங்கள்.....

  • 3 weeks later...

வல்வை மைந்தன் என்று பெயரைமட்டும் வைத்திருந்தால் போதாது,நிதானமா சிந்திக்கவும் தெரிஞ்சிருக்கவும் வேணும்.

நீங்கள் ஒரு பக்கத்தால சிந்திக்கிறத விட்டிட்டு ,சகல பக்கத்தாலையும் அலசி ஆராஞ்சு பாத்தீங்கள் எண்டால்

இப்படியான சந்தேகங்கள் வராது.அத்துடன் இம்மடலை அனுப்பிறதுக்கு முன்னாடி உங்களுடைய கடமையை ஒழுங்காக தமிழீழ மண்ணுக்கு செய்திருக்கிறீர்களா என்று ஒரு தடவை யோசிச்சா நல்லது.

சும்மா எல்லாத்துக்கும் பழியை தலைவரின் மீதும் இயக்கத்தின் மீதும் போடவேண்டாம்.தமிழீழ மண்ணில் பிறந்த எல்லாருக்கும் அந்த கடமை உண்டு

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது போல் இருக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.