Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்­தவின் பக்கம் திரும்­புமா இந்­தியா?

Featured Replies

மஹிந்­தவின் பக்கம் திரும்­புமா இந்­தியா?

SAMAKALAM150918-PG01-R1Page1Image0002-182371e936b594025499696ff41903a2ddfe017e.jpg

 

-ஹரி­கரன்

ஒட்­டு­மொத்­த­மாகச் சொல்­வ­தானால், மஹிந்த ராஜபக் ஷ இன்­னமும் மாற­வில்லை என்று குறிப்­பி­டலாம். 

தான் மாறாமல் இருப்­ப­தா­கவும் இந்­தி­யாவின் மனோ­நி­லையை மாற்ற முனை­வ­தா­கவும் தான் அவ­ரது கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன


 

தர­கர்கள் பொது­வாக, வியா­பா­ரங்­களில் தான் அதிகம், ஆனால், அர­சி­ய­லிலும் தர­கர்கள் இருப்­ப­துண்டு. இலங்கை அர­சி­யலைப் பொறுத்­த­வ­ரையில், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிரான் அலஸ், போன்­ற­வர்­களை அவ்­வா­றா­ன­வர்கள் எனக் குறிப்­பி­டலாம்.

ஒரு பக்கம் வணிகப் பெரும்­புள்­ளி­யாக இருந்து கொண்டே, ஆளும்­கட்சி, எதிர்க்­கட்சி இரண்­டுக்­கு­மி­டையே தரகு வேலை­க­ளையும் செய்து ஆட்­களை கவர்ந்­தி­ருக்­கி­றார்கள். அதி­கார மாற்­றங்­க­ளுக்கும் துணை போயி­ருக்­கி­றார்கள்.

அது­போ­லவே, இந்­தி­யாவின் அர­சியல் கோமாளி என்று வர்­ணிக்­கப்­படும் சுப்­ர­ம­ணியன் சுவா­மியும் இப்­போது, ஒரு தரகு அர­சி­யல்­வா­தி­யாகத் தான் மாறி­யி­ருக்­கிறார்.

அவ­ரது தரகு வேலை, இந்­தி­யா­வுக்கும் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் மீண்டும் உற­வு­களைப் புதுப்­பித்துக் கொள்­வ­தற்­காக நடந்­தே­றி­யி­ருக்­கி­றது.

சுப்­ர­ம­ணியன் சுவாமி தலை­வ­ராக இருக்கும் விராட் ஹிந்­துஸ்தான் சங்­கத்தின் கருத்­த­ரங்கில் உரை­யாற்ற புது­டெல்­லிக்கு அழைக்­கப்­பட்ட மஹிந்த ராஜபக் ஷவுக்கு, அங்கு ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்ட வாய்ப்­புகள், சுப்­ர­ம­ணியன் சுவாமி வெறு­மனே அர­சியல் கோமாளி மாத்­தி­ர­மல்ல என்­ப­தையும் வெளிக்­காட்­டி­யி­ருக்­கி­றது.

‘தி ஹிந்து’ நாளி­த­ழுக்­காக தனது மகள் சுகா­சினி ஹைதர் மற்றும் அமித் பரூவா போன்ற பிர­பல ஊட­க­வி­ய­லா­ளர்­களை வைத்தும், News X தொலைக்­காட்­சிக்கு பிரியா ஷேகல், strategic News International  தொலைக்­காட்­சிக்கு, நிதின் கோஹலே ஆகி­யோரைக் கொண்டும், செவ்­வி­களை காண­வைத்து, மஹிந்­தவை இந்­திய செய்தி வட்­டா­ரங்­களில் பர­ப­ரப்­பாகப் பேச வைத்­தி­ருக்­கிறார்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­தித்துப் பேச வைத்தார். அடுத்த பக்­கத்தில் காங்­கிரஸ் கட்­சி­யுடன் முரண்­பா­டு­களைக் கொண்­டி­ருந்­தாலும், அதன் தலைவர் ராகுல் காந்­தியும், மன்­மோகன் சிங்கும், சந்­தித்துப் பேசும் நிலை­யையும் உரு­வாக்­கி­யி­ருக்­கிறார்.

இவை எல்­லா­வற்­றையும் எதற்­காகச் செய்­கிறார் சுவாமி? இந்தக் கேள்­விக்­கான விடை எளி­தா­னது. அடுத்து வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்­தவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்­பதே சுவா­மியின் திட்டம். இலக்கு. அது தான் விடை. தனி­யான கட்­சியை உரு­வாக்கி, உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் பலத்தை நிரூ­பித்து விட்ட மஹிந்த ராஜபக் ஷவுக்கு, எப்­ப­டியும் அடுத்த ஆண்டு டிசம்­ப­ருக்குள் நடக்­க­வி­ருக்கும் ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற வேண்டும்.

தனது சகோ­தரர் நிச்­சயம் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டியில் இருக்­கிறார் என்று பட்­டும்­ப­டாமல் சொல்­லி­யி­ருக்­கிறார் அவர்.

இதில் வெற்றி பெற்று ஆட்­சி­மைப்­ப­தற்கு குறைந்­த­பட்சம் இந்­தி­யாவின் ஆத­ரவு அவ­ருக்குத் தேவைப்­ப­டு­கி­றது. ஏனென்றால், 2015இல் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியை இழப்­ப­தற்கு இந்­தி­யாவும் ஒரு கார­ணி­யாக இருந்­தது. இந்­தியப் புல­னாய்வுத் துறையும் அமெ­ரிக்­காவும் தம்மைத் தோற்­க­டித்து விட்­டது என்று அவர் ஆட்­சியை இழந்த பின்னர் பல­முறை கூறி­யி­ருந்தார். எனவே, மீண்டும் ஒரு­முறை அவ்­வாறு நடக்­காது என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டிய தேவை அவ­ருக்கு இப்­போது இருக்­கி­றது.

ஆட்­சியை இழந்த பின்னர், மஹிந்த ராஜபக் ஷ, தன்னை சீனாவின் நண்பன் என்று காட்டிக் கொள்­வ­தற்கு பல­முறை பீஜிங்­கிற்குச் சென்று வந்தார்.

 ஆனால் ஒரு­மு­றை­யேனும், புது­டெல்­லிக்கு அவர் பயணம் மேற்­கொண்­ட­தில்லை.

நீண்ட இடை­வெ­ளிக்குப் பின்னர், அவர் புது­டெல்­லியில் கால் வைத்­தி­ருக்­கிறார் என்றால், அதற்கு ஒரே காரணம், இந்­தி­யாவின் பக்­கத்தில் இருந்து தனக்கு மீண்டும் ஒரு தடைக்கல் போடப்­பட்டு விடக் கூடாது என்ற முன்­னெச்­ச­ரிக்கை தான். புது­டெல்­லியில் அவர் ஊட­கங்­க­ளுக்கு அளித்­தி­ருந்த செவ்­வி­களில் இந்­தி­யா­வு­ட­னான உற­வுகள் குறித்த விட­யத்­துக்கே அதி­க­ளவு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அவர் செவ்­வி­ய­ளித்த ஊட­கங்கள் அனைத்­தி­லுமே, தம்மை இந்­தியா தவ­றாகப் புரிந்து கொண்டு விட்­டது என்ற பாணி­யி­லேயே பதி­ல­ளித்­தி­ருக்­கிறார்.

இரண்டு தரப்­பு­க­ளுக்கும் உள்ள தவ­றான புரி­தல்­களைக் களை­வ­தற்கே தாம் புது­டெல்லி வந்­தி­ருப்­ப­தாக செவ்­வி­களில் அவர் தெளி­வா­கவே குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அத்­துடன், 2015இல் தாம் தோற்­க­டிக்­கப்­பட்­டதன் பின்­ன­ணியில் இந்­தியா இருந்­தது என்ற முன்­னைய குற்­றச்­சாட்டை புதுப்­பித்துக் கொள்­ளவும் அவர் தயா­ராக இல்லை.

புது­டெல்லிக் கருத்­த­ரங்கில், பேசும் போது, உள்­நாட்டு வெளி­நாட்டு சக்­தி­களே தம்மை தோற்­க­டித்­தன என்று குறிப்­பிட்ட போதும், எந்த நாட்­டையும் அவர் குறிப்­பிட்டுச் சொல்­வதை தவிர்த்­தி­ருந்தார்.

ஊடகச் செவ்­வி­களில் அது­பற்றிக் கேள்வி எழுப்­பிய போது, நடந்­தது நடந்து முடிந்து விட்­டது, கடந்த காலத்தை மறந்து விடுவோம், இனி புதிய அத்­தி­யா­யத்தை தொடங்­குவோம் என்ற வகை­யி­லேயே மஹிந்த ராஜபக் ஷவின் பதில்கள் அமைந்­தி­ருந்­தன.

             

எனினும், Strategic News International செவ்­வியின் ஒரு கட்­டத்தில் அவர், கடந்த தேர்­தலில் பாடம் கற்­றுக்­கொண்­டதால் அடுத்த முறை இந்­தியா தலை­யி­டாது என்ற கருத்­தையும் அவர் சூச­க­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

அத்­துடன், மஹிந்த ராஜபக் ஷ தன்னை இந்­தியா தவ­றாகப் புரிந்து கொண்டு விட்­டது என்­ப­தையே ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அழுத்தம் திருத்­த­மாக வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

இந்­தி­யாவை நெருங்­கிய உற­வினர் என்றும் சீனாவை நண்பன் என்றும் இரு­வ­ருக்கும் இடையில் நடு­நி­லை­யான உறவைப் பேணவே தாம் முனை­வ­தா­கவும் கூறும் அவர், கடந்­த­கா­லத்தில் இலங்­கையில் முத­லீ­டு­களை மேற்­கொள்­ளு­மாறு இந்­தி­யா­வி­டமே முதலில் கேட்­ட­தா­கவும் பின்­னரே சீனா­விடம் சென்­ற­தா­கவும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

ஆனால், இந்­தியா அதனை தவ­றாக புரிந்து கொண்டு விட்­டது. அந்த தவ­றான புரி­தல்­களைக் களை­யவே புது­டெல்லி வந்­தி­ருப்­பது போன்று கதை விட்­டி­ருக்­கிறார்.

ஒட்­டு­மொத்­த­மாகச் சொல்­வ­தானால், அவர் இன்­னமும் மாற­வில்லை என்று குறிப்­பி­டலாம். தான் மாறாமல் இருப்­ப­தா­கவும் இந்­தி­யாவின் மனோ­நி­லையை மாற்ற முனை­வ­தா­கவும் தான் அவ­ரது கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன.

News X செவ்­வியின் போது அவ­ரிடம், ஒரு கேள்வி எழுப்­பப்­பட்­டது. 2014இல் இங்கு வந்த போது கடும் எதிர்ப்­புகள், போராட்­டங்கள் நடத்­தப்­பட்­டன. இப்­போது எது­வு­மில்லை. ஏன் என்­பதே அந்தக் கேள்வி.

அதற்கு மஹிந்த ராஜபக் ஷ நான் மாற­வில்லை என்றும் , மக்கள் தான் மாறி­யி­ருக்­கி­றார்கள் என்றும் பதில் கொடுத்­தி­ருக்­கிறார்.

அவ­ரது அந்தப் பதில் ஏனைய விட­யங்­க­ளுக்கும் கூடப் பொருத்­த­மா­னது தான்.

அதா­வது, முன்­னரும் சரி, இப்­போதும் சரி தான் ஒரே நிலைப்­பாட்­டி­லேயே இருப்­ப­தாக அவர் சாதிக்க முனைந்­தி­ருக்­கிறார்.

தவ­றான புரிந்­து­ணர்­வு­களை நீக்கி இந்­தி­யா­வுடன் நட்பை பலப்­ப­டுத்­து­வது அவ­ரது ஆர்­வ­மாக இருக்­கி­றது.

போர்க்­கா­லத்தில் மூவ­ர­ணியை அமைத்து நிலை­மை­களைக் கையாண்­டது போலவே, தாம் ஆட்­சிக்கு வந்த பின்­னரும், இந்­தி­யா­வு­ட­னான பிரச்­சி­னை­களை அத்­த­கைய பொறி­மு­றையை அமைத்து கையாளப் போவ­தா­கவும் மஹிந்த ராஜபக் ஷ கூறி­யி­ருக்­கிறார்.

ஒட்­டு­மொத்­தத்தில், மஹிந்த ராஜபக் ஷ புது­டெல்­லியில் தனக்­கான ஒரு கதவை அகலத் திறக்க முனைந்­தி­ருக்­கிறார்.

இது அவ­ருக்குச் சாத­கமா -பாத­கமா என்­பதை ஒரு­புறம் ஒதுக்கி வைத்து விட்டு, மஹிந்த தரப்பின் நியா­யங்­க­ளையும், கேட்கும் நிலை ஒன்று புது­டெல்­லியில் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

சுப்­ர­ம­ணியன் சுவாமி தான் இதற்கு முக்­கிய கார­ணி­யாக இருந்­தி­ருக்­கிறார்.

பிராந்­திய அர­சியல் போட்­டிகள் தீவி­ர­ம­டைந்­தி­ருக்கும் இந்தச் சூழலில் மஹிந்த ராஜபக் ஷ தன்னை ஒரு பல­மான ஆட்­சி­யா­ள­ராக இருப்பேன் என்­பதை இந்­தி­யா­விடம் எடுத்துக் கூறி­யி­ருக்­கிறார்.

தி ஹிந்­து­வுக்கு அளித்­தி­ருந்த செவ்­வியில் அவர், இலங்­கையில் வலு­வான ஆட்சி இருப்­பது இந்­தி­யாவின் பாது­காப்­புக்கு முக்­கியம் என்­பதை வலி­யு­றுத்திக் கூறி­யி­ருக்­கிறார்.

தற்­போ­தைய அர­சாங்கம் வலு­வா­ன­தல்ல என்று, அவர் கூறி­யுள்­ளதன் மூலம், தமது அர­சாங்­கத்தின் மூலமே இந்­தி­யாவின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­படும் என்­ப­தையும் அவர் வெளிப்­ப­டை­யா­கவே கூற முனைந்­தி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்­த­வ­ரையில், புது­டெல்­லி­யுடன் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும் என்ற நம்­பிக்கை அவ­ருக்கு இருக்­கி­றதோ- இல்­லையோ என்­ப­தல்ல பிரச்­சினை.

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் கூட, இந்­தியா தலை­யிட்டு விடக் கூடாது என்­பதை உறுதி செய்து கொள்­வதே அவ­ருக்­கான இப்­போ­தைய தேவை­யாகும்.

தம்மைப் பற்­றிய தவ­றான புரி­தல்­களை இந்­தியா களைந்து விட்டு ஆரத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்­பார்ப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அத்­த­கை­ய­தொரு நிலை உட­ன­டி­யாக ஏற்­ப­டு­வ­தற்­கான சூழல்கள் இருப்­ப­தா­கவும் தோன்­ற­வில்லை.

அவ்­வாறு இந்­தியா திடீ­ரென குத்­துக்­க­ரணம் அடித்தால் அது இந்­தி­யாவின் தோல்­வி­யா­கவே பார்க்­கப்­படும்.

2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்­தவின் தோல்­வியை உறுதி செய்­வதில் இந்­தியா முக்­கிய பங்­காற்­றி­யது. அண்­மையில் மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா எழு­தி­யி­ருந்த கட்­டுரை ஒன்றில், “மஹிந்­தவைத் தோற்­க­டிப்­பதில் முக்­கிய பங்­காற்­றிய” அஜித் டோவ­லையும், மஹிந்த சந்­திக்கப் போகிறார் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

அப்­ப­டி­யி­ருக்க, தாமே தோற்­க­டித்த மஹிந்­த­வுடன் திடீ­ரென கட்­டி­ய­ணைத்துக் கொள்­வது இந்­தி­யா­வுக்கு சங்­க­ட­மாக இருக்கும். இந்­தி­யாவின் இரா­ஜ­தந்­தி­ரத்­துக்­கான தோல்­வி­யா­கவும் பார்க்­கப்­படும்.

எனவே, மஹிந்த ராஜபக் ஷவை இந்­தியா ஒரே­ய­டி­யாக நம்பி விடும் என்றோ கட்டி அணைத்துக் கொள்ளும் என்றோ நம்­பு­வ­தற்­கில்லை. மஹிந்­த­வுக்கும் கூட அது தேவை­யில்லை.

இப்­போ­தைக்கு அவர் தான் மாறவில்லை. முன்னரைப் போலவே இருக்கிறேன், இந்தியா தான் தவறாக எண்ணிவிட்டது என்பதை நம்ப வைத்து, அடுத்த தேர்தலில் இந்தியா ஒதுங்கியிருந்தால் சரி என்ற நிலையை உறுதிப்படுத்தவே எண்ணியிருக்கிறார்.

இந்தியப் பிரதமர் உள்ளிட்ட தரப்புகளுடனான அவரது சந்திப்புகள் அதனை நோக்கியதாகத் தான் இருந்திருப்பதாக தெரிகிறது.

ஆனால், இந்தியா இந்த விடயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடும் என்று தோன்றவில்லை. மஹிந்தவின் கடந்த காலத்தையும் தற்போதைய நிலைப்பாடுகளையும் இந்தியா நன்கு அறியும்.

மஹிந்தவின் அரசாங்கத்தைக் கையாளுவதில் உள்ள சாதக பாதகங்களை எடை போடாமல் எந்த முடிவுக்கும் புதுடெல்லி வந்து விடப் போவதில்லை.

ஆனாலும், இப்போதைக்கு மஹிந்த- சுவாமி கூட்டணி புதுடெல்லியின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி கண்டிருக்கிறது என்பது உண்மை.

இதனை முழுமையான வெற்றியாக மாற்றும் திறன், சுவாமி போன்ற அரசியல் தரகர்களுக்கு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.