Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய்க்கு மேல் பொய் சொல்லும்- விக்னேஸ்வரன்!!

Featured Replies

பொய்க்கு மேல் பொய் சொல்லும்- விக்னேஸ்வரன்!!

 

 

 
Vickneswaran-Chief-minister-27-L-780x405

 

 

தவ­றி­ழைத்­து­விட்டு அதை மறைக்க மற்­றொரு தவறு என்று அதை­யும் மறைக்க இன்­னொரு தவறு நீளும் தவ­று­க­ளைப் போன்று, வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரும், முன்­னாள் நீதி­ய­ர­ச­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வ­ர­னும் பொய்­யைச் சொல்லி அதி­லி­ருந்து தப்­பிக்க இன்­னொரு பொய் என்று பொய்­களை அள்ளி வீசிக் கொண்­டி­ருக்­கின்­றார். தாம­த­மா­க­வே­னும் உண்மை வெளி­யில் தெரி­யும்போது சொன்ன பொய்­கள் அத்­த­னை­யும் நிர்­மூ­ல­மா­கி­வி­டும். விக்­னேஸ்­வ­ரன் விட­யத்­தி­லும் அது­தான் நடந்­தி­ருக்­கின்­றது.

பளைக் காற்­றாலை
பளை­யில் காற்­றைப் பயன்­ப­டுத்தி மின்­சக்தி உற்­பத்தி செய்­வ­தற்கு இரண்டு நிறு­வ­னங்­கள் முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­தன. ‘ஜூல் பவர்’ மற்­றும் ‘பீற்றா பவர்’ என்­னும் நிறு­வ­னங்­கள் இந்த நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­யி­ருந்­தன. இரண்­டும் ஒரே முக­வ­ரி­யைப் பதி­வா­கக் கொண்ட நிறு­வ­னங்­கள். இலங்கை மின்­சார சபை­யின் கீழ், காற்­றா­லை­யி­லி­ருந்து மின்­சக்தி உற்­பத்தி செய்­யும் நிறு­வ­னங்­கள் இருக்­கத்­தக்­க­தாக மேற்­படி இரண்டு நிறு­வ­னங்­க­ளும் பளை­யில் காற்­றாலை அமைப்­ப­தற்கு மகிந்த தலை­மை­யி­லான அரசு சம்­ம­தம் தெரி­வித்­தி­ருந்­தது. கொழும்பு அர­சுக்கு உட்பட்ட திணைக்­க­ளங்­க­ளி­டம் அந்த நிறு­வ­னங்­கள் சம்­ம­தத்­தைப் பெற்­றி­ருந்­தன. ஆனா­லும் அவர்­க­ளுக்­குப் புதிய சிக்­கல் இறு­திக் கட்­டத்­தில் தோன்­றி­யது. வடக்கு மாகாண சபை உரு­வாக்­கப்­பட்­ட­மை­யால், வடக்கு மாகாணக் காணி அமைச்­ச­ரான முத­ல­மைச்­ச­ரின் அனு­ம­தி­யும் பெறப்­பட வேண்­டிய தேவை எழுந்­தது.

சட்­ட­மு­ர­ணான நட­வ­டிக்கை
அப்­போது அமைச்­ச­ராக இருந்த பொ.ஐங்­க­ர­நே­சன் இந்த விட­யத்­தில் தலை­யிட்­டி­ருந்­தார். முத­ல­மைச்­ச­ருக்கு மிக நெருக்­க­மா­ன­வ­ராகத் தன்­னைக் காட்­டிக் கொண்­டி­ருந்த ஐங்­க­ர­நே­சன், முத­ல­மைச்­ச­ரின் அனு­ம­தியை மிக இல­கு­வாக அந்த நிறு­வ­னங்­க­ளுக்­குப் பெற்­றுக் கொடுத்­தார். இதற்­குப் பதி­லீ­டாக அந்த நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து ஆண்டுக்கு 20 மில்­லி­யன் ரூபா பணத்தைப் பெரு நிறு­வ­னங்­க­ ளுக்­கான சமூ­கப் பொறுப்­பின் கீழ் (சி.எஸ்.ஆர்.) பெற்­றுக் கொள்­வ­தற்கு ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. எங்­கும் பின்­பற்­றப்­ப­டாத நடை­மு­றை­யாக இந்த ஒப்­பந்­தத்­தில் வடக்கு மாகாணப் பேர­வைச் செய­லர் கையெ­ழுத்­திட்­டார். இதன் பின்­னர் ஒப்­பந்­தத்­தின் சட்­ட­வலு தொடர்­பில் கேள்வி எழுந்­த­தைத் தொடர்ந்து முன்­னாள் ஆளு­நர் சந்­தி­ர­சிறி தலை­யிட்டு, ஒப்­பந்­தத்­தின் வாச­கங்­களை மாற்­றா­மல் வடக்கு மாகாண தலை­மைச் செய­லரை கை யெழுத்­தி­டச் செய்து சட்­ட­ரீ­தி­யான புதிய ஒப்­பந்­தத்தை உரு­வாக்­கி­னார்.

கோடிக்­க­ணக்­கான வரு­வாய் இழப்­பீடு
இவை எல்­லாம் 2014ஆம் ஆண்டு நடந்­தேறி முடிந்த விட­யங்­கள். இப்­போது இந்த விட­யம் அரங்­கில் பேசு பொரு­ளா­கக் கார­ணம் என்ன? கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யி­னால் திணைக்­க­ளங்­கள் சார் விட­யங்­கள் கணக்­காய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டும். அதன்­போது இந்த ஒப்­பந்த விட­ய­மும் அவர்­க­ளால் ஆரா­யப்­பட்­டது.
‘ஜூல் பவர்’ மற்­றும் ‘பீற்றா பவர்’ நிறு­வ­னங்­கள், இலங்கை மின்­சார சபைக்கு மின்­சா­ரத்தை விற்­ற­மைக்­காக இரண்டு ஆண்­டு­க­ளில் 293 கோடி ரூபா பணத்­தைப் பெற்­றுள்ளனர்.

ஆனால், வடக்கு மாகாண சபைக்கு 2.5 கோடி ரூபா பணத்தை மாத்­தி­ரமே வழங்­கி­யுள்ளன. வடக்கு மாகாண சபை­யி­னால் 20 ஆண்­டு­க­ளுக்கு மேற்­படி நிறு­வ­னத்­து­டன் எழு­தப்­பட்ட ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யில், 43 கோடி ரூபா­வையே 20 ஆண்­டு­கள் முடி­வில் மாகா­ண­ச­பை­யி­னால் பெற்­றுக் கொள்ள முடி­யும். ஆனால் அந்த நிறு­வ­னங்­கள் இரண்டு ஆண்­டு­க­ளி­லேயே 293கோடி ரூபா­வைப் பெற்­றுக் கொண்­டுள்­ள­ன. இத்­த­கைய பெருந்­தொகை நிதி இழப்­பு­ட­னான ஒப்­பந்­தம் தொடர்­பி­லேயே கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யி­னால் கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருந்­தது. இந்த விட­யம் மாகா­ணப் பொதுக் கணக்­கு­கள் குழு­வி­னால் ஆரா­யப்­பட்டு, வடக்கு மாகா­ண­ச­பை­யில் சமர்­பிக்­கப்­பட்டு விவா­தம் நடந்­தது. இந்த விவா­தத்தை மாகா­ண­ச­பை­ யின் 130ஆவது அமர்­வில் எடுத்­துக் கொள்ள வேண்­டாம் என்­று­கூட முத­ல­மைச்­சர் கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தார்.

யார் பொறுப்பு?
வடக்கு மாகா­ண­ச­பைக்குக் கிடைக்க வேண்­டிய பெருந்­தொ­கைப் பணம் இழக்­கப்­பட்­ட­தற்கு யார் பொறுப்பு? என்­பதே மாகா­ண­ச­பை­யில் எழுப்­பப்­பட்ட முதன்மைக் கேள்வி. அதற்­குப் பதில் சொல்­வ­தற்கு முத­ல­மைச்­சர் சபை­யில் இருக்­க­வில்லை. அவர் திரு­மண நிகழ்­வுக்­குச் சென்­றி­ருந்­தார்.

ஆனால், சில தினங்­க­ளின் பின்­னர் தானே எழு­திய கேள்­விக்கு, தானே பதிலை வழங்கி ஊடக அறிக்கை அனுப்பி வைத்­தி­ருந்­தார். அதில், பளைக் காற்­றாலை திட்­டம் கொழும்பு அர­சின் முத­லீட்­டுச் சபைக்­குச் சொந்­த­மான திட்­டம். வடக்கு மாகா­ண­சபை பத­விக்­கு­வர முன்­னரே உரிய அனு­ம­தி­க­ளைப் பெற்­றுத் திட்­டத்தைச் செயற்­ப­டுத்­தி­னார்­கள். வடக்கு மாகாண சபை­யு­டன் பெரு நிறு­வ­னங்­க­ளுக்­கான சமூ­கப் பொறுப்­பின் கீழ் (சி.எஸ்.ஆர்.) திட்­டத்­தி­லேயே உடன்­பாடு வைத்­துக் கொண்­டது.

சமூ­கப் பயன்­பாட்­டுக்­காக ஒரு நிறு­வ­னம் தனது விருப்­பார்ந்­த­ வாறு கொடுக்க முன்­வ­ரும் தொகையே சி.எஸ்.ஆர். அதை அவர்­கள் தர­லாம் தரா­மல் விட­லாம். அதில் நிதி­யி­ழப்பு எவ்­வாறு ஏற்­ப­டக்கூடும்? இரு­பது மில்­லி­ய­னும் கொடை­யா­ளி­யால் தரப்­ப­டும் தன்­னிச்­சை­யான நிதியே. அந்­தத் தொகை­யைக் அதி­க­ரிக்­க­வேண்­டு­மா­னால் ஒரு வேண்­டு­கோள் விடுக்­க­லாம். அவர்­கள் அதைப் பரி­சீ­லித்­துத் கருத்­தைத் தெரி­யப்­ப­டுத்­த­லாம். இது பேரம் பேச­வேண்­டிய தொகை­யல்ல. இத­னால் நிதி கிடைத்­ததே ஒளிய நிதி­யி­ழப்பு ஏதும் ஏற்­ப­ட­வில்லை’’ என்று முத­ல­மைச்­சர் கூறி­யி­ருந்­தார்.

தவ­று­கள்
மேற்­படி ஒப்­பந்­தம் எழு­தப்­பட்­ட­தில் தவ­றி­ழைக்­கப்­பட்­டது. வடக்கு மாகாண சபை சார்­பில் வடக்கு மாகாண தலை­மைச் செய­லரே கையெ­ழுத்­திட வேண்­டிய ஒப்­பந்­தத்­தில் வடக்கு மாகாணப் பேர­வைச் செய­லர் கையெ­ழுத்­திட்­டி­ருந்­தார். இது முத­லா­வது தவறு. இந்­தத் தவறை மாகா­ண­ச­பை­யில் முத­ல­மைச்­ச­ருக்குச் சுட்­டிக்­காட்­டி­ய­போது தாம் செய்­தது சரி­யென்று வாதிட்­டி­ருந்­தார்.

அந்த ஒப்­பந்­தத்­தின் சட்­ட­வ­லுவே கேள்­விக்கு உள்­ளா­கும் அள­வுக்குத் தவ­றி­ருக்­கின்­றது என்று அப்­போ­தைய ஆளு­நர் தெரி­வித்து அத­னைச் சரி­யாக்­கி­ய­போது எது­வும் பேசா­மல் மௌன­மாக இருந்­தார். தான் செய்­தது சரி­யென்­றால் ஆளு­ந­ரின் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்­புத் தெரி­வித்­தி­ருக்­க­லாமே? அப்­படி எது­வும் செய்­யா­மல் தான் செய்த தவறை முத­ல­மைச்­சர் மறை­மு­க­மாக ஏற்­றுக் கொண்­டி­ருந்­தார்.

இரண்­டா­வது தவறு. மேற்­படி நிறு­வ­னம் வடக்கு மாகாண சபை­யு­டன் ஏற்­ப­டுத்­திக் கொண்ட ஒப்­பந்­தத்­தின் ஊடாக வழங்­கப்­ப­டும் நிதி, மாகாண சபை­யின் வரவு – செல­வில் கணக்குக் காட்­டப்­ப­டா­மல் நேர­டி­யாக அப்­போ­தைய விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னின், அமைச்­சுக்கு வழங்­கப்­பட்­டது.

இந்த நடை­மு­றை­யும் தவறு என்று முத­ல­மைச்­ச­ருக்கு மாகா­ண­சபை அமர்­வில் எடுத்­து­ரைக்­கப்­பட்­டது. ஆனால் வழ­மை­போன்று முத­ல­மைச்­சர் இத­னை­யும் மறு­த­லித்­தார். இறு­தி­யில் கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­திக்குக் கடி­தம் எழு­தப்­பட்ட பின்­னர், அவைத் தலை­வர் தலை­யிட்டு, இதன் தாற்ப­ரி­யத்தை புரிய வைத்து, வடக்கு மாகாண சபை­யின் வரவு – செல­வுத் திட்­டத்­தில் உள்­ளீர்க்­கச் செய்­தார். அந்த நடை­முறை தவறு என்று எதிர்­வா­தம் புரிந்த முத­ல­மைச்­சர் பின்­னர் எப்­படி வரவு – – செல­வுத் திட்­டத்­தில் உள்­ள­டக்க மௌன­மாக இணங்­கி­னார்?

இவை­யெல்­லாம் கடந்த காலங்­க­ளில் நடந்­தே­றி­யவை. இப்­போது, தனது கேள்வி பதில் அறிக்­கை­யில் முத­ல­மைச்­சர் முழுப்­பூ­ச­ணிக்­காயைச் சோற்­றில் மறைத்­தி­ருக்­கின்­றார்.

இந்­தத் திட்­டத்­துக்­கான அனு­மதி எல்­லாம் கொழும்பு அர­சி­ட அந்த நிறு­வ­னம் பெற்­றி­ருந்­தது என்றிருக்கிறார். திட்­டம் முத­லீட்­டுச் சபை­யி­னு­டை­ய­து­தான். அதில் எந்த மாற்­றுக் கருத்­துக்­க­ளும் இல்லை. வடக்கு மாகாண சபை­யி­னால் அந்த நிறு­வ­னத்­து ­டன் பேரம் பேச முடி­யாது என்­றும், அவர்­கள் நன்­கொ­டை­யாக தரும் நிதியை ஏற்­க­வேண்­டி­ய­து­தான் என்­றும் முத­ல­மைச்­சர் கூறி­யி­ருக்­கின்­றார்.

இங்­கே­தான் முத­ல­மைச்­சர் பொய்­யைக் கூறி மாட்­டிக் கொண்­டி­ருக்­கின்­றார். கொழும்­பில் திட்­டத்­துக்­கான அனு­ம­தி­கள் எல்­லா­வற்­றை­யும் பெற்­றுக் கொண்ட நிறு­வ­னம் பின்­னர் என்ன தேவைக்­காக வடக்கு மாகா­ண­ ச­பை­யுடன் ஒப்­பந்­தம் செய்­வ­தற்­குச் சென்­றது? இங்­கே­தான் முத­ல­மைச்­சர் முழுப் பூச­ணிக்­காயைச் சோற்­றில் மறைத்­தி­ருக்­கின்­றார்.

முத­லீட்­டுச் சபை­யின் திட்­ட­மாக இருந்­தாலும் கூட, கொழும்பு அர­சின் அனு­ம­தி­யைப் பெற்­றி­ருந்­தா­லும் மாகா­ணக் காணி ஆணை­யா­ள­ர­தும், மாகாண காணி அமைச்­ச­ரி­ன­தும் அனு­மதி கட்­டா­யம் தேவை. அந்த அனு­ம­திக்­காக மேற்­படி நிறு­வ­னம் வடக்கு மாகா­ண­ச­பைக்கு விண்­ணப்­பித்­தி­ருக்­கின்­றது. வடக்கு மாகாண காணி ஆணை­யா­ள­ராக இருந்த பொ.தயா­னந்தா, 2013ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் 5ஆம் திகதி திட்­டத்­துக்கு காணி வழங்க இணங்­கி­யி­ருக்­கின்­றார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி கையெ­ழுத்­திட்டு அனு­மதி வழங்­கி­யி­ருக்­கின்­றார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் அனு­மதி கட்­டா­யம் தேவைப்­ப­டு­கின்ற சூழ­லில் அந்த நிறு­வ­னத்­தி­ ட­மி­ருந்து, வடக்கு மாகாண சபைக்கு பெருந்­தொகை நிதியை சி.எஸ்.ஆர். திட்­டத்­தின் ஊடா­கக் கோரி­யி­ருக்­க­லாம். அதைச் செய்­ய­வில்லை. இவை­யெல்­லா­வற்­றுக்­கும் மேலாக, வடக்கு மாகாண சபை­யு­டன் செய்து கொள்­ளப்­பட்­டது சி.எஸ்.ஆர். ஒப்­பந்­தம் மாத்­தி­ரமே என்று குறிப்­பிட்­டுள்ள முத­ல­மைச்­சர், தனது அனு­மதி அந்த நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டது என்­பதை மூடி மறைத்து விட்­டார். வழ­மை­போன்று இதற்­கும் அர­சி­யல்­சா­யம் பூசி தப்­பித்­துக் கொள்ள முயற்­சித்­தார். ஆனா­லும் அவர் துர­திஷ்டம், முத­ல­மைச்­சர் வழங்­கிய அனு­ம­திக் கடி­தத்தை அதி­கா­ரி­கள், மாகா­ணப் பொதுக் கணக்­காய்­வுக் குழு முன்­பாகப் பகி­ரங்­கப்­ப­டுத்தி விட்­டார்­கள்.

எங்­க­ளால் எது­வுமே செய்­ய­மு­டி­யாது. கொழும்­பின் எல்லா அனு­ம­தி­யு­டன் வந்­தி­ருக்­கின்­றார்­கள் என்று கூறிய முத­ல­மைச்­சர், காணிக்கு அனு­மதி வழங்­கிய கடி­தத்­த­துக்கு என்ன பதில் கூறப் போகின்­றார்? இந்­தக் கையெ­ழுத்து தனது இல்லை என்று கூறப்­போ­கின்­றாரா? அல்­லது சுய­நி­னை­வு­டன் அந்­தக் கையெ­ழுத்தை வைக்­க­ வில்லை என்று கூறப்­போ­கின்­றாரா?

பொய்­யைச் சொல்லி அதை மறைக்க இன்­னொரு பொய்­யைச் சொல்லி இன்று எல்­லாம் பட்­ட­வர்த்­த­ன­மாக வெளிப்­பட்டு நிற்­கின்ற சூழ­லில் முத­ல­மைச்­சர் தொடர்ந்து ஈடாடுவது சரியா?

https://newuthayan.com/story/19/பொய்க்கு-மேல்-பொய்-சொல்லும்-விக்னேஸ்வரன்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.