Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி: துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு

Featured Replies

ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி: துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு

பழங்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆஸ்திரேலியாவில் அண்மையில் ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி இருந்ததாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் அச்சம் ஏற்பட்டது எனவே அது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சவுத் வேல்ஸ், கியுன்ஸ்டான்ட் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

ஸ்ட்ராபெரி பழங்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.

அவ்வாறு ஊசி இருந்த ஒரு பழத்தை உண்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், ஊசி இருந்த பழத்தை ஒன்பது வயது சிறுவன் ஒருவனும் உண்டிருந்தாலும், அவன் ஊசியை விழுங்கவில்லை.

பழங்கள்படத்தின் காப்புரிமைJOSHUA GANE

தனது நண்பர் ஒருவர் ஊசி ஏற்றப்பட்டிருந்த பழத்தை உண்டதால் கடுமையான வயிற்று வலியில் துடித்ததாக, ஜோஷ்வா என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இதுபோன்ற பல தகவல்கள் வெளியானதை அடுத்து பல்வேறு பிராண்டு ஸ்ட்ராபெரிகள் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. நியூசிலாந்தின் மிகப்பெரிய வணிக நிறுவனம் ஒன்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலிய ஸ்ட்ராபெரி பழங்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டது.

இந்த விசயத்தில் துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசுத்தொகையை குயின்ஸ்லாண்ட் மாகாண அரசு அறிவித்துள்ளது.

பழங்கள்படத்தின் காப்புரிமைJOSHUA GANE

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலிய உணவுத்துறை அமைச்சர் கிரெக் ஹண்ட் உத்தரவிட்டிருக்கிறார்.

"இது மிகவும் மோசமான குற்றம் என்றும், இது பொதுமக்கள் மீதான தாக்குதல்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.

https://www.bbc.com/tamil/global-45547640

  • தொடங்கியவர்

‘ஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி’ வைத்தால் 15 ஆண்டு சிறை; தீவிரவாதச் செயல்: ஆஸி.பிரதமர் ஆவேசம்

 
strwaberry

ஸ்ட்ராபெரி பழத்தில் வைக்கப்பட்ட ஊசி எடுக்கப்பட்ட காட்சி   -  படம்: ராய்டர்ஸ்

ஸ்ட்ராபெரி பழத்தில் மெல்லிய ஊசியை மறைத்து வைப்பது தீவிரவாதச் செயல். இந்தச் செயலைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையாக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வகை செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் எச்சரித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் ஸ்ட்ராபெரி பழங்களில் மர்ம நபர்கள் மெல்லிய ஊசியை நுழைத்து மறைத்துவிடுவதாக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

 

ஸ்ட்ராபெரி பழங்களை சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கிச் சென்று சாப்பிட்ட 3-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொண்டையிலும், வயிற்றிலும் ஊசி சிக்கி பெரும் அவதிக்குள்ளானார்கள். மேலும், பலர் ஸ்ட்ராபெரி பழங்களைச் சாப்பிடும் போது, அதில் ஊசி இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஃபேஸ்புக்கிலும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்திருந்தனர்.

சவுத்வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா மாநிலங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையான ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், ஆஸ்திரேலியாவில் இருந்து தரமான ஸ்ட்ராபெரி பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டுவந்த நிலையில், தற்காலிகமாகத் தடைவிதித்து நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி வைக்கும் விவகாரம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் இன்று நிருபர்களிடம் சிட்னியில் அளித்த பேட்டியில் கூறுகையில், ''மக்கள் சாப்பிடும் ஸ்ட்ராபெரி பழங்களில் மெல்லிய ஊசியை மறைத்து வைக்கும் செயல் தீவிரவாதத்தின் ஒரு பகுதி. இதுவரை 20-க்கும் மேற்பட்ட பழங்களில் ஊசி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதுபோன்று இதற்கு முன் நடந்தது இல்லை. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் கோழைகள். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்படும்.

விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்தச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வழி செய்வோம். இந்தச் செயலால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஸ்ட்ராபெரி பழங்கள் பறிப்பதும், விற்பனை செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்''  என்று தெரிவித்தார்.

இருப்பினும் ஸ்ட்ராபெரி பழங்களைச் சாப்பிடும் முன் மக்கள் அதை வெட்டிச் சோதித்த பின் சாப்பிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

https://tamil.thehindu.com/world/article24984480.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.