Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்

Featured Replies

இலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாததால் பெரும் திண்டாட்டம்

 

இலங்கையில் கடந்த 1983 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். 01.jpgதமிழகத்தில்  119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள  இலங்கை அகதிகள் முகாம்களில் ஒரு இலட்சத்தி இரண்டாயிரம் பேர் வசித்து வருகின்றனர். 

ஆனால்  மண்டபம் முகாமில் மட்டும் தற்போது 533 குடும்பங்களில் மொத்தம் 1,673 பேர் வசித்து வருகின்றனர்.

மண்டபம் முகாமில் வசித்து வரும்  இலங்கை அகதிகளுக்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக உதவித்தொகை வழங்கப்படாததால்  குழந்தைகள் முதியவர்கள் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு  கடும் அவதியுற்று வருகின்றனர். 

மேலும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப் பட்டுள்ள சுமார் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசுவழங்கும் உதவித்தொகை வழங்கப்படாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்து வருவதாக இலங்கை அகதிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் கூறுகையில்,

தமிழக அரசால் வழங்கப்படும்  உதவித்தொகை முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதிக்குள் வழங்கப்பட்டு வந்தது.

 ஆனால் செப்டம்பர் மாதத்திற்க்கான உதவித்தொகை இன்று வரை வழங்கப்படவில்லை இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை.

தமிழக அரசால் வழங்கப்படும் உதவிதொகையை வைத்து உணவு பொருள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கட்டணம் ஆகிய செலவுகள் செய்து வருகிறோம்.

 ஆனால் இந்த மாதம் உதவி தொகை கிடைக்காததால் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதியுற்று வருகிறோம்,அரசு வழங்கும் உதவிதொகையை அதிகாரிகள் தர மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அகதிகள் மறு வாழ்வுத்துறை உதவி ஆட்சியர்  ராமசந்திரனிடம் கேட்ட போது,

எதிர்வரும் திங்கள் கிழமை மண்டம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 533 குடும்பங்களைச்சேர்ந்த 1,673 பேருக்கு ரூபா 12 இலட்சத்து 76 ஆயிரம் வழங்கப்படும் எனவும்  கால தாமததை தவிர்க்க , ஒக்டோர் மாதம் முதல் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.virakesari.lk/article/40895

  • தொடங்கியவர்

 

உதவித்தொகை கிடைக்காமல் அவதியுறும் இலங்கை அகதிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போங்கோ என்று சொல்லாமல் சொல்லுகினம் போல் இருக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.