Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலைத்தீவு ஜனாதிபதி தேர்தலின் வாக்கெடுப்பு ஆரம்பமானது

Featured Replies

மாலைத்தீவு ஜனாதிபதி தேர்தலின் வாக்கெடுப்பு ஆரம்பமானது

 

 
 

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலின் சற்றுமுன் வாக்கெடுப்பு  ஆரம்பமானது.. இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் இரண்டாவது முறையாகவும் போட்டியிடுகின்றார்.

vote.jpg

இன்று நடைபெறும் தேர்தல் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இத்தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளன.

கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் முற்போக்குக் கட்சி வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறியது. எனினும், தற்போதைய அரசியல் தளம்பல் நிலை காரணமாக, எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதென சரியாக கணிப்பிட முடியாதுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/41000

  • தொடங்கியவர்

மாலைதீவு தேர்தல் – இலங்கையிலும் வாக்குப்பதிவு

 

 

moldivs.jpg

மாலைதீவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றுவருகின்ற நிலையில் கொழும்பிலுள்ள வதிவிடத் தூதரகத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

ஜனாதிபதி தேர்தலில், மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யாமின் மீண்டும் போட்டியிடுவதுடன் அவரை எதிர்த்து இப்ராஹிம் மொஹமட் களமிறங்கியுள்ளார்.

அந்தவகையில் இலங்கை, இந்தியா மற்றும் பிரித்தானியா, மலேசிய போன்ற நாடுகளில் இதற்காக 472 வாக்கு பெட்டிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

அதில் கொழும்பில் மட்டும் 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றது.

இலங்கையில் வசித்துவரும் மாலைதீவு பிரஜைகள் சுமார் 2700 பேர் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணி வரை வாக்குப்பதிவுகள் நடைபெறும் எனவும் தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகள் நாளை அதிகாலை 3 மணிக்கு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dnws9EAVsAE1RID.jpg

 

athavan-colo1.jpg

athavan-colo.jpg

http://athavannews.com/மாலைதீவு-தேர்தல்-இலங்கை/

  • தொடங்கியவர்

மாலைத்தீவு தேர்தலில் அதிக அக்கறை செலுத்தியுள்ள சீனா – இந்தியாவுக்கும், மேற்குலகிற்கும் பேரிடி!

 

Maldives-vote-expected-keep-hardline-Yameen-in-power-720x450.jpg

மாலைத்தீவு ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிலையில், அதில் கடும்போக்கு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அதிகாரத்தில் தனது பிடியை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், எதிர்க்கட்சி மற்றும் சர்வதேச குழுக்கள் அவரின் வெளிப்படைத் தன்மை மற்றும் எதிர்ப்பை அடக்குதல் போன்ற கொள்கைகளை கண்டித்துள்ளன.

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள முஸ்லீம் பெரும்பான்மையை கொண்ட மாலைத்தீவு, அதன் பாரம்பரிய பங்காளியான இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் ஒரு நாடக அரங்காக மாறிவிட்டது. பெய்ஜிங்கின் அதிகரித்து வரும் செல்வாக்கு தொடர்பாக மேற்கு நாடுகளில் கவலை தற்போது வௌிப்பட்டு வருகின்றது.

யாமீனின் அரசாங்கம் அவரது அரசியல் எதிரிகளாக கருதும் சிலரை குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மவுமூன் அப்துல் கயூம் போன்றோரை சிறையடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

பயங்கரவாதம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பாக அவர்கள் மீது குற்றம்சுமத்தியே இந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலில் அப்துல்லா யாமீன் இரண்டாவது முறையாகவும் போட்டியிடுகின்றார். கடந்த சில வாரங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம், மாலைத்தீவு தலைவர்கள் சிலருக்கு எதிராகத் தடைகளையும் விதித்திருந்தது.

இரண்டாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி அப்துல்லா யாமீன், 24 சுற்றுலா நிறுவனங்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்ற உதவியுள்ளதாகவும் குறித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்க்கட்சி வேட்பாளரின் அலுவலகத்தில் நேற்று மாலை பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், வெளிப்படைத்தன்மையற்றதாக இத்தேர்தல் நடைபெற்றதாக சர்வதேச அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன், சீன நாட்டுடன் நட்புறவைப் பேணுவதோடு, அந்தநாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் மொஹமட் சொலிஹ், இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் நட்புறவைக் கொண்டுள்ளார். குறிப்பாக, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்த தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளன.

கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் முற்போக்குக் கட்சி வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறியது.  எனினும், தற்போதைய அரசியல் தளம்பல் நிலை காரணமாக, எந்தக்கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதென சரியாக கணிப்பிட முடியாதுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மாலைத்தீவு தற்போது பாரிய கடன் தொல்லைக்குள் சிக்கியுள்ளதாகவும், இதனால் தேர்தலில் சீனாவிற்கு பாரிய அக்கறையுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் அண்மையில் தெரிவித்திருந்தார்.

மாலைதீவு தொடர்பில் சீனாவிற்கு பாரிய அக்கறையுள்ளது. நாங்கள் தற்போது கடன் தொல்லைக்குள் சிக்கியுள்ளோம். இது ஒரு பாரிய செயற்றிட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. முதலாவதாக விலை மனு கோரலின்றி குத்தகை வழங்கப்படுகின்றது. அதன்பின்னர் குத்தகை விலையை அதிகரித்து ஏனைய போட்டியாளர்களின் சந்தர்ப்பத்தை இழக்கச் செய்கின்றனர்.

சீனாவின் வர்த்தக வங்கிகள் ஊடாக பாரியளவில் கடன்களைப் பெற்றுக்கொள்கின்றனர். அந்தக் கடனை எப்போது திருப்பி செலுத்துவார்களோ. எங்களுக்கு முடியாது போனாலும் கடனைத் திருப்பி செலுத்தியாக வேண்டும். இறுதியில் நாட்டின் இறையான்மை அழிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

http://athavannews.com/மாலை-தீவு-தேர்தலில்-அதிக/

  • தொடங்கியவர்

மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியின் இப்ராகிம் முகமது வெற்றிபெற்றதாக அறிவிப்பு

 

 
 

மாலைதீவில் நேற்று இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Ibrahim-Mohamed-Solih.jpg

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காலை 8 மணிக்கு மாலைதீவு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. இந்நிலையில் மாலை வாக்குப்பதிவு முடிந்த பின்னர் 92 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், மாலைதீவு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக வீதிகளில் மாலைதீவின் தேசிய கொடியை அசைத்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

எனினும், தேர்தல் முடிவு குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பு ஒரு வார காலத்திற்கு பிறகு தான் அறிவிக்கப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் கட்சிகள் இந்த ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யமுடியுமெனவும் அந்நாட்டு தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த கால அவகாசம் முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என வெற்றி பெற்ற எதிர்கட்சி அச்சம் தெரிவித்துள்ளது.

ஆயிரத்து 192 குட்டித்தீவுகளை கொண்ட மாலைதீவில் சமீப காலமாக அரசியல் ஸ்திரமற்ற சூழல் உள்ளது. அங்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய அந்த நாட்டின் உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது.  

ஆனால் இந்த தீர்ப்பை தற்போதைய ஜனாதிபதி யாமீன் அப்துல் கயூம் ஏற்கவில்லை. இது அங்கு அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்தது. ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகள் முந்தைய தீர்ப்பை திரும்பப்பெற்றனர்.

இந்த நிலையில் அங்கு நேற்றைய தினம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்துல் கயூம், மாலைதீவு முன்னேற்ற கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார். 

அவரை எதிர்த்து இலங்கையில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், மாலைதீவு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அவரது கட்சி சார்பில் இப்ராகிம் முகமது போடியிட்ட நிலையில் தற்போது வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/41045

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.