Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திசை மாறும் சட்டப் போராட்டம்

Featured Replies

திசை மாறும் சட்டப் போராட்டம்

Untitled-4-25430fce5a8ff8a2b9e721e87caf9030ca2f3eef.jpg

 

-கபில்

இன்னும் ஒரு மாதம் அமைச்­ச­ராக இருந்து டெனீஸ்­வரன் எதனைச் சாதித்து விடப்­போ­கிறார்- அல்­லது டெனீஸ்­வ­ரனை இன்னும் ஒரு மாதம் பத­வியில் இருக்க அனு­ம­திப்­பதால் தான் விக்­னேஸ்­வ­ர­னுக்கு என்ன கெடுதல் வந்து விடப் போகி­றது?

இன்னும் ஒரு மாதத்­துக்குப் பின்னர் வடக்கு மாகா­ண­சபை செய­லி­ழந்து போகும். அதற்குப் பின்னர் ஆளு­நரின் கையில் அதி­காரம் வரப்­போ­கி­றது. அவர் அந்த அதி­கா­ரத்தை எவ்­வாறு பயன்­ப­டுத்­துவார் என்ற கேள்வி உள்­ளது

வடக்கு மாகாண சபையின் ஆயுள்­காலம் முடி­வ­டைந்­தாலும் கூட, அதன் அமைச்சர் பத­வியை முன்­வைத்து தொடங்­கப்­பட்ட சட்டப் போராட்டம் ஓய்­வுக்கு வரும் அறி­கு­றிகள் ஏதும் இருப்­ப­தாகத் தென்­ப­ட­வில்லை.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக, அமைச்சர் பத­வியில் இருந்து நீக்­கப்­பட்ட டெனீஸ்­வரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தொடுத்த வழக்கு திக்குத் திசை மாறி எங்­கெங்கோ போய்க் கொண்­டி­ருக்­கி­றது.

இதனால், யார் யாரோ வெல்லாம் சிக்­க­லுக்குள் வந்து மாட்டிக் கொள்ளும் நிலையும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இப்­போது இந்த விவ­காரம் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம், உச்­ச­நீ­தி­மன்றம் என இரண்டு இடங்­களில் விசா­ர­ணை­களில் இருக்­கி­றது.

மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில், டெனீஸ்­வரன் தரப்பில், தம்மை முத­ல­மைச்சர் பத­வியில் இருந்து நீக்­கு­வ­தற்கு முத­ல­மைச்சர் எடுத்த நட­வ­டிக்கை தவறு என உத்­த­ர­விடக் கோரித் தாக்கல் செய்­யப்­பட்ட முத­லா­வது மனு விசா­ர­ணையில் இருக்­கி­றது.

அந்த மனு மீது மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் இடைக்­கால உத்­த­ரவைப் பிறப்­பித்து, இன்­னமும் டெனீஸ்­வரன் அமைச்­ச­ரா­கவே இருக்­கிறார், அவரை நீக்­கிய உத்­த­ர­வுகள் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்று கூறி­யி­ருக்­கி­றது.

இந்த உத்­த­ரவை செயற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­காமல், நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­துள்ளார் என்று முத­ல­மைச்சர் மீதும், இரண்டு அமைச்­சர்கள் மீதும் டெனீஸ்­வரன் தொடுத்த இரண்­டா­வது வழக்கும் இங்கு இருக்­கி­றது.

ஆனால், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் இடைக்­கால உத்­த­ர­வுக்கு எதி­ராக, முத­ல­மைச்சர் தாக்கல் செய்த மனு உச்­ச­நீ­தி­மன்­றத்தில் விசா­ர­ணையில் இருக்­கி­றது.

இதற்­கி­டையில், இரண்டு தரப்பும் அவ்­வப்­போது ஆட்­சேப மனுக்­களைத் தாக்கல் செய்து விசா­ர­ணையின் போக்கை மாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன.

அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரங்­களில் விசா­ர­ணை­களை நடத்த- உத்­த­ர­வு­களைப் பிறப்­பிக்க மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­துக்கு அதி­காரம் உள்­ளதா என்­றொரு சிக்­கலும் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இன்­னொரு பக்கம் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள முடி­யாது என்று முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தரப்பில் தாக்கல் செய்­யப்­பட்ட மனுவும் மேல்­மு­றை­யீட்டு மனுவில் விவா­திக்­கப்­ப­டு­கி­றது.

இது போதா­தென்று, மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் அமைச்சர் அனந்தி சசி­த­ர­னுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட குற்றப் பத்­திரம் ஆங்­கி­லத்தில் இருப்­ப­தா­கவும், ஆங்­கிலம் தெரி­யாது என்­பதால், அதனை அவரால் வாசித்து விளங்கிக் கொள்ள முடி­யாது என்றும் அவ­ரது சட்­டத்­த­ரணி முன்­வைத்த வாதம் வேறு புதிய பிரச்­சி­னையை கிளப்­பி­யி­ருக்­கி­றது.

அமைச்சர் அனந்தி சசி­த­ர­னுக்கு ஆங்­கிலம் தெரி­யாது என்ற வாதத்தை நீதி­மன்றம் நிரா­க­ரித்­துள்ள அதே­வேளை, அவர் ஜெனீ­வாவில் ஆங்­கி­லத்தில் நிகழ்த்­திய உரை ஆதா­ரத்தை வைத்து, நீதி­மன்­றத்தை தவ­றாக வழி­ந­டத்­தினார் என அனந்தி மீது இன்­னொரு அவ­ம­திப்பு வழக்குப் போடு­வ­தற்கு டெனீஸ்­வ­ரனின் சட்­டத்­த­ரணி அச்­சாரம் போட்­டி­ருக்­கிறார்.

ஆக, வடக்கு மாகாண அமைச்­ச­ரவை தொடர்­பான பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு நீதி­மன்றப் படி­யே­றிய தரப்­புகள் இப்­போது, வேறெ­தையோ தேடிக் கொண்­டி­ருக்­கின்ற நிலை தான் தோன்­றி­யி­ருக்­கி­றது.

வடக்கு மாகாண சபையின் ஆயுள்­காலம் முடி­யப்­போ­கி­றது. அதற்குள் அமைச்­ச­ர­வையைக் கூட்டி நிலு­வையில் உள்ள திட்­டங்­க­ளுக்கு அங்­கீ­காரம் அளித்து, நிர்­வாக, நடை­முறைச் சிக்­கல்­களைத் தவிர்க்­கவும், மக்­க­ளுக்­கான பணி­களில் தடங்­கல்கள் வராமல் செய்­வதும் தான் இன்­றைய முக்­கி­ய­மான தேவை.

இன்னும் ஒரு மாதத்­துக்குப் பின்னர் வடக்கு மாகா­ண­சபை செய­லி­ழந்து போகும். அதற்குப் பின்னர் ஆளு­நரின் கையில் அதி­காரம் வரப்­போ­கி­றது. அவர் அந்த அதி­கா­ரத்தை எவ்­வாறு பயன்­ப­டுத்­துவார் என்ற கேள்வி உள்­ளது.

எனவே, எஞ்­சி­யுள்ள குறு­கிய காலத்­துக்­குள்­ளா­வது, வடக்கு மாகா­ண­சபை தனது உச்­ச­வி­னைத்­தி­றனை மக்­க­ளுக்­கான திட்­டங்­க­ளுக்கும், செயற்­பா­டு­க­ளுக்கும் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது.

வடக்கு மாகாண சபையின் செயற்­பா­டுகள் நீதி­மன்ற வழக்­கு­களால் கடந்த மூன்று மாதங்­க­ளா­கவே முழு­மை­யாக இருக்­க­வில்லை. அமைச்­சர்கள் வாரியம் கூடா­ததே அதற்குக் காரணம்.

பொது­வாக ஆட்சி நிர்­வாக கட்­ட­மைப்­புகள் தமது பத­விக்­கா­லத்தின் இறு­திக்­கட்­டத்தில் தான், வேக­மாகச் செயற்­பட முனை­வ­துண்டு. ஆனால் வடக்கு மாகா­ண­சபை மாத்­திரம், தனது கடைசிக் கால­கட்­டத்­திலும் நத்­தை­வே­கத்தில் நடை போடு­வ­தி­லேயே குறி­யாக இருக்­கி­றது.

இன்னும் ஒரு மாதம் அமைச்­ச­ராக இருந்து டெனீஸ்­வரன் எதனைச் சாதித்து விடப்­போ­கிறார்- அல்­லது டெனீஸ்­வ­ரனை இன்னும் ஒரு மாதம் பத­வியில் இருக்க அனு­ம­திப்­பதால் தான் விக்­னேஸ்­வ­ர­னுக்கு என்ன கெடுதல் வந்து விடப் போகி­றது?

எது­வுமே இல்லை. இரண்டு தரப்­பு­க­ளுமே ஈகோ­வினால் தான் இந்­த­ள­வுக்கு இழு­ப­றிப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

தம் மீதுள்ள ஈகோ குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொள்­வ­தற்­காக- இரண்டு தரப்­புமே கூறிக்­கொள்­கின்ற விடயம் தான், நாங்கள் மாகாண சபைக்கு அதி­காரம் இல்லை என்­பதை நிரூ­பிக்­கவே வழக்கை நடத்­து­கிறோம் என்­ப­தாகும்.

மாகாண சபைக்கு அதி­காரம் உள்­ளது என்று இவர்­க­ளுக்கு யார் சொன்­னது? அதனை நீதி­மன்­றத்தில் ஏறி நிரூ­பி­யுங்கள் என்று வாக்­க­ளித்த மக்கள் கேட்­டார்­களா?,

இந்த வழக்­கினால் தான் மாகாண சபைக்கு அதி­காரம் இல்லை என்று நிரூ­பிக்க வேண்டும் என்­றில்லை. அது ஏற்­க­னவே தெரிந்த விடயம் தான்.

மாகா­ண­ச­பைக்கு கூடுதல் அதி­கா­ரங்­களைத் தர­மு­டி­யாது என்று அர­சாங்­கத்தில் உள்­ள­வர்­களே கூறு­கி­றார்கள். அதுவே அதி­கா­ரங்கள் அற்ற சபை தான் இது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

அப்­ப­டி­யி­ருக்க, மிக முக்­கி­ய­மா­ன­தொரு தரு­ணத்தில் வீண் சட்டப் போராட்­டத்தில் தமிழர் தரப்பில் உள்­ள­வர்கள் ஏன் காலத்தைக் கழிக்க வேண்டும்? (6ஆம் பக்கம் பார்க்க)

 

விட்­டுக்­கொ­டுப்­பதால் தமது மதிப்புக் கெட்டு விடும் என்று இரண்டு தரப்­பு­க­ளுமே கரு­து­கின்­றன. அதனால் சட்டப் போராட்­டத்தை தொடர்ந்து முன்­னெ­டுப்­பதில் தீவி­ர­மாக இருக்­கின்­றன.

முன்னாள் நீதி­ய­ர­ச­ரான, விக்­னேஸ்­வரன் நீதி­மன்றப் படிக்­கட்டில் ஏறு­வது வடக்கு மாகாண சபைக்கு அவ­மானம் என்று அவைத்­த­லைவர் சிவிகே சிவ­ஞானம் கூறி­யி­ருந்தார். அவரால் சில சம­ரச முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனாலும் கடைசி வரையில், முத­ல­மைச்சர் தரப்பில் அதற்கு சாத­க­மான பதில் கிடைக்­க­வில்லை.

அவர் தாம் ஒரு நீதி­ய­ரசர் என்­பதை தொடர்ந்து வலி­யு­றுத்தி வந்­தாலும், தாம் வழக்­கிற்­காக நீதி­மன்றில் எழுந்து நின்று சாட்­சியம் அளிப்­பது கௌர­வத்தைப் பாதிக்கும் என்­பதை ஏன் கருத்தில் கொள்ளத் தவ­று­கிறார் என்­பது தான் பல­ருக்கும் வியப்பு.

அதை­விட, இப்­போது விக்­னேஸ்­வ­ரனும் டெனீஸ்­வ­ரனும் நடத்­து­கின்ற சட்டப் போராட்டம் அவர்­களின் பிர­தான வழக்­கு­களை விட்டு வெளியே சென்று கொண்­டி­ருக்­கின்­றது என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை விசா­ரிக்க மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­துக்கு அதி­காரம் உள்­ளதா என்­பது ஒன்று, அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்­பாக தீர்ப்­ப­ளிக்க உச்­ச­நீ­தி­மன்­றத்­துக்கு அதி­காரம் இருக்­கி­றதா என்­பது இன்­னொன்று.

இந்த இரண்டு விட­யங்­களும் முத­ல­மைச்­ச­ருக்கோ, டெனீஸ்­வ­ர­னுக்கோ தமது வழக்­கு­களில் வெற்­றி­பெறத் தேவை­யான விட­யங்­க­ளாக இருக்­கலாம். ஆனால், இவர்­களை வடக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்த மக்­க­ளுக்கு அவ­சி­ய­மா­னதா? என்றால் நிச்­ச­ய­மாக இல்லை.

வடக்கு மாகாண சபைக்கு மக்கள் எதற்­காக நீதி­ய­ர­சர்கள், சட்­டத்­த­ர­ணிகள் கல்­வி­மான்­களை தெரிவு செய்­தார்கள்?

வடக்கு மாகா­ணத்­துக்­கான உரித்­து­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தமது சட்ட வித்­து­வங்­களைப் பயன்­ப­டுத்திக் கொள்­வார்கள், வடக்கின் அபி­வி­ருத்­திக்கும் வளர்ச்­சிக்கும் தமது நிபு­ணத்­து­வத்தை பிழிந்து கொடுப்­பார்கள் என்­றெல்லாம் எதிர்­பார்த்துத் தான், இவர்­களை மக்கள் தெரிவு செய்­தார்கள்.

ஆனால் கடை­சியில் நடந்­தது என்ன? வடக்கு மாகாண சபைக்­கான அதி­காரம் அல்­லது உரித்­துக்­காக எத்­தனை வழக்­குகள் போடப்­பட்­டன? இவர்­களின் சட்ட வித்­துவம் எந்­த­ள­வுக்கு மாகாண சபைக்குப் பயன்­பட்­டது?

எத்­தனை நிலை­யியல் கட்­ட­ளை­களை இவர்­களால் உரு­வாக்க முடிந்­தி­ருக்­கி­றது?

எத்­த­னையோ விட­யங்­களில் மத்­திய அரசின் தலை­யீ­டுகள் இருந்த போதிலும், அதற்கு எதி­ராக சட்ட ரீதி­யாக எத்­தனை போராட்­டங்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன?

இந்தக் கேள்­வி­க­ளுக்­கான பதில், ஏமாற்றம் தான்.

அபி­வி­ருத்தி விட­யத்­திலும் இதே­நிலை தான். வடக்­கிற்கு முன்­மொ­ழி­யப்­பட்ட திட்­டங்கள் பல முடங்கிப் போன­தற்கும் வடக்கு மாகாண சபையில் உள்­ள­வர்கள் காரணம் என்­பதை மறந்து விட முடி­யாது.

ஏதேதோ சாக்குப் போக்­கு­களைச் சொல்லி முத­லீ­டுகள், திட்­டங்கள் பல கைவி­டப்­படும் நிலை தான் ஏற்­பட்­டது.

இப்­படிப் பல நிறை­வேற்­றப்­பட வேண்­டிய வி்டயங்கள் இருந்த போதும், அதனை தமது பத­விக்­கா­லத்­துக்குள் நிறை­வேற்­று­வதை விட்டு விட்டு, நீதி­மன்­றங்­க­ளுக்கும், சட்ட ஆலோசனைகளுக்கும் அலைந்து கொண்டிருப்பதால் இழப்பு வடக்கிலுள்ள மக்களுக்குத் தான்.

இந்த வழக்குகளால் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய உழைப்பும், முயற்சியும், நேரமும், ஏன் நிதியும் கூட, வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமது பதவிக்காலம் முடிந்து ஓய்வில் இருக்கும் போது இப்படி வழக்குகளை நடத்திக் கொண்டிருந்தால் அதனை யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால் மக்கள் பணிக்காக தெரிவு செய்யப்பட்ட காலத்தை, அதற்குப் பயன்படுத்தாமல், தேவையற்ற சட்டப் போராட்டத்துக்காக பயன்படுத்திக் கொள்வதும் கூட ஒரு வகையில் அரசியல் ஏமாற்று வேலை தான்.

மாகாண சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் தான் இருக்கின்றன. இதனைத் தெரிந்து கொண்டு தான், அதற்குள் நீச்சலடிக்கக் குதித்தவர்கள், மைல் கணக்கில் நீச்சலடித்துப் பயணிக்க எத்தனிக்கிறார்கள். அவ்வாறாயின் அவர்கள் கடைசியில் கரையில் தான் ஏறி நிற்க வேண்டியிருக்கும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.