Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம் திரும்பும் அகதிகள்- எதிர் நோக்கும் பிரச்சினைகள்!!

Featured Replies

ஈழம் திரும்பும் அகதிகள்- எதிர் நோக்கும் பிரச்சினைகள்!!

 

இந்­தி­யா­வில் இருந்து இலங்­கைக்­குத் திரும்­பு­கின்ற ஈழ அக­தி­கள் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­கள் பற்­றிய பேச்­சா­டல்­கள் எழுந்­துள்­ளன. ஈழத்­துக்­குத் திரும்­பு­கின்ற இந்த அக­தி­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி­யா­கத் தீர்வை ஏற்­ப­டுத்­து­ வ­தன் மூலமே இந்­தி­யா­வில் தஞ்­ச­ம­டைந்­தி­ருக்­கின்ற ஈழ அக­தி­கள் அனை­வர் மத்­தி­யி­லும் தாய­கத்­துக்­குத் திரும்­பும் மனோ­நி­லையை உரு­வாக்­கிக் கொள்ள முடி­யும் எனச் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

இலங்­கை­யில் இடம்­பெற்ற போரின் கார­ண­மாக வடக்­குக் கிழக்­கில் இருந்­து­வெ­ளி­யே­றிய கிட்­டத்­தட்ட 3இலட்­சம் மக்­கள் இந்­தி­யா­வில் தஞ்­ச­மைந்­தி­ருந்­த­னர். அவர்­கள் தமது தாய் நிலத்தை நோக்கி நகர்­வ­தற்­கான சூழல் தற்­பொது ஏற்­பட்டு வரு­கின்­றது. ஆனால், அங்­கி­ருந்து ஈழம்­தி­ரும்­பிய அக­தி­கள் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­க­ளா­னவை இந்­தி­யா­வில் மீத­மி­ ருக்­கின்ற ஈழ அக­தி­க­ளி­டத்­தில் ஈழம் திரும்­பு­வது குறித்­துத் தயக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பது கவ­னிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இனக்­க­ல­வ­ரத்­து­டன் ஆரம்­ப­மான
அக­தி­க­ளின் நகர்வு
1983ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் ஏற்­பட்ட கல­வ­ரத்­தை­யொட்­டியே ஈழத் தமி­ழர்­க­ளின் புலப்­பெ­யர்­வு­கள் ஆரம்­பித்­தி­ருந்­தன. அந்த வகை­யில் அவர்­கள் அயல் நாடான இந்­தி­யா­வுக்­குச் சென்­றும் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­த­னர். அவர்­க­ளில் பெரும்­பா­ல­ன­வர்­கள் நாட்­டுக்­குத் திரும்­பிக்­கொண்­டி­ ருக்­கின்ற நிலை­யில், இந்­தி­யா­வுக்­குத் தப்­பி­யோ­டி­ய­வர்­க­ளில் கிட்­டத்­தட்ட 15ஆயி­ரம் பேர் மட்­டுமே போர் முடி­வ­டைந்த பின்­ன­ரான 8ஆண்­டு­க­ளில் தாய­கம் திரும்­பி­ யுள்­ள­னர். ஏனை­யோர் தாய­கம் திரும்­பும் ஆர்­வத்­தில் உள்­ள­னர். ஆனால், தாய­கம் திரும்­பிய மக்­க­ளி­ன­தும், தாய­கம் திரும்­பு­ வ­தற்­குத் தயா­ரா­க­வுள்ள மக்­க­ளி­ன­தும் அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­ தில் உரி­ய­த­ரப்­பி­னர் காட்­டும் தாம­தம் இந்த மக்­கள் தாய­கம் திரும்­பு­வ­தில் ஏற்­ப­டு­கின்ற தாம­தத்­துக்கு அடித்­த­ள­மி­டு­கின்­றது.

இருப்­பி­ட­மற்ற நிலை
1990ஆம் ஆண்டு வடக்­கில் ஆரம்­ப­மான இரா­ணுவ நட­வ­டிக்­கை­யால் எல்­லை­யோ­ரக் கிரா­மங்­கள் பெரி­ய­ள­வுக்கு இரா­ணுவ முகாம்­க­ளால் நிறைந்­தன. இந்­தப் பகுதி மக்­களே இன்­று­வரை தாய­கம் திரும்­பா­மல் இருக்­கி­றார்­கள். 1990ஆம் ஆண்­டில் இருந்து இன்று வரை­யான 30வரு­டங்­க­ளில் மக்­க­ளின் பயன்­பா­டு­கள் இல்­லா­ம­லி­ருக்­கின்­றன அந்­தப் பகு­தி­கள். அங்கு பெரி­ய­ள­வில் காடு­கள் வளர்ந்­து­விட்­டன.

எல்­லை­யோ­ரக் கிரா­மங்­க­ளின் நிலங்­க­ளுக்கு உறு­தி­கள் கிடை­யாது. காணி அனு­ம­திப் பத்­தி­ரங்­களே உண்டு. பெரிய காடு­கள் வளர்ந்த பிர­தே­சம் என்ற ஒரே கார­ணத்­தால் அந்­தப் பிர­தே­சங்­களை வன­வ­ளத் திணைக்­க­ளம் ஆக்­கி­ர­மித்­துள்­ளது. அந்த மக்­கள் திரும்பி வந்த நிலை­யில், மீளக்­கு­டி­ய­மர நிலம் இன்றி உற­வு­க­ளின் வீட்­டில் மீண்­டும் அகதி வாழ்வே வாழ­வேண்­டிய அவ­லம் ஏற்­ப­டு­கின்­றது.

வச­தி­களை வழங்­கு­வ­தில் கால­தா­ம­தம்
நிலம் உள்ள மக்­க­ளுக்கு இருப்­பிட வசதி, வாழ்­வா­தார வச­தி­களை வழங்­கு­வ­தற்கு ஏற்­ப­டும் கால தாம­தம் அவர்­களை மன விரக்­திக்கு இட்­டுச் செல்­கின்­றது. இவ்­வாறு ஒரு குடும்­பத்­துக்கு வீடு வழங்­கு­வ­தற்கு ஏற்­பட்ட கால தாம­தம் யாழ்ப்­பா­ணம் – காரை­ந­க­ரில் ஒரு­வர் தவ­றான முடி­வெ­டுத்­துத் தனது உயிரை மாய்க்­கும் அள­வுக்­குத் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இத­னால், தாய­கம் திரும்­பி­யி ­ருக்­கின்ற பலர் இந்­தி­யா­வுக்­கான நுழை­வி­சை­வைப் பெற்று மறு­ப­டி­யும் இந்­தி­யா­வுக்­குத் திரும்­பிச் செல்­வ­தற்கு முயற்­சிக்­கும் சம்­ப­வங்­க­ளும் இடம்­பெற்­றுள்­ளன. இதன் பிர­தி­ப­லிப்­பாக அந்­தக் குடுப்­பத்­துச் சிறு­வர்­க­ளின் கல்­வி­யில் நெருக்­கடி ஏற்­ப­டு­வது உள்­ளிட்ட பல பிரச்­சி­னை­கள் அக­தி­க­ளைச் சூழ்ந்து கொள்­கின்­றன.

கல்­வி­யில் பார­பட்­சம்
இந்­தி­யா­வில் கல்வி கற்­றுத் தேர்ச்சி பெற்­ற­வர்­கள் இலங்­கை­யில் வேலை வாய்ப்­பில் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தும் தாய­கம் திரும்­பி­ய­வர்­கள் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை யா­க­வி­ருக்­கின்­றது. இந்­தி­யா­வி­லி­ருந்து தாய­கம் திரும்­பிய, வவு­னி­யா­வைச் சேர்ந்த செல்வி. கிரு­சிகா பால­சிங்­கம் என்­ப­வர் இத்­த­கைய பார­பட்­ச­தத்­தால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வர். அவர் தனது பாதிக்­கப்­பட்­டமை பற்றி இவ்­வாறு பகிர்ந்து கொண்­டார், ‘போர் கார­ண­மாக 2008ஆம் ஆண்­டில், எனக்­குப் 12வய­தில் இங்­கி­ருந்து இந்­தி­யா­வுக்­குச் சென்று தற்­போது தாய­கம் திரும்­பி­யுள்­ளோம். கல்­வி­யில் எமது நாட்­டின் க.பொ.த சாதா­ர­ணத்­துக்கு நிக­ராக இந்­தி­யா­வில் இடம்­பெ­றும் 10ஆம் வகுப்­புப் பரீட்­சை­யில் 5பாடங்­க­ளில் மட்­டுமே தோற்ற முடிந்­தது.

இங்கே வந்­த­பி­றகு எந்த வேலைக்கு விண்­ணப்­பித்­தா­லும் ஆறு பாடங்­க­ளில் சித்­தி­ய­டைந்­தி­ருக்க வேண்­டும் என்­பது அடிப்­ப­டை­யாக இருக்­கின்­றது. இந்­தி­யா­வில் இடம்­பெற்ற 10ஆம் வகுப்­புப் பரீட்­சை­யில் 500புள்­ளி­களே உச்­சம். அதில் நான் 473 புள்­ளி­க­ளைப் பெற்­றேன். அதே­போன்று இங்கு நடக்­கின்ற உயர்­த­ரப் பரீட்­சைக்கு நிக­ராக இந்­தி­யா­வில் நடக்­கின்ற பரீட்­சை­யில் ஆயி­ரத்து 200 புள்­ளி­களே உச்­சம். அதில் நான் ஆயி­ரத்து 73 புள்­ளி­க­ளைப் பெற்­றுள்­ளேன்.

இந்­தச் சித்­தி­களை இங்­குள்ள மதிப்­பீட்டு முறை­யு­டன் ஒப்­பிட்­டுப் பார்த்­தால், அவை ‘ஏ’த­ரச் சித்­திக்கு சம­னா­கவே இருக்­கும். இருப்­பி­னும் தற்­போது நான் எந்­த­வொரு வேலைக்­கும் விண்­ணப்­பிக்க முடி­ய­வில்லை. எனவே இந்த பிரச்­ச­ணைக்கு உட­ன­டி­யாக உரி­ய­வர்­கள் எமக்­கான தீர்­வைப் பெற்­றுத் தர வேண்­டும். இல்­லை­யேல் நாம் இந்­தி­யா­வுக்­குத் திரும்­பிச் சென்­று­தான் நான் கற்ற கல்­விக்­குப் பொருத்­த­மான வேலை­வாய்ப்­பைத் தேடிக்­கொள்ள வேண்­டும் போலி­ருக்­கி­றது’ என்­கின்­றார்.

அவ­ரு­டைய தந்தை பால­சிங்­க­மும்
ஆதங்­கப்­ப­டு­கி­றார்
‘நானும் மனை­வி­யும் எனது 3பெண் பிள்­ளை­க­ளு­மாக இடம் பெயர்ந்து 2008ஆம் ஆண்­டில் மன்­னார் வழி­யாக இந்­தி­யா­வுக்­குத் தப்­பிச் சென்­றோம். அங்கு உயி­ருக்­கும் பிள்­ளை­க­ளின் கல்­விக்­கும் உத்­த­ர­வா­தம் இருந்­த­போ­தும் சுதந்­தி­ரம் அற்ற, நிம்­ம­தி­யற்ற வாழ்வே நீடித்­தது. இத­னால், தாய­கம் திரும்­பி­னோம். ஆரம்­பத்­தில் கொட்­டில் வீடு என்­றா­லும், சொந்­தக் காணி­யில் சொந்த வீட்­டில் இருந்து விவ­சா­யம் செய்து குடும்­பத்­தைக் கொண்டு நடத்­தி­யி­ருந்­தேன்.

இன்று சொந்த இடத்­துக்­குத் திரும்­பி­வந்­தால், எமது நிலம் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பில் உள்­ளது. இங்கு திரும்பி வந்­தும் இர­வல் வீட்­டி­லேயே குடி­யி­ருக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. அத்­தோடு இந்­தி­யா­வில் உயர்­த­ரம் வரை­யில் கல்வி கற்ற எனது பிள்­ளை­கள் இங்கே மேற்­ப­டிப்­பைத் தொடர முடி­ய­வில்லை. சரி என்­று­விட்டு ஒரு வேலைக்கு விண்­ணப் பித்­தால் இந்­தி­யக் கல்­விச் சான்­றி­தழ் செல்­லு­ப­டி­யற்­றது என்­கின்­ற­னர். அவ்­வா­றா­னால் எமது நிலை­தான் என்ன? இருக்க வீடில்லை. நிலம் இல்லை, வரு­மா­னத்­துக்­குத் தொழில் இல்லை. எத்­தனை நாள்­க­ளுக்­குப் பிறரை எதிர்­பார்த்து வாழ்­வது. பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லம் என்ன ஆவது. எனக்கு மட்­டும் இந்த நிலமை கிடை­யாது. தாய­கம் திரும்­பிய அனை­வ­ரும் இந்த நிலை­யி­லேயே இருப்­பார்­கள். எனவே இதற்கு நிரந்­த­ரத் தீர்வு வேண்­டும்’ என்று கூறி­னார் பால­சிங்­கம்.

மன்­னா­ரைச் சேர்ந்த மேரி­கி­றிஸ்­ரலா
மன்­னார் மாவட்­டம் ஈச்­ச­ள­வக்­கை­யைச் சேர்ந்த செல்வி. பா. மேரி­கி­றிஸ்­ரலா இவ்­வாறு கூறு­கின்­றார். ‘உயி­ரைக் காப்­ப­தற்­காக இந்­தி­யா­வுக்கு ஓடி­னோம். அங்கு அவல வாழ்­வின் மத்­தி­யி­லும் கல்­வி­யைக் கற்­றோம். மிக்க மகிழ்ச்­சி­யு­டன் தாய­கம் திரும்­பி­னோம். கற்ற கல்­விக்­குப் பயன் இல்­லா­மல் போய்­விட்­டது. இந்­தி­யா­வில் கற்ற கல்­விக்கு இந்த நாட்­டில் வேலை வாய்ப்­பைப் பெற முடி­யாது எனத் தெரிந்­தி­ருந்­தால் இங்கு வந்­தி­ருக்க மாட்­டேன்.

இந்­தி­யா­வில் பெற்ற பட்­டங்­கள் இங்கு நாட்­டில் செல்­லு­ப­டி­யா­கின்ற நிலை­யில், இந்­தி­யக் கல்வி செல்­லு­ப­டி­யா­காது எனக்­கூ­று­வ­தில் என்ன நியா­யம் இருக்­கி­றதோ தெரி­ய­வில்லை’ என்று தனது ஆதங்­கத்தை கொட்­டி­னார் அவர். தாய­கம் திரும்­பும் அக­தி­கள் இவ்­வா­றா­கப் பல வழி­க­ளில் பாதிக்­கப்­ப­பட்­டி­ருப்­பது தெரி­கி­றது. அவர்­கள் முன் வைக்­கின்ற குற்­றச் சாட்­டுக்­க­ளுக்கு விரை­வில் தீர்­வொன்றை உரி­ய­வர்­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுக்க வேண்­டும். பாதிக்­கப்­பட்ட இவர்­கள் வடக்கு மாகா­ணத்­தின் மாவட்ட செய­ல­கத்­தில் பதி­வு­களை மேற்­கொண்­டு­விட்­டுத் தொடர்ந்­தும் காத்­தி­ருக்­கின்ற அவ­லத்­தை­யும் இவ்­வி­டத்­தில் சுட்­டிக்­காட்ட வேண்­டியே இருக்­கி­றது.

https://newuthayan.com/story/14/ஈழம்-திரும்பும்-அகதிகள்-எதிர்-நோக்கும்-பிரச்சினைகள்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.