Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு

Featured Replies

வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு – live

 

வடக்கு மாகாண சபையின் 134ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

 
September 27, 2018 6:11 am
LIVE
Latest update 20 mins ago
 
 
 
12:34
 

யாழ்ப்பாண  மாவட்ட கூட்டுறவு கிராமிய திணைக்களத்தின் சீமெந்து விநியோகம்  தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அதிகாரி ஒருவரை நியமிப்பது என்ற தீர்மானம் எதிர்கட்சித் தலைவர் தவராசாவால்  இன்றையதினம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

 
 
 
12:32
 

கூட்டுறவு திணைக்களத்தின் சீமெந்து விற்பனை ஊழல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 

சம்பந்தப்பட்ட அமைச்சர் ஊழலில் ஈடுபட்டனர் என்று கூறப்படும் அதிகாரிகளுக்கு எதிராகவும் இதுவரை நடவடிக்கை எடுத்துள்ளாரா என்று எதிர்கட்சி தலைவர் தவராசா கேள்வி எழுப்பினார்.

ஊழல் குற்றச்சாட்டுகளுடன் சம்பத்தப்பட்டவர்களை  காப்பாற்ற யாரோ முயற்சிப்பது போன்று உள்ளது என்று மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி தெரிவித்தார்.

 
 
 
11:46
இதுவரையில்...
 

சபை அமர் ஆரம்பமானது. முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முக்கியமான நிகழ்வு ஒன்றுக்கு சென்றுவிட்டு, மருத்துவமனைக்கும் சென்று தாமதித்து வருவதாக அவைத்தலைவருக்கு அறிவிக்கப்பட்டது.

அமர்வில் மீண்டும் அமைச்சு விவகாரம் தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

நீதிமன்றம், ஆளுநர் செய்யவேண்டிய விடயங்களை மாகாணசபை விவாதிக்கமுடியாது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக ஒரு மணித்தியாலம் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. அமைச்சரவை தொடர்பாக சபையில் கடும் சொற்போர் இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான தவராசா, சிவாஜிலிங்கம் ,பரஞ்சோதி ,அஸ்மின் ஆகியோர் கடும் விவாத்தில் ஈடுபட்டனர்.

https://newuthayan.com/story/11/வடக்கு-மாகாணசபையின்-132-ஆவது-அமர்வு-சற்று-முன்னர்-ஆரம்பமானது.html

  • தொடங்கியவர்

வடக்கு மாகாண சபையின் 134ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

 
 
 

காற்றாலை விவகாரம் தொடர்பாக நீண்டநேரம் விவாதம் இடம்பெற்றது 

இதன்பொழுது அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானத்திற்கும்  ஐங்கரநேசனுக்கும் இடையில் கடும் தர்கம் ஏற்பட்டது
 
 வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன் அவைத்தலைவரை பார்த்து நீங்கள் என்சார்ந்து என் அமைச்சு சார்ந்து திட்டமிட்டு செயற்படுகிறீர்கள் என்று கூறினார்.
 
 இதற்கு அவைத்தலவர் ஐங்கரநேசனை கடும் தொனியில் எச்சரித்ததுடன் இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு என்னால் இடம் அளிக்க முடியாது என்றார் 
 
இடைமறித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்  சிவாஜிலிங்கம், இங்கு ஊழல் இடம்பெற்றால் எனிமேல் இது தொடர்பாக விவாதிக்கவேண்டாம்.  ஆளுநர் மூலமாக நிதி குற்றவியல் விசாரணைக்கு முறைப்பாடு செய்து உடனடி விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார்.  

https://newuthayan.com/story/11/வடக்கு-மாகாணசபையின்-132-ஆவது-அமர்வு-சற்று-முன்னர்-ஆரம்பமானது.html

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

1 hour ago, நவீனன் said:

வடக்கு மாகாண சபையின் 134ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

 
இடைமறித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்  சிவாஜிலிங்கம், இங்கு ஊழல் இடம்பெற்றால் எனிமேல் இது தொடர்பாக விவாதிக்கவேண்டாம்.  ஆளுநர் மூலமாக நிதி குற்றவியல் விசாரணைக்கு முறைப்பாடு செய்து உடனடி விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார்.  

ஆப்பத்தைப் பகிர்ந்து எடுக்க பூனைகள் குரங்கிடம் போன பாப்பாக் கதையைக்கூட சபை உறுப்பினர் சிவாயிலிங்கம் இன்னமும் படிக்கவில்லைப் போல் உள்ளது. Quellbild anzeigen

Edited by Paanch

  • தொடங்கியவர்

வடக்கு மாகாண சபையில் அமைச்சர்கள் தொடர்பில் சர்சை:சி.வி.கே சிவஞானம் தலைமையில் கலந்துரையாடல்

 

(எம்.நியூட்டன்)

வடக்கு மாகாண சபையில் தொடர்ந்தும் சர்ச்சைகள் அமைச்சரவை விவகாரம் அதனைத் தீர்ப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் பளையில் காற்றாலை அமைக்கப்பட்டதற்கான ஒப்பந்தங்கள் மற்றும் பலநோக்குகூட்டுறவுச்சங்கம் ஒன்றில் இடம்பெற்ற சீமெந்து விநியோகத்தில் எற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மாகாண சபை அமர்வில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. 

sivaganam.jpg

இத்தகைய சூழ்நிலையில் சபை அமர்வு சர்ச்சைகள் நிறைந்ததாகவும் வாதப் பிரதிவாதங்களுடனே இடம் பெற்றது.

வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போதே பல சர்ச்சைகள் இடம்பெற்றன.

குறிப்பாக வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக அவைத்தலைவர் தான் எடுத்து முயற்சிகள் தொடர்பில் தெரிவித்தார்.

குறிப்பாக அரசியல் அமைப்பு உறுப்புரையின் படி முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரில் ஆளுநர் அமைச்சர்களினால் நியமிக்கலாம். தற்போதைய சூழலில் நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சரவையில் இருக்கலாம் என்ற அதனால் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை சீர் செய்யப்படவேண்டும் என்ற நீதிமன்றக் கட்டளை இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. 

இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ள நிலையில் 29.06.2018 க்குப் பின்னரான சூழலில் வடக்கு மாகாண சபையில் சட்டவலுவான அமைச்சர் சபை இல்லை என்பதை இங்கு வலியுறுத்துகின்றேன். 

இப்போதுள்ள அமைச்சரவையை ஏற்றுக்கொள்வதாயின் நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக அமையலாம்.இந்த சபையோ அதிகாரிகளே அமைச்சின் செயலாளர்களே எவராவது இந்த உத்தரவு எமக்குவழங்கப்படவில்லை என்று கூறிக்கொண்டிருப்பது பின்னாளில் அது பிரச்சினை உருவாக்கும் என்பதை தெளிவுபடுத்திக் கூறுகின்றேன். 

நீதிமன்ற உத்தரவு என்பது வீடுவீடாகவோ கந்தோர் கந்தோராகவோ கதவு தட்டிச் சொல்லும் விடையம் அல்ல.

நீதிமன்ற உத்தரவு சட்டப்படியானது இது எல்லோரும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். சரியான முறையான வழிநடத்தலை இந்தச் சபை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை உருவாக்க விரும்பவில்லை. இதனை அனைவரும் கவனத்திற் கொள்ளவேண்டியது அனைவரின் கடப்பாடாகும்.

எதிர்க்கட்சித்தலைவர் தவராசா தெரிவிக்கையில்,

குறித்த விடையத்தை ஏற்கனவே நீங்கள் கூறியுள்ளீர்கள் ஆனால் இங்கு நடப்பது ஏதோவெல்லாம் நடக்கின்றது. இந்தக் குழப்பமான சூழலின் பின்னர் அமைச்சர்கள் என்று இருக்கிறவர்கள் யாராவது பிரேரணைகள் கொண்டு வந்தாலும் கூட நான் அதனை எதிர்த்திரக்கிறேன் யார் அமைச்சர்கள் எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு பதில் இல்லை. முதலமைச்சர் மற்றும் டெனீஸ்வரே அமை்சசர்களாக உள்ளனர். 

மற்றவர்கள் அமைச்சர்கள் என்று கூறி சம்பளம் நிகழ்வுகள் அறிக்கைகள் போன்வற்றை செய்து வருகின்றார்கள். மூன்று மாதமாக இவைதான் நடக்கின்றது.

இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்காமல் தொடர்ந்தும் கதைத்துக் கொண்டிருப்பது சரியானதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.virakesari.lk/article/41302

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.