Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாவது போட்டியில் முதலில் களமிறங்குகிறது இங்கிலாந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது போட்டியில் முதலில் களமிறங்குகிறது இங்கிலாந்து

Share

 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இங்கிலாந்தை பணித்தது.

crick.jpg

அதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டி, ஒரு இருபதுக்கு 20 போட்டி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த 10 ஆம் திகதி தம்புள்ளை, ரங்கிரி சரிவதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் இங்கிலாந்து அணி, 15 ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டதால் கைவிடப்பட்டது.

இந் நிலையில் இன்று இடம்பெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியும் தம்புள்ளை, ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை  ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/42350

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான போட்டி: 31 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி!

இலங்கை அணிக்கு அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி டக்வத் லூவிஸ் முறைப்படி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் 2 ஆவது ஒருநாள் போட்டி இடம்பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது இங்கிலாந்து அணி சார்பில், இயான் மோர்கன் 82 ஓட்டங்களையும், ஜோ ரூட் 71 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் லசித் மலிங்க 5 விக்கெட்டுளை வீழ்த்தினார்.

அந்தவகையில் 279 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 29 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்றபோது மழை குறுக்கிட்டது.

இந்நிலையில் சிறிது நேரம் போட்டி மழையால் தடைபட இறுதியில் டக்வத் லூவிஸ் முறைப்படி 31 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

DpYqwRoXgAECOWP.jpg

 

 

http://athavannews.com/31-ஓட்டங்களால்-இங்கிலாந்த/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.