Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான்புலித் தாக்குதல் நேரத்தில் மகிந்த செய்தது என்ன?: சிங்கள ஏடுகள்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலின் போது மகிந்த ராஜபக்ச என்ன செய்து கொண்டிருந்தார் என்று சிங்கள ஏடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

சிங்கள ஏடுகளில் வெளியாகி உள்ள செய்தி விவரம்:

பி.பி.சி. மற்றும் சி.என்.என். செய்திகளை வழக்கமாக தொலைக்காட்சியில் பார்க்கும் வழக்கமுள்ள மகிந்த ராஜபக்ச, வான்புலிகள் தாக்குதல் நடத்திய இரவு தொலைக்காட்சியைப் பார்த்தபடியே தூங்கிவிட்டார்.

வான்புலிகள் நள்ளிரவு 12.45க்கு தாக்குதல் நடத்தியபோது அந்த செய்தி மகிந்தவுக்கு அவசரமாகத் தெரிவிக்கப்பட்டது.

உடனே தனது சகோதரரான பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வான்புலிகளின் விமானங்களை சுட்டுவீழ்த்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், தமது விமானங்கள் மிக உயரத்தில் பறப்பன என்றும் புலிகளி;ன் விமானங்கள் தாழப்பறப்பன எனவும் அதனால் தமது விமானங்களால் புலிகளின் விமானங்களை தாக்கமுடியாது என்றும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.

மேலும் மற்றைய நாடுகளில் வான்படைத்தளங்களை பாதுகாக்கத் தொடர்ச்சியாக விமானங்கள் பறந்துகொண்டேயிருக்கும் என்றும் தமது வான்படையில் அப்படி இல்லை என்றும் மகிந்தவுக்கு கோத்தாபய சுட்டிக் காட்டியுள்ளார்.

தமது விமானங்கள் மேலெழ 20 நிமிடங்கள் வரை எடுக்கும் என்றும் விடுதலைப்புலிகளின் விமானங்களை துரத்தித்தாக்குவது சாத்தியமற்றது எனவும் மகிந்த ராஜபக்சவுக்கு கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வான்புலிகளின் தாக்குதலுக்குட்பட்ட கட்டுநாயக்க வான்படைத்தளத்தை மகிந்த ராஜபக்ச கடந்த ஞாயிறன்று நேரடியாகப் பார்வையிட்டுள்ளார்.

இருப்பினும் கட்டுநாயக்க வான்படைத்தளத்தை பார்வையிடும் தனித்த பயணத்தை மகிந்த மேற்கொள்ளவில்லை.

இந்தியாவுக்கு ஞாயிறன்று பயணமாவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றபோது கட்டுநாயக்க வான்படைத்தளத்தில் வான்புலிகளின் தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகளை மகிந்த நேரடியாகப் பார்த்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=31373

  • கருத்துக்கள உறவுகள்

சீ சீ

இதையெல்லாமா? எழுதுவது????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீ சீ

இதையெல்லாமா? எழுதுவது????

ஏன் உமக்கு தெரியுமா? :icon_idea::icon_idea::)

காலையில் பார்த்தப்போது இரவு முழுதும் கண்விழித்தவர்போல் இருந்ததே, அப்ப எதுக்கப்பு கண்முழித்தார். :P :P :P

Edited by சித்தன்

பங்கருக்குள் மறைந்திருந்ததை ஏன் எழுதவில்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றிக்கழிப்பில் கேக் சாப்பிட்டு்கொண்டு இருந்திருப்பார். ;)

பாவம் வங்கரும் இருந்திருக்காது ஒளிய, கோல் பேஸ் பேமண்ட்ல தூங்கி இருப்பாரு பயத்தில போய்

பயந்தவனுக்கு சதா மரணம், பயப்பிடாதவனுக்கு ஒரே ஒரு மரணம்.......

விமானத்தாக்குதலுக்கு பயப்பிட்டால் சதா மரணம் தான் சாமியோய்..........இந்தியா சரணம் கச்சாமி.......

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதியேது...........

எனக்கு கிடைத தகவலின்படி அவர் காட்டூன்(Tom and Jerry) பார்துகொண்டு இருந்தார்.

வாகரை வெற்றியில் சப்பிட்ட கேக்கை வாந்தி எடுத்துகொண்டிருந்ததை யாரும் எழுதலையே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.