Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன: சி.வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன: சி.வி

அடக்கி ஆளும் சிந்தனையே குடும்பங்களிலும் நாட்டிலும் பல பிரச்சினைகளை உருவாக்கி வந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலாலயா இசை நடனப் பள்ளியின் வருடாந்த நவராத்திரித் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உரிமைகளும் கடமைகளும் ஒரு சல்லிக் காசின் இருபக்கங்கள். ஒன்றை மட்டும் நாம் வலியுறுத்தி மற்றதை மறந்து நடக்கும் போது குடும்பங்களில் பிரச்சினைகள் உண்டாகின்றன.

கணவன் மனைவிமாரிடையே உரிமைகளுடன் கடமைகளும் வலியுறுத்தப்பட்டால் அங்கு அன்பு நிலவும். அடக்கி ஆளும் சிந்தனை எழாது. அடக்கி ஆளும் சிந்தனையே குடும்பங்களிலும் நாட்டிலும் பிரச்சினைகளை உருவாக்கி வந்துள்ளன. சிங்கள மக்களும் தமிழ் மக்களும் மக்கட் கூட்டங்கள் என்ற முறையில் ஆங்கிலேயரால் சம அந்தஸ்து கொடுத்து ஆளப்பட்டு வந்தார்கள்.

1919ம் ஆண்டில் உங்களுக்கு தன்னாட்சி தரப்போகின்றோம் என்று ஆங்கிலேயர்கள் அறிவித்த உடனேயே சம அந்தஸ்தில் அது காறும் வாழ்ந்து வந்த இரு இனங்களிடையே முரண்பாடுகள் தலை தூக்கின. நாம் பெரும்பான்மையினர் எமது வழிப்படியே எமது எதிர்பார்ப்பின் படியே சிறுபான்மையினர் நடக்க வேண்டும் என்ற எண்ணம் சிங்கள அரசியல் தலைவர்கள் மனதில் வேரூன்றியது.

இதனால் அடக்கி ஆளும் சிந்தனை சிங்கள மக்களிடையே மேலெழுந்தது. மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்தல், சிங்களம் மட்டும் சட்டம், வடகிழக்கு மாகாண வன்குடியேற்றங்கள், மேற்படிப்புப் பரீட்சைகளில் சமநிலைப்படுதல் போன்ற காரியங்கள் பெரும்பான்மையினத்தின் வன்சிந்தனைகளையும் அடக்கியாள முற்பட்ட அவலத்தையும் வெளிக்கொண்டுவந்தன.

அவர்களின் அடக்கி ஆள நினைத்த சிந்தனையே இன்றும் தமிழர்களுக்கு சமநிலை அளிக்கப் பின்னிற்பதன் காரணமாகும்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://athavannews.com/அடக்கி-ஆளும்-சிந்தனைகளே/

 

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைப் பருவத்தில் ஒழுக்கங்களைச் சொல்லித் தருகையில் அடக்கியாளும் சிந்தனை கேடானது என்பது வலியுறுத்தப்பட வேண்டும். சோழன் கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் வரலாற்றுக் குறிப்பே தவிர, மார்தட்டி போற்றப்பட வேண்டியதில்லை. விலங்கிற்குரிய போட்டி, பொறாமை, அடக்கியாளும் உணர்வு அனைத்தும் மனிதனுக்கும் உண்டு. அதிகமும் உண்டு. இயற்கையான இவ்வுணர்களை அடக்கியாளுதலே மனிதத்தை நோக்கிய நகர்வு. மனிதனை மனிதன் அடக்கியாளும் உணர்வே மனிதனால் மனிதனுக்கு ஏற்படும் அல்லல்களில் பெரும்பங்கு வகிப்பது. விக்னேஸ்வரன் கூறியதைப் போல் இதனை வீட்டிலும், அலுவலகத்திலும், அரசியல் தளத்திலும் மற்றும் சமூகத்தில் எங்கும் காணலாம்.

 

 

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

பல்லினங்களை உள்ளடக்கிய இலங்கையில் தமிழ் இனத்தின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அதில் அங்கமாயுள்ள ஒரு தனிமனிதனின் கடமைகள் என்ன என்பதை புரிந்துகொண்டு செயல்படுவதுதான் இப்போது ஈழத்தமிழனின் முக்கிய கடமை என்பது எனது கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.