Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணிகள் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் நிதியில் இருந்தே இராணுவத்திற்கு பணம் வழங்க வேண்டும் – சுமந்திரன்!

Sumanthiran-1.jpg

காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது அதற்கான நிதியை மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து அல்லாமல் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்தே அரசாங்கம் வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் ஆகியன தொடர்பில் ஆராய்வதற்கான உயர் மட்டக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இக் கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரனிடம், படைத் தரப்பு தாம் வைத்திருந்த காணிகளை விடுவிக்கவே தற்போது பணம் கேட்பதாக ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த சுமந்திரன், “படையினர் வைத்திருந்த காணிகளில் அவர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்களைச் செய்த பணம் அரசாங்கத்திற்கே தான் சென்றிருக்கின்றன.

ஆகவே தற்போது காணிகளை விடுவதற்கு பணம் தேவைப்படுவதால் அந்தப் பணத்தையே அவர்கள் கோருகின்றனர். ஆகவே இடமாற்றத்திற்கான நிதியை அரசாங்கம் படைத்தரப்பினர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.

ஆனால் அது பாதுகாப்பு அமைச்சின் செலவீனத்தினூடாகவே தான் இடம்பெற வேண்டும். அதனை விடுத்து மீள்குடியேற்றத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து எடுக்கப்பட முடியாது.

ஏனெனில் கடந்த காலங்களில் அவ்வாறே எடுக்கப்பட்டிருக்கின்றனது. ஏனெனில் இது இராணுவத்தினருக்கான குடியேற்றமல்ல. அவர்களுக்கு இது இடமாற்றம் தான். ஆனால் இது மக்களுக்கான குடியேற்றம் ஆகவே மீள்குடியேற்ற நிதி மக்களிற்கான மீள்குடியேற்றத்திற்கே பயன்படுத்தப்பட வேண்டும்.” என கூறினார்.

 

http://athavannews.com/காணிகள்-விடுவிக்க-பாதுகா/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணி­களை விடு­விக்க -கடற்­ப­டை­யி­னர் மறுப்பு – இரா­ணு­வம் சாதக நிலைப்­பாடு!!

பதிவேற்றிய காலம்: Oct 17, 2018

யாழ்ப்­பா­ணத்­தில் பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் ஆக்­கி­ர­மிப்­பில் உள்ள காணி­கள் தொடர்­பில் ஆரா­யும் நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில், கடற்­ப­டை­யி­னர் தமது வச­முள்ள தனி­யார் காணி­கள் உள்­ளிட்ட எந்­த­வொரு காணி­க­ளை­யும் விடு­விப்­ப­ தற்கு இணங்­க­வில்லை. இரா­ணு­வத்­தி­னர், தமது வச­முள்ள தனி­யார் காணி­களை விடு­விப்­ப­தற்கு சாத­க­மான நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் கடந்த வாரம் வட­க்கு கி­ழக்கு அபி­வி­ருத்­திக்­கான சிறப்­புச் செய­ல­ணி­யின் கூட்­டம் இடம்­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் வட­க்கு கி­ழக்­கில் உள்ள தனி­யார் காணி­களை டிசெம்­பர் 31ஆம் திக­திக்கு முன்­னர் விடு­விக்­க­வேண்­டும் என்­றும், அதற்­காக இரண்டு மாகா­ணங்­க­ளின் ஆளு­நர்­கள் தலை­மை­யில் குழு­வும் நிய­மிக்­கப்­பட்­டது.

 

பாது­காப்­புத் தரப்­பி­னர் வச­முள்ள காணி­கள் தொடர்­பில் ஆரா­யும் கூட்­டம் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று மாலை இடம்­பெற்­றது. முப்­ப­டை­யி­னர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், பிர­தேச செய­லர்­கள் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

வலி. வடக்­கில், கட்­டு­வன் – அச்­சு­வேலி பாதை­யினை திறப்­ப­தோடு, குரும்­ப­சிட்­டி­யில் எஞ்­சி­யுள்ள காணி­க­ளை­யும், பலாலி வீதி­யின் கிழக்­குத் திசை­யில் உள்ள காணி­க­ளை­யும் விடு­விக்க வேண்­டும். மயி­லிட்டி கலை­ம­கள் வித்­தி­யா­ல­யம் விடு­விக்­கப்­பட்­ட­போ­தும் மிக நெருக்­க­மா­கவே இரா­ணுவ வேலி­கள் உள்­ளன. அவற்றை மேலும் பின்­ந­கர்த்த வேண்­டும். இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டுப் பகு­திக்­குள் மேலும் 5 பாட­சா­லை­கள் உள்­ளன. அவற்­றை­யும் விடு­விக்க வேண்­டும், என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா கோரிக்கை விடுத்­தார்.

இதற்­குப் பதி­ல­ளித்த இரா­ணு­வக் கட்­ட­ளைத் தள­பதி ஹெட்­டி­யா­ராச்சி, காணி விடு­விப்­புத் தொடர்­பில் ஆரா­யப்­ப­டு­கின்­றது. பாட­சா­லை­கள் அனைத்­தும் இந்த ஆண்­டுக்­குள் விடப்­பட வேண்­டும் என்று அரச தலை­வ­ரும் தெரி­வித்­துள்­ளார் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

வட­ம­ராட்­சி­யில் 7 இரா­ணுவ முகாம்­கள் உள்ள நிலை­யில் அதில் 4 பெரிய முகாம்­க­ளுக்­காக தனி­யார் காணி­கள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. தனி­யா­ருக்­குச் சொந்­த­மான அனைத்­துக் காணி­க­ளும் விடு­விக்­கப்­பட வேண்­டும். அவை விடு­விப்­ப­தற்கு தாம­தம் தேவை­யில்லை. அதில் உள்ள அரச காணியை மட்­டும் வைத்­தி­ருந்­தால் முகா­மின் அளவு சிறி­தா­குமே அன்றி உட­ன­டி­யாக விலக வேண்­டிய நிலமை இல்லை. தனி­யார் காணி­கள் அனைத்­தை­யும் உடன் விடு­விக்க வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் கோரிக்கை விடுத்­தார்.

 

வட­ம­ராட்சி பகு­தி­யில் உள்ள தனி­யார் காணி­களை வழங்­கு­வ­தில் அதிக நெருக்­கடி இருக்­காது. அந்­தப் பகு­தி­க­ளில் பல அரச காணி­கள் உண்டு. ஆனால் படை முகாம்­களை இடம்­மாற்­று­வ­தற்­காக அதிக செலவு ஏற்­ப­டு­கின்­றது. அதற்­கான நிதி கிடைக்க வேண்­டும் என்று இரா­ணு­வத் தள­பதி கூறி­யுள்­ளார். அடுத்த ஆண்­டும் பாது­காப்பு அமைச்­சுக்­குத்­தானே அதிக நிதி ஒதுக்­கி­யுள்­ள­னர். அந்த நிதி­யில் இதற்­கும் பெற்­றுக்­கொண்டு நிலத்தை விடு­விக்­க­லாம் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கூறி­யுள்­ளார்.

சண்­டி­லிப்­பாய் பிர­தேச செய­லர் பிரி­வில் பிர­தேச சபை­யின் காணி­யும் மற்­று­மோர் இடத்­தில் மக்­கள் குடி­யி­ருப்­பின் நடுவே உள்ள இரா­ணுவ முகா­மை­யும் அகற்ற வேண்­டு­மென நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் கோரிக்கை விடுத்­தார்.

அரி­யா­லைப் பகு­தி­யில் இரா­ணுவ முகாம் அமைந்­துள்ள பிர­தே­சத்­தில் ஓர் தாயா­ரின் 6 பரப்­புக்­காணி உள்­ளது. அதனை விடு­விக்­கு­மாறு அவர் நீண்­ட­கா­ல­மாக கோரிக்கை விடுக்­கின்­றார். அந்த 6 பரப்­புக்­காணி தொடர்­பி­லும் கரி­சனை கொள்­ளு­மாறு மாவட்­டச் செய­லா­ளர் கோரிக்கை விடுத்­துள்­ளார்.
இரா­ணு­வத்­தி­னர் காணி­கள் விடு­விப்­ப­தற்­கான சாத­க­மான கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ள­னர்.

நெடுந்­தீவு, வேலணை, மண்­கும்­பான் பகு­தி­க­ளில் கடற்­ப­டை­யி­னர் காணி­களை பிடித்து வைத்­தி­ருப்­ப­த­னால் அவற்றை விடு­விக்க வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் கோரிக்கை விடுத்­தார். காரை­ந­க­ரில் மட்­டும் 8 இடங்­க­ளில் கடற்­ப­டை­யி­னர் கையப்­ப­டுத்தி வைத்­துள்­ள­னர்.

காரை­ந­கர் இந்­துக் கல்­லூ­ரி­யின் 8 பரப்­புக் காணி உள்­பட அந்­தப் பகு­தி­க­ளை­யும் மக்­கள் பயன்­பாட்­டிற்கு விடு­விக்க வேண்­டு­மென நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னும் கோரிக்கை விடுத்­த­னர். இந்­தக் கோரிக்­கை­க­ளுக்கு கடற்­ப­டை­யி­னர் பதில் வழங்­க­வில்லை. மேலும், கடற்­ப­டை­யி­னர் தமது கட்­டுப்­பாட்­டி­லுள்ள எந்­த­வொரு காணி­யை­யும் விடு­விப்­ப­தற்கு கூட்­டத்­தில் இணக்­கம் தெரி­விக்­க­வில்லை.

இதே­வேளை நேற்­றைய கூட்­டம் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், இரா­ணு­வத்­தி­னர் அதி­க­மான நிலங்­களை விடுத்­துள்­ளார்­கள். கடற்­ப­டை­யி­னர் விடு­வித்த நிலங்­கள் மிகக் குறைவு. தர­வு­களை கொடுத்­துள்­ளோம்.

காணி­களை எப்­போது எவ்­வ­ளவு விடு­விப்­பீர்­கள் என்ற கால அட்­ட­வ­ணை­யைத் தரு­மாறு கோரி­யுள்­ளோம். இரா­ணு­வத்­தி­னர் காணி­களை விடு­வித்­தா­லும் இன்­ன­மும் பல ஏக்­கர் காணி­கள் விடு­விக்க வேண்­டிய நிலை உள்­ளது. அந்த காணி­களை விடு­விப்­ப­தற்கு ஏற்­க­னவே முடி­வெ­டுத்­துள்­ள­தாக அவர்­கள் சொல்­கி­றார்­கள்.

 

புதிய பொலிஸ் நிலை­யங்­கள் அமைப்­பது பற்றி கதைத்­தார்­கள். அன­லை­தீ­வுப் பகு­தி­யில் பொலி­ஸா­ரின் பிர­சன்­னம் இல்லை. நீதி­மன்­றத்­தால் பிடி விராந்து பிறப்­பிக்­கப்­பட்­ட­வர்­கள் அங்கு போய் ஒளிந்து கொள்­ளும் நிலை காணப்­ப­டு­கி­றது. பொலிஸ் நிலை­யங்­களை அமைப்­ப­தற்கு காணி­கள் கொள்­வ­னவு செய்­யப்­பட வேண்­டும்.

சில பொலிஸ் நிலை­யங்­கள் யாழ்ப்­பா­ணத்­தில் 2020, 2022 ஆம் ஆண்­டு­க­ளில் அமைக்­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. பாது­காப்­புத் தரப்­பி­னர் வச­முள்ள காணி­கள் தொடர்­பில் எதிர்­வ­ரும் 22ஆம் திகதி ஆளு­நர் தலை­மை­யில் கூட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது. நாம் கேட்ட கேள்­வி­க­ளுக்­கான பதில்­கள் மற்­றும் நேர அட்­ட­வ­னை­களை 22ஆம் திகதி கூட்­டத்­துக்கு கொண்டு வரு­வ­தாக கடற்­ப­டை­யி­னர் மற்­றும் இரா­ணு­வத்­தி­னர் தெரி­வித்­துள்­ள­னர். அதன் பின்­னர் 8ஆம் திகதி மீண்­டும் அரச தலை­வர் செய­லணி கூடு­கின்ற போது முனேற்­றங்­களை ஆராய முடி­யும் – என்­றார்.

 

https://newuthayan.com/story/08/காணி­களை-விடு­விக்க-கடற்­ப­டை­யி­னர்-மறுப்பு-இரா­ணு­வம்-சாதக-நிலைப்­பாடு.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.