Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச ஊடக நிறுவனங்களைச் சுற்றி சிறிலங்கா இராணுவம் – பாதுகாப்பு அதிகரிப்பு

Featured Replies

சிறிலங்காவில் கூட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பில் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, அரசாங்கம் ஊடக நிறுவனங்களைச் சுற்றி சிறிலங்கா இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஐரிஎன் என அழைக்கப்படும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணியாளர்கள் சிலர், ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரிஎன் செய்தி அறைக்குள் நுழைந்த ஒரு குழுவினர் அங்கிருந்த ஊடகப் பணியார்களைத் தாக்கியுள்ளனர்.

இதையடுத்தே, அரச ஊடக நிறுவனங்களுக்கு இராணுவ, பாதுகாப்பு அளிக்க சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாம் இப்போது, ஒன்றிணைந்து உறுதியான -முற்போக்கான சிறிலங்காவைக் கட்டியெழுப்ப முடியும் என்று அவர் கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/10/26/news/33706

  • கருத்துக்கள உறவுகள்
Quote
1h
 
It is with the greatest pride and happiness that I congratulate the new Prime Minister of Sri Lanka Hon.Mahinda Rajapaksa. Now together, we can rebuild a stable and progressive new #SriLanka

Now together - Rajapaksa, Namal & Basil

  • தொடங்கியவர்

மைத்திரியின் அடுத்த அதிரடி உத்தரவு

அனைத்து  அரச ஸ்தாபனங்களிற்கும் இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

army.jpg

நாட்டின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளதை தொடர்ந்து உருவாகியுள்ள குழப்பநிலைக்கு மத்தியில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/43296

  • தொடங்கியவர்

இலங்கை அரசாங்கத்தின் பிரதான தொலைக்காட்சியை தமது ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ள மஹிந்த ஆதரவாளர்கள்!

 

இன்று மாலை முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்ச பிரதமாராக பொறுப்பேற்றுள்ளமை இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசையான இலங்கை ரூபவாயினிக் கூட்டுத்தாபனத்தை மகிந்த ஆதரவாளர்கள் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,

மகிந்த பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிகழ்வை ஒளிபரப்பாத காரணத்தினால் அந்நிறுவனத்தை மகிந்தவின் ஆதரவாளர்கள் முடக்கியிருந்ததாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அந்நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது, தொடர்ந்து மகிந்த பதவியேற்ப்பு நிகழ்வை ஒளிபரப்புமாறு மகிந்த தரப்பு வற்புறுத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து மகிந்தவின் பதவியேற்பு நிகழ்வு மற்றும் மகிந்தவின் கொள்கை சார்ந்த விடயங்களை தற்போது குறித்த தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

https://www.ibctamil.com/srilanka/80/108114

கலவரத்தால் முடங்கியது அரச தொலைக்காட்சி சேவை

Published by J Anojan on 2018-10-27 00:23:09

 
 

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டதையடுத்து ரூபவாஹினி சேவை நாடளாவிய ரீதியில் முடங்கியுள்ளது.

rupavahini1.jpg

நாட்டின் அரசியலில் இன்று ஏற்பட்ட பிரதமர் மாற்றத்தையடுத்து குறித்த கலவரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு முன்னாள் ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல விஜயம் மேற்கொண்டதையடுத்து கலவரம் அமைதி நிலைக்கு சென்றுள்ளது.

http://www.virakesari.lk/article/43299

  • தொடங்கியவர்

இலங்கை அரசாங்கத்தின் பிரதான தொலைக்காட்சியை தமது ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ள மஹிந்த ஆதரவாளர்கள்!

 

இன்று மாலை முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்ச பிரதமாராக பொறுப்பேற்றுள்ளமை இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசையான இலங்கை ரூபவாயினிக் கூட்டுத்தாபனத்தை மகிந்த ஆதரவாளர்கள் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,

மகிந்த பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிகழ்வை ஒளிபரப்பாத காரணத்தினால் அந்நிறுவனத்தை மகிந்தவின் ஆதரவாளர்கள் முடக்கியிருந்ததாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அந்நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது, தொடர்ந்து மகிந்த பதவியேற்ப்பு நிகழ்வை ஒளிபரப்புமாறு மகிந்த தரப்பு வற்புறுத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து மகிந்தவின் பதவியேற்பு நிகழ்வு மற்றும் மகிந்தவின் கொள்கை சார்ந்த விடயங்களை தற்போது குறித்த தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

https://www.ibctamil.com/srilanka/80/108114

விசேட பாதுகாப்புக்குள் கொழும்பு; குவிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்!

 

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றத்தை அடுத்து கொழும்பில் சில பகுதிகளில் சற்று அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதன்காரணமாக தொடர்ந்தும் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தேசிய தொலைக்காட்சி மற்றும் லேக் ஹவுஸ் ஆகிய அரச ஊடக நிறுவனங்களிலும் இவ்வாறான குழப்ப நிலைகள் ஏறபட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது குழப்பங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக கொழும்பு நகரில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/108117

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.