Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த வினா - விடை; வினையறுக்கும் காலம் கிட்டிவிட்டதா?-(

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[08 - ஆப்ரில் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

கடந்த இரண்டு நாட்களாக இலங்கையின் அச்சு, மின்பொறி ஊடகங்களில் பெரிதும் எடுத்துப் பேசப்படுகின்ற விடயம் இந்த ஆய்வுப் புள்ளி விபரங்களாகும்.

பாக்கியசோதி சரவணமுத்து அவர்களை தலைமைப் பொறுப்பாளராக கொண்டுள்ள சமூகக் குறிசுட்டி (ஸொcஇஅல் ஈன்டிcஅடொர்) எனப்படும் ஆய்வு நிறுவனம், 2007 பெப்ரவரியில் செய்த ஆய்வின் முடிவுகளென இவை தரப்பட்டுள்ளன. மே 2001 இலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் 25 ஆவது ஆய்வு முயற்சி இதுவாகும். சமாதான முறைவழி பற்றி அரசாங்கம் பொருத்தமான கொள் நெறியை உருவாக்கும் பொழுது இப்புள்ளி விபரங்கள் பயன்படும் என்பது ஆய்வாளர்களின் நோக்கமாகும்.

வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை மிக முக்கியமான ஒரு சூழலிலே வெளிவந்துள்ளது. யுத்த விஸ்தரிப்பு, விடுதலைப்புலிகள் பற்றிய சிங்கள மனப்பதிவு, ஜனாதிபதியின் தலைமைத் திறமை, செல்வாக்கு ஆகியன பற்றி வெளிப்படையான வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த புள்ளி விபர ஆய்வு முடிவினைப் பற்றி சிந்திப்பதற்கு முன்னர் இந்த ஆய்வின் முறை வழி பற்றிய சில உண்மைகள் முக்கியமானவை.

முதலாவது, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 17 மாவட்டங்களில் வட கிழக்கு மாவட்டங்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

(சேர்த்துக் கொள்ளப்பட்ட மாவட்டங்கள்: கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலநறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை.) சேர்த்துக் கொள்ளப்பட்ட மாவட்டங்களினுள்ளும் இலங்கைத் தமிழர்களின் அபிப்பிராயங்கள் பற்றி பெறப்படவில்லை. அதற்குச் சொல்லப்படும் காரணம் எந்தவொரு மாவட்டத்திலும் அதன் ஒட்டுமொத்தச் சனத்தொகையில் 9 வீதத்துக்கு குறைந்த இனக் குழுமத்தை சேர்த்துக்கொள்ளவில்லை.

இதற்கு ஒரு மறுபக்கமும் உண்டு. வட,கிழக்கு மாவட்டங்களின் அபிப்பிராயங்களை முற்றுமுழுதான இலங்கைத் தமிழ் அபிப்பிராயமாக எடுக்கக் கூடாதென்றும் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற இலங்கைத் தமிழரிலும் பார்க்க வடக்குக் கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களின் தொகை அதிகமென்கின்ற வாதம் வலுவுடன் முன்வைக்கப்படுவதுண்டு.

இந்தப் பின்புலத்தில், இந்தப் புள்ளிவிபரங்களின் பயன்பாடு பற்றி ஆழ்ந்த சிரத்தையிருப்பது ஆச்சிரியமில்லை. மேலும் வினாக்கொத்தில் இடம்பெறும் வினாக்களை வகுத்தும் தொகுத்தும் பார்க்கும் பொழுது அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்க, ஜே.வி.பி.சக்திகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பலமாகவே கேட்கின்றன. குறிப்பாக, ஜனாதிபதி அவர்களின் தலைமை பற்றிய, சிறப்பாக அவரது ஜனரஞ்சக தன்மை பற்றிய வினாக்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்கள் பெயர்களை கட்டிக்காத்துக் கொள்வதிலுள்ள ஆர்வத்தையும் காட்டிக் கொள்கின்றன எனலாம்.

இந்த வினாக்கொத்துக்கான விடைகளின் முக்கியத்துவம் பற்றி நோக்குவதற்கு முன்னர் இரண்டு விடயங்கள் முக்கியமானவை, ஒன்று, இதில் வரும் வினாக்களுக்கான முந்திய விடைகள் பற்றியதாகும். உதாரணமாக, யுத்தம் பற்றிய சிங்கள மக்களின் நிலைப்பாடு வரவர கடினமாகின்றது. இந்த புள்ளி விபரம் பற்றிய அச்சாணியான விமர்சனம் இதிலே காணப்படும் கருத்துக்களின் அடிப்படை நிலைப்பாடு பற்றிய ஒரு தொடர்பியல் உண்மையாகும்.

ஜனாதிபதி அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து யுத்தம் நடத்தப்பெறுவது அத்தியாவசியம் என்றும் ஏற்கனவே விடுதலைப் புலிகளை தோற்கடிக்க தொடங்கிவிட்ட படையினருக்கு மேலும் உதவு தொகை வழங்குவதே அரசாங்கத்தின் கடமை என்ற அபிப்பிராயத்தை சிங்கள ஊடகங்கள் யாவும் மக்களிடையே வலுவாக பரப்பி வந்துள்ளன. யுத்தத்தினால் கிழக்கு மீட்கப்பட்டு விட்டதாகவே சிங்கள மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கடந்த இரு வாரத்து நிகழ்ச்சிகள் அதனைக் கேள்விக் குறியாக்கியுள்ளன.

சிங்கள ஊடக சூறாவளி கருத்துப் பரப்புகை பற்றிய எந்தவித குறிப்பும் காணப்படாதது ஆய்வாளர்களின் கருத்து நேர்மை பற்றிய கேள்விகளை கிளப்புகின்றது. ஆங்கிலத்திலே ஒரு கூற்று உண்டு "பொய்கள் பச்சைப் பொய்கள், புள்ளிவிவரங்கள்" (ளிஎச், Dஅம்னெட் ளிஎச், ஸ்டடிச்டிcச்) இன்னுமொரு மிக முக்கிய விடயம் இந்த புள்ளிவிபரங்களின் எடுத்துரைக்கப்படாத பக்கங்களாகும். அதாவது, சிங்கள மக்களிடையேயும் 40 வீதத்தினர் போரின் விஸ்தரிப்பை விரும்பவில்லை என்பது தெரிகின்றது. இது போன்று ஒவ்வொரு புள்ளிவிபரத்தினதும் தரப்படாத சதவீதங்களை பார்த்தல் வேண்டும். மேலுமொரு சுவாரஸ்யமான விடயம் மலையக தமிழர் இந்த விடயங்கள் பற்றி கொண்டுள்ள நிலைப்பாடாகும். எவர் என்னதான் சொன்னாலும் ஏறத்தாழ கடந்த கால் நூற்றாண்டு காலமாக பாரம்பரிய மலையக தமிழர்களிடையேயும் பாரம்பரிய இலங்கைத் தமிழரிடையேயும் ஒட்டுமொத்தமான ஒரு தமிழ் நிலைப்பாட்டுணர்வு வளர்கின்றதென்பதாகும். இது பற்றி அரசியற் கருத்துநிலை பற்றிய விவாதங்கள் நடைபெற வேண்டிய அதேவேளையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்களின் இனக்குழும கண்ணோட்டங்கள் இந்த ஒருமைப்பாட்டுணர்வை நிச்சயமாக வளர்க்கின்றன. அத்தகைய தொரு ஒருங்கு நிலைப்பாட்டினை நிச்சயமாக மேல்மாகாணம் போன்ற இடங்களில் காணலாம்.

இந்த அடிப்படைக் குறைபாடுகளினூடேயும் இந்த புள்ளிவிபரங்கள் முக்கியமாகின்றன. ஏனெனில், சிங்கள மக்களிடையே யுத்தத்துக்கான ஒரு மனநிலை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் மூலம் வளர்க்கப்பட்டு விட்டது.

இந்த புள்ளிவிபரத்தை பார்க்கின்ற பொழுது உண்மையான ஒரு பயம் ஏற்படுகின்றது. வினை அறுக்கும் காலமும் கிட்டுகின்றதா?

இந்த புள்ளிவிபர ஆமாம்களுக்குள் வராதவர்களே ஐக்கிய இலங்கைக்கான உத்தரவாதம் ஆகின்றார்கள் என்பதையும் என்றோ ஒரு நாள் பாக்கியசோதி சரவணமுத்துவின் நிறுவனம் எடுத்துக் கூற வேண்டிய கடப்பாட்டினை உடையது.

http://www.thinakkural.com/news/2007/4/8/a...s_page24971.htm

யுத்தத்தின் தன்மை புரிந்து கொள்ளப் படாவிடின் இவ்வாறான முட்டாள்தனமான முடிவுகள்தான் கிடைக்கும். இது ஒரு மாயையான தோற்றம். இதை நாட்டின் ஆட்சியாளர்கள்தான் தென்பகுதியில் விதைத்துவிட்டவர்கள்.அழிவுகள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.