Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாணவிகளை எரித்துக் கொன்றவர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டது ஏன்? ஆளுநர் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பன்வாரிலால் புரோஹித் (நடுவில் இருப்பவர்). 2012ல் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய பாஜக தலைவர் நிதின் கட்கரி(இடது)உடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்.படத்தின் காப்புரிமை STR/AFP/Getty Images Image caption பன்வாரிலால் புரோஹித் (நடுவில் இருப்பவர்). 2012ல் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய பாஜக தலைவர் நிதின் கட்கரி(இடது)உடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதைக் கண்டித்து 3 மாணவிகளுடன் பேருந்தை எரித்துக் கொன்றதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரை விடுதலை செய்வதற்கான கோப்புகளை பலத்த பரிசீலனைக்குப் பிறகே ஏற்றுக்கொண்டதாக தமிழக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2000வது ஆண்டில் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டபோது, அ.தி.மு.கவினர் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். கோவை வேளாண்மைக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் அந்தத் தருணத்தில் கல்விச் சுற்றுலா ஒன்றுக்கு சென்றுவிட்டு இரண்டு பேருந்துகளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்தப் பேருந்துகளை தர்மபுரி மாவட்டத்தில் வழிமறித்த அ.தி.மு.கவினர், மாணவிகள் பேருந்திலிருந்து வெளியேறும் முன்பே அதற்குத் தீ வைத்தனர். இதில் 3 மாணவிகள் உடல் கருகி பலியாகினர்.

இந்த வழக்கில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது தமிழக அரசு 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவித்துவருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் இந்த மூன்று பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேர் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகும் விடுவிக்கப்படாத நிலையில், இவர்கள் விடுவிக்கப்பட்டது ஏன் எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், இந்த மூன்று பேரையும் விடுவிக்க ஒப்புக்கொண்டது ஏன் என தமிழக ஆளுநர்மாளிகை விளக்கமளித்துள்ளது.

ஆளுநர் மாளிகையின் விளக்கம்:

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் அடிப்படையில் 1858 கைதிகளை மொத்தமாக விடுவிக்க, இது தொடர்பான கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. ஆனால், ஒவ்வொரு கைதியின் பின்னணியையும் ஆராய்ந்துதான் விடுவிக்க வேண்டும்; அரசு குறிப்பிட்டதைப் போல ஐந்தாண்டுகளை நிறைவுசெய்த கைதிகளை விடுவிக்காமல் பத்தாண்டுகளை நிறைவுசெய்த கைதிகளையே விடுவிக்க வேண்டுமென ஆளுநர் மாளிகை கூறியது. அதற்கேற்றபடி மாற்றம் செய்து மே மாதம் 3ஆம் தேதியன்று புதிய அரசாணை இதற்கென வெளியிடப்பட்டது.

இதற்குப் பிறகு, ஒவ்வொரு கைதிக்கெனத் தனித் தனியாக கோப்புகள் சிறைத் துறையின் கூடுதல் டிஜிபி தலைமை தாங்கும் குழுவால் உருவாக்கி அனுப்பப்பட்டன. அதன் அடிப்படையில் ஆளுனரின் ஒப்புதலைப் பெற்று இதுவரை 1627 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற கைதிகளின் விவரங்களுடன் இந்தக் கைதிகளின் விவரங்கள் அடங்கிய கோப்புகளும் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பப்பட்டன. இவர்களின் விவரங்களை பரிசீலித்த ஆளுனர், அரசு தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோரி கோப்புகளைத் திருப்பி அனுப்பிவைத்தார். அந்தக் கோப்புகளை மறு பரிசீலனை செய்த அரசு, மீண்டும் அந்தக் கோப்புகளை அக்டோபர் மாதம் 25ஆம் தேதியன்று ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

தருமபுரி பேருந்து எரிப்பு - மூன்று பேரும் விடுதலைபடத்தின் காப்புரிமை unknown

இதற்குப் பிறகு, தலைமைச் செயலர், தலைமை வழக்கறிஞர், உள்துறை செயலர் ஆகியோர் அக்டோபர் 31ஆம் தேதியன்று ஆளுனரைச் சந்தித்து இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளித்தனர். இந்த மூவருக்கும் கொலைசெய்யும் நோக்கமில்லையென்றும் கும்பல் மனநிலையில் அவ்வாறு செய்துவிட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டினர். இதற்குப் பிறகு ஆளுநர்தலைமை வழக்கறிஞரின் சட்டரீதியான கருத்தைக் கேட்டார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டபோது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை சுட்டிக்காட்டிய தலைமை வழக்கறிஞர் கீழ்க்கண்ட விஷயங்களை முன்வைத்தார்: 1. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்ற கும்பல் மனநிலையில் செய்யப்பட்ட நடவடிக்கையின்போது மரணங்கள் ஏற்பட்டன. 2. அரசியல் தலைவர் தண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்க அவர்கள் விரும்பினர். 3. கொல்லப்பட்டவர்களை இவர்கள் முன்பின் அறியாதவர்கள் 4. முன்கூட்டிய திட்டமிடல் ஏதும் இல்லை. 5. எல்லாமே ஒரு கணத்தில் நடந்துவிட்டது.

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க அரசு வகுத்த விதிமுறைகளுக்குள் இவர்கள் பொருந்துவார்கள் என கருதுவதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இவர்கள் சிறையில் 13 ஆண்டுகளைக் கழித்துவிட்டார்கள் என்பதாலும் கும்பல் மனநிலையில் குற்றத்தைச் செய்தார்கள் என்று உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருப்பதாலும் இவர்களை முன்கூட்டியே விடுவிக்கும் ஆணையை பிறப்பித்ததாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-46277468

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.