Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம்- இராஜதந்திரிகளிடம் கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம்- இராஜதந்திரிகளிடம் கூட்டமைப்பு

இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர்கள்  வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர்

; தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் பாராதூரமான விளைவுகள் உருவாகலாம் இது  இலங்கையின் நலனிற்கு உகந்த விடயமல்ல என வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

tnafor4.jpg

உருவாககூடிய குழப்பநிலை சட்டமொழுங்கின்மை காரணமாக சிறுபான்மையினத்தவர்களே பாதிக்கப்படலாம் குறிப்பாக தமிழ் மக்கள் பாதிக்கப்படலாம் என எடுத்துரைத்தோம் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.virakesari.lk/article/44866

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

உருவாககூடிய குழப்பநிலை சட்டமொழுங்கின்மை காரணமாக சிறுபான்மையினத்தவர்களே பாதிக்கப்படலாம் குறிப்பாக தமிழ் மக்கள் பாதிக்கப்படலாம் என எடுத்துரைத்தோம் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அப்போ இதுவரை தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறார்கள்?

5 hours ago, ஈழப்பிரியன் said:

அப்போ இதுவரை தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறார்கள்?

அதே கருத்து தான் என் மனதிலும்.


ஏற்கனவே யாப்பில் உள்ளவற்றை சிங்கள-பௌத்த அரசு நடைமுறைப்படுத்துவதில்லை (காணி + போலீஸ் அதிகாரங்கள், மத சமவுரிமை, மொழியுரிமை, ...).  இது இப்படியிருக்க தமிழர் எப்படி சிங்கள-பௌத்த அரசியலமைப்புக்குள் ஒரு நீதியான, நிலையான, நேர்மையான தீர்வைக் காணமுடியும்?  

தற்போது சிங்கள-பௌத்த அரசியல்வாதிகள் தங்களுக்குளேயே அரசியல் யாப்பை விதம் விதமாக வியாக்கியானம் செய்தும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியும் இழுபறிப்படுகின்றனர்.  இது இப்படியிருக்க தமிழர் எப்படி சிங்கள-பௌத்த அரசியலமைப்புக்குள் ஒரு நீதியான, நிலையான, நேர்மையான தீர்வைக் காணமுடியும்?  

எனவே தமிழர்களுக்கு இவற்றை எல்லாம் தாண்டிய ஒரு தீர்வே சாத்தியம் ஆகும் என்பதை சர்வதேசத்துக்கு அவர்கள் விளங்கும் மனோநிலையில் / சூழ்நிலையில் இருக்கும்போது சொல்ல கிடைத்த அருமையான வாய்ப்பை தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தவற விட முடியும்?

"அற்பனுக்கு மவுசு வந்தால் அர்த்த இராத்தித்திரியிலும் குடை பிடிப்பானாம்" என்பது போல சம்மந்தன் இலங்கையில் என்றுமே நிலவாத ஜனநாயகத்தை காப்பாற்ற ஒற்றைக் காலில் நிக்கிறார். சுத்துமாத்து சுமந்திரன் ரணிலை காப்பாற்ற ஆகாயத்தில் பறக்கிறார்! மாவை தனது எஜமான்களுக்கு மாவாட்டிக் கொண்டிருக்கிறார்.

இதுவரை வாக்களித்த மக்களை மறந்து உலகநாடுகளை சொகுசாக வலம் வந்த சிறீதரன், இதுவரை நிபந்தனைகள் விதிக்காமல் கையைத் தூக்கிய சிறீதரன் தேர்தல் கலக்கத்தில் புது நாடகம் ஆடுகிறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.