Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும்"

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ  தெரிவித்தார்.

mannar-2.jpg

பலத்த மழை காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

பணிகள் இடை நிறுத்தப்படும் வரை 231 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக  பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.

இவற்றில் 18 சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இவ்வாறு மீட்கப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

somadeva.jpg

மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கடந்த  மார்ச் மாதம் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக நிலம் தோண்டிய போது இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள்   மே மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இந்த பணிகளில் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/45157

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித புதைகுழி அகழ்வு பணிகள் நாளை ஆரம்பிக்கப்படும் ; சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன்

மனித புதைகுழி அகழ்வு பணிகள் நாளை ஆரம்பிக்கப்படும் ; சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன்

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நாளைக்  காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறித்த மனித புதைகுழி தொடர்பான   வழக்கு விசாரணைகள்  நாளைய தினமே மன்னார்   நீதி மன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாக அகழ்வு பணிகளை கண்காணிக்கும்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக வாதிடும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

IMG_1292.jpg

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பலத்த மழை காரணமாகவும் , அரச பணிகாரணமாகவும்  மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.

பணிகள் இடை நிறுத்தப்படும் வரை 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டும் 230 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் இவ் அகழ்வு பணியை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகமும் இணைந்து செய்து கொண்டிருக்கின்றது.

 அரசியல் மாற்றங்கள் காரணமாக எந்தவித பாதிப்புக்களும் இவ் அலுவலகத்தால் அகழ்வுப்பணிக்கு காணப்படவில்லை.

இவ் அகழ்வு பணி நாளைச் செவ்வாய்க்கிழமை 27 மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

IMG_1291.jpg

குறித்த மனித புதை குழி தொடர்பான வழக்கு மன்னார்  நீதி மன்றத்தில் B232/18 கீழ் அழைக்கப்பட இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் 'சதொச' கட்டட வளாகத்தில் கடந்த   மார்ச் மாதம் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக நிலம் தோண்டிய போது இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள்   கடந்த மே மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இந்தப் பணிகளில் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/45185

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.