Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதுதான் பொன். மாணிக்கவேல் ஸ்ரைல் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உட்கார வச்சேன், சாப்பாடு கொடுத்தேன், 15 நிமிஷம் டைம் கொடுத்தேன்.. இதுதான் பொன் மாணிக்கவேல் ஸ்ரைல் !

ponmanikkavel122-1543491331.jpg

சென்னை: இளைஞர்களை நம்பி என் பணியை விட்டுச் செல்கிறேன் என்று ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தனது பிரிவு உபசார விழாவில் உருக்கமாக கூறியுள்ளார்.தமக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்து விட்டார் பொன்.மாணிக்கவேல்.

எத்தனை எத்தனை சிலைகளை மீட்டெடுத்தார் இவர்!!

குறிப்பாக 50 வருஷத்துக்கு முன்னாடி காணாமல் போன ராஜராஜ சோழன், உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகளை குஜராத்திலிருந்து மீட்டு கொண்டு வந்ததற்கு தஞ்சாவூர் மக்களே விழாவாக எடுத்து கொண்டாடினார்களே..

இதைவிட வேறு என்ன சிறப்பு ஐஜி-க்கு இருக்க முடியும் ?பொன் மாணிக்கவேல் என்றால் அதிரடி.. நாளை முதல் அது மிஸ்ஸாக போகுது !

உருக்கம்

நாளையுடன் இவரது பணி நிறைவடைவதையொட்டி, சென்னையில் ரயில்வே காவல்துறை சார்பில் இவருக்குப் பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பொன். மாணிக்கவேல் தன்னுடன் சக காவலர்களாக பணியாற்றியவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அவரது உருக்கமான பேச்சின் வரிகள்தான் இவை:

கைது செய்ய வேண்டும்

ஒரு குற்றம் நடந்துவிட்டால், அந்த பகுதியில் முழுமையாக இறங்கி விசாரணையை ஆரம்பிக்க வேண்டும், தவறு என்று தெரிந்துவிட்டால் உடனே கோர்ட் அனுமதி பெற்று கைது செய்து விட வேண்டும். இது சம்பந்தமான வழக்குகள், சட்டங்களை எல்லோரும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

அடிக்க கூடாது

எப்.ஐ.ஆர் போட போலீஸ்காரர்கள் பயப்படவே கூடாது. எப்பவுமே குற்றவாளிகள் வாக்குமூலம் தந்தால் அதை உடனே ஒரு பேப்பர்ல எழுதி வைச்சிக்கணும். அப்போதான் அது சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும். குற்றவாளியை அடிக்கிறதால உண்மையை வரவழைக்க முடியாது.

சாப்பாடு கொடுத்தேன்

நான் கூட கேஸ் நடத்தினேன். அப்போ குற்றவாளியை கூப்பிட்டு விசாரணை நடத்தும்போது அவருக்கு ஒரு சேர் கொடுத்து உட்கார வச்சேன். நான் சாப்பிட்ட சாப்பாட்டைதான் அவருக்கும் கொடுத்தேன். எனக்கிருக்கும் எல்லா வசதிகளும் அவருக்கும் இருக்கிற மாதிரிதான் பார்த்துக்கிட்டேன். ஆனா ஒரு கேள்வியை கூட நான் கேக்கல.

ஒப்புக் கொண்டார்

அதுக்கு பதிலா, இதுவரை அவர் செய்த தவறுகளை எல்லாம் அவருக்கு எடுத்து காட்டி, அதுக்கு என்ன மாதிரியான தண்டனைகள் சட்டத்தில் கிடைக்கும் என்பதையும் எடுத்து சொல்லி 15 நிமிஷம் டைம் கொடுத்தேன். அப்பறம் அவராகவே என்கிட்ட வந்து, ஒன்னு விடாமல் இதுவரை செய்த தவறுகளை என்னிடம் மளமளவென சொல்லி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இளைஞர்கள் போலீஸ்காரர்கள் நினைத்தால் ஒரு குற்றவாளியை ஆறே மாசத்தில திருத்த முடியும். அந்த அளவுக்கு கடமை இருக்கு. என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களையும் நம்பி விட்டு செல்கிறேன் என்றார் அவர்.

https://tamil.oneindia.com/news/chennai/i-am-going-hand-over-my-job-young-people-pon-manickavel-335344.html

 

  • கருத்துக்கள உறவுகள்

`என் பணியை இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன்’ - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கம்!

 

 

 

ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இன்று அவருக்கு ரயில்வே காவல்துறை சார்பில் பிரிவு உபசரிப்பு விழா நடத்தப்பட்டது. 

பொன்.மாணிக்கவேல்

சிலைத் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் என்றால் தமிழகத்தில் தெரியாதவர்களே கிடையாது. சமீபத்தில் சிலை கடத்தலைத் தடுக்க இவர் காட்டிய அதிரடியால் மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்துவிட்டார். ஆனால், இவரின் அதிரடி நடவடிக்கை, தமிழக இந்து சமய அறநிலையத் துறையினருக்கு மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் ஆர்வம்காட்டியதோடு ஆணையையும் பிறப்பித்தனர். நீதிமன்றம், ரயில்வே ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் மாற்றப்பட்டபோது சிலை வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க நீதிமன்றம் தனி உத்தரவைப் பிறப்பித்தது. கற்சிலைகள் மட்டுமல்லாது தங்கச் சிலைகள், தங்கக் கோபுரங்கள் செய்ததில் நடந்த முறைகேடுகளையும் இவர் கண்டுபிடித்துள்ளார். 

 

2_10341.jpg

50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள், சமீபத்தில் குஜராத்திலிருந்து மீட்கப்பட்டது. ராஜராஜ சோழன் சிலையைக் கண்டுபிடித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்த பொன்.மாணிக்கவேலுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்தச் சிலை தஞ்சைப் பெரிய கோயிலுக்குக் கொண்டுவரப்படும்போது ஊர் மக்கள் அனைவரும் கூடி விழாவாகக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஜி பொன்மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில் நாளையுடன் இவரின் பதவிக்காலம் முடிவடைகிறது. 

https://www.vikatan.com/news/tamilnadu/143392-ig-pon-manikkavel-retirement-tomorrow.html?fbclid=IwAR2VpN0EYZWa5Z2oMJTXqFaF_xvRqnTvKZwG_ZNc9wjvAefqRvXYqDlPfGs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வங்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்: பொன் மாணிக்கவேல் விவகாரம் குறித்து வீரமணி ..

1543592689-7924.jpg

கடவுள் மறுப்பு கொள்கையை உடைய திகவினர் அடிக்கடி இந்து தெய்வங்களை மட்டும் கிண்டல் செய்து வருவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தால் மீண்டும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதை திக தலைவர் கி.வீரமணி கிண்டலுடன் கூடிய ஒரு கருத்தை கூறியுள்ளார்.

பொன்.மாணிக்கவேலுக்கான ஓராண்டு கால பதவி நீட்டிப்பால் இனி தெய்வங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும், விசா இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்ற தெய்வம் மீண்டும் தமிழகம் வரும் என எதிர்பார்க்கலாம் என்றும் இந்த விவகாரம் குறித்து வீரமணி கருத்து கூறியுள்ளார்.

வீரமணியின் இந்த கருத்துக்கு 'திராவிட ஆட்சிகளின் கீழ் செயல்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் தான் பெருமளவிலான தெய்வங்களை விசா இல்லாமல் நாடு கடத்தியதாகவும், திருடிய திருடனே அய்யோ திருடன்! அய்யோ திருடன்! என ஓடுவது போல் வீரமணியின் கருத்து உள்ளதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

http://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/k-veeramani-said-about-pon-manickavel-issue-118113000093_1.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.