Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மழை கொட்டுகிறது, உணவும் இல்லை மட்டக்களப்பில் அகதிகள் பெரும் அவலம்

Featured Replies

மழை கொட்டுகிறது, உணவும் இல்லை மட்டக்களப்பில் அகதிகள் பெரும் அவலம்

bati-L.jpg

மட்டக்களப்பில் இடம்பெயர்ந்துள்ள ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், கடுமையான உணவுப் பற்றாக்குறைக்கும் முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தினால் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளைப் போல் எந்த விதமான உணவு விநியோகங்களும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று வேளையும் உணவை உட்கொள்ள வேண்டிய மக்கள் 100 தொடக்கம் 200 கிராம் அரிசியுடன் ஒரு நாளைக் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பால் மா வகைகளின் பற்றாக்குறையினால் சிறார்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்துருக்கொண்டானில் உள்ள ஒரு முகாமில் மட்டும் 750 க்கும் மேற்பட்ட சிறார்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அங்கு தற்போது ஷெல் வீச்சு சத்தங்கள் கேட்ட வண்ணமுள்ளன. அரிசி, பருப்பு மற்றும் உலர் உணவுப் பொருட்களை உலக உணவுத் திட்டம் பல முகாம்களுக்கு விநியோகித்து வருகின்றது. ஆனால் மரக்கறி மற்றும் ஏனைய சத்துணவு வகைகளுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.

அரசாங்கத்தின் போலியான பிரசாரங்களுக்கு மத்தியில் இந்த முகாம்களில் நூற்றுக்கணக்கான தாய்மாரும் சிறார்களும் பெரும் துன்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக, சத்துருக்கொண்டானிலுள்ள 1500 குடும்பங்கள் தங்கியுள்ள 5 முகாம்களுக்கு பொறுப்பான கிராம சேவையாளர் கே.தங்கவடிவேலு தெரிவித்ததாவது;

இங்குள்ள முகாம்களுக்கான புதிய உணவு விநியோகங்கள் மேற்கொள்ளப்படவில்லை. உலக உணவுத் திட்டமே தற்போது விநியோகங்களை மேற்கொண்டு வருகின்றது. எனினும், அது இந்த மாத இறுதி வரையுமே போதுமானது. நாம் எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் உதவிகள் இல்லாத போது எம்மால் சிறியளவிலான பணிகளையே மேற்கொள்ள முடியும்.

மிகவும் தரம் குறைந்த அரிசியே வழங்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் பதிவுகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. உள்ளூர் மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களாலேயே ஏனைய 99 விதமான பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.

இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கத்தினால் அதிகளவான பணம் ஒதுக்கப்பட்ட போதும், உயர் அரச அதிகாரிகளால் சிறிதளவு நிதியே வழங்கப்படுகின்றது. அவர்கள் முகாம்களுக்கு செல்வது தொடர்பாகக் கூட அக்கறை கொள்வதில்லை என தெரிவித்தார்.

இந்த நிலைமைகளில் அங்கு ஊழல்கள் நடைபெறுவது ஆச்சரியமான ஒன்றல்ல, இடம்பெயர்ந்த மக்களுக்கு வேறு வழிகள் இல்லாததால் அங்கு தங்கியுள்ளனர். மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் பகுதிகளில் தம்மை மீளக் குடியமர்த்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்கள் மௌனமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு நிலைமைகளும் அங்கு மோசமடைந்து வருகின்றன. சத்துருக்கொண்டானிலுள்ள முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் ஆயுதக் குழுவினர் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக விஷேட அதிரடிப்படையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ முறையிட தமக்கு பயமாயுள்ளதாக அங்கு தங்கியிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

thinakkural.com

இந்த நிலைமை உலகில் வேறு யாரிற்கும் ஏற்படக்கூடாது... பேய்கள் ஆளும் நாட்டில் ..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் என்னதான் பாவம் செய்தான் இப்படிஆன்டவன்இயற்க்கைஅழிவை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களுக்கு நாம் ஏதாவது ஒரு முறையில் உதவி செய்ய முடியாதா??

TRO தான் இல்லை வேறு யார் உதவி செய்வார்கள் :lol:

Edited by இன்னிசை

இவர்களுக்கு நாம் ஏதாவது ஒரு முறையில் உதவி செய்ய முடியாதா??

TRO தான் இல்லை வேறு யார் உதவி செய்வார்கள் :lol:

T.R.O செயற்படுகின்றது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அவர்களின் செயற்பாடு இல்லை. ஆனாலும் அவலங்களுக்கு முகங்கொடுக்கும் அந்த மக்களுக்கு உதவுவதற்கு வேறு மார்க்கங்களும் உண்டு.

http://www.tamilnaatham.com/photos/2007/MA...326/NEWZEALAND/

இங்கிருக்கும் எங்களாலும் எதுவும்முடியவில்லையே!

இந்துமாமன்றம் உடுப்புகள் த்ந்துதவுமாறு சூரியனில செய்திகளில் தெரிவிதிதிருந்தார்கள்

ஆனால் எவ்வாறென தெரிவிக்கவிலலை

  • தொடங்கியவர்

நம்முறவுகள் செய்த பாவம் என்னவெண்ரு தெரியவில்லை, உதவ பலர் இருந்தும் உதவ முடியாத நிலை............

புலிகளிடம் இருந்த தமிழர்களை விடுவிப்பதாக அரசாங்கம் கூறியது

பலிகழுடன் இருந்தபொழுதாவது அவர்கழுக்கு இல்லாம் இருந்தது

ஆனால் தற்பொழுது?

கனடாவில் கிழக்கு மக்களுக்கு உடனடி நிவாரணமும் நீதியும் வேண்டி கிழக்கு வெளிக்கும் நிகழ்வு

- சோழன் வுhரசளனயலஇ 12 யுpசடை 2007 03:27

தமிழர் தாயகத்தில் அதுவும் குறிப்பாக மட்டக்களப்பு பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மனிதப் பேரவலங்கள் மனித உரிமை மீறல்கள் என்பவற்றால் சொல்லொணாத் துயருறும் எமது மக்களுக்கு உடனடி நிவாரணமும் நீதியும் வேண்டி கனடிய தமிழர் பேரவையினால் கிழக்கு வெளிக்கும் என்ற நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இடம்: கனடா கந்தசாமி கோவில்

733 டீசைஉhஅழரவெ சுழயனஇ ளுஉயசடிழசழரபா

காலம்: ஏப்ரல் 15ம் திகதி ( 15-04-2007)

நேரம்: மாலை 4:00 மணி

இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஊடகங்கள், சர்வதேச நிவாரண அமைப்புகள் என்பன பங்குபற்றவுள்ளன.

எம் உணர்வுகளின் வெளிப்பாடாக அனைவரும் அழைக்கப்படுகின்றீர்கள்.

மேலதிக தொடர்புகளுக்கு: 416 240 0078

நிச்சயமாக உதவலாம். அதற்கான பல வழிகளுண்டு. வெளிகாடுகளில் இருப்பவர்கள் பொருட்களாகக் கொடுப்பதை விடுத்து முடிந்தளவில் பணமாக உதவுங்கள். அந்தந்த நாட்டிலுள்ள T .R .O அமைப்பினருடன் தொடர்பு கொண்டால் அல்லது வேறு பொது நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் உதவிகளை தமிழ் மக்களிடம் சென்றடையச் செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.