Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவில் பிரசாதத்தில்... பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா? 12 பேர் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2 arrested for poisoning in Karnataka

கோவில் பிரசாதத்தில்... பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா? 12 பேர் பலி. பின்னணியில்... 2 பேர் கைது

கர்நாடக மாநிலத்தில் விஷம் கலந்த கோவில் பிரசாதம் சாப்பிட்டு 12 பேர் பலியான சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம்-கர்நாடக மாநில எல்லைப்புற கர்நாடக மாவட்டம் சாம்ராஜ்நகர். இங்கு கொள்ளேகால் தாலுகாவில் உள்ள சுளவாடி என்ற கிராமத்திலுள்ள மாரம்மா என்ற அம்மன் கோயிலில் கோபுரம் கட்ட ஊர்கமிட்டி முடிவு செய்தது.

இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி பூஜைகள் முடிவடைந்ததும், பக்தர்களுக்கு தக்காளி சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் திரளாக இதில் பங்கேற்று பிரசாதம் வாங்கி சாப்பிட்டனர்.

ஆனால், பிரசாதம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கொள்ளேகால், மைசூர் நகரங்களிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக சிலர் மைசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை நிலவரப்படி 12 பேர் பலியாகியுள்ளனர். பிரசாதத்தில் யாரோ திட்டமிட்டு விஷத்தை கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், உணவு மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வயல்களுக்கு தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்து, பிரசாதத்தில் கலக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 80 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் 12 பேர் நிலைமை மோசமாக உள்ளது. சிகிச்சை பெறுவோரை கர்நாடக முதல்வர் குமாரசாமி, அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கர்நாடக அரசால், தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் இரு கோஷ்டிகள் நடுவே மோதல் இருந்து வந்துள்ளது. எனவே அதில் ஒரு கோஷ்டி, கோவில் சாப்பாட்டில் விஷத்தை கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/mysore/2-arrested-poisoning-karnataka-336566.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயà®à¯à®à®®à¯, வயிறà¯à®±à¯à®µà®²à®¿

முன் விரோதம்.. கோயில் பிரசாதம் சாப்பிட்டவர்களின் பலி எண்ணிக்கை 12 ஆனது

கர்நாடக மாநிலத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

கர்நாடக மாவட்டம் சமராஜ் நகர் பகுதியில் உள்ள என்ற சுலிவாடி கிராமத்தில், கிச்சுமராண்டாஎன்ற அம்மன் கோயில் உள்ளது.

இந்த கோயிலின் கோபுரம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் கோயிலில் பிரசாதமாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது.

82 பà¯à®°à¯ à®à®©à¯à®®à®¤à®¿

ஆனால் பிரசாதத்தில் மண்ணெண்ணெய் வாடை வந்ததாகவும், அதை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாங்கி சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிரசாதம் சாப்பிட்டவர்கள் கொஞ்ச நேரத்தில் வாந்தி, மயக்கம், வயிற்றுவலி என அவதிக்கு உள்ளாயினர்.

எனவே உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதில்12 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபாக உயிரிழந்தனர். மேலும் 82 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. எனினும் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.

மாதிரி பரிà®à¯à®¤à®©à¯

இது தொடர்பாக ஹானூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரசாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். கோயிலில் வழங்கப்பட்ட பிரசாத மாதிரி பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் உணவு நச்சு காரணமாகத்தான் பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெறுகிறது.2 கும்பல்கள் இடையே கோயில் நிர்வாக பொறுப்புகளில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. அதனாலேயே பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

à®®à¯à®¤à®²à¯à®µà®°à¯ à®à¯à®®à®¾à®°à®à®¾à®®à®¿

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அம்மாநில முதல்வர் குமாரசாமி, இறந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கவும், உத்தரவிட்டுள்ளார். கோயில் சர்ச்சையில் ஏற்பட்ட முன் பகை காரணமாக, பிரசாதத்தில் விஷத்தை கலந்த சம்பவமும், அதனால் 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவமும் கர்நாடகா மாநிலத்தில் சோகம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/mysore/12-people-died-when-eat-temple-prasadam-karnakara-336552.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.