Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் கடும் தீவிரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் கடும் தீவிரம்

[12 - April - 2007]

*தடுத்து நிறுத்த உதவுமாறு இந்தியாவிடம் அவசர வேண்டுகோள்

* உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கை- இந்திய உடன்பாட்டின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மாகாணங்களை பிரித்தது மட்டுமல்லாமல் கிழக்கை துரிதமாக சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையிலும் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாக கடும் விசனம் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதனை தடுத்து நிறுத்த இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டுமென அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று புதன்கிழமை காலை சந்தித்தபோதே இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்;

வடக்கு- கிழக்கு இணைந்த மாகாணத்தை இலங்கை- இந்திய உடன்பாடே இணைத்தது. இதனை இன்று நிராகரித்துள்ள இலங்கை அரசு வடக்கு- கிழக்கை தனித்தனியாகப் பிரித்துவிட்டு கிழக்கை மாவட்ட ரீதியாக சிங்கள மயப்படுத்தும் துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

75 சதவீதம் தமிழ் பேசுவோரைக் கொண்ட திருகோணமலை மாவட்டத்தை துரிதமாக சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.

இராணுவ நடவடிக்கைகளென்ற பெயரில் திருமலை மாவட்டத்திலிருந்து பெருமளவு தமிழர்கள் இன்று துரத்தியடிக்கப்பட்டு அவர்கள் மீள்குடியேறுவதற்கே அனுமதிக்கப்படவில்லை.

திருமலை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொருவரை நியமித்ததுடன் கிழக்கு மாகாண ஆளுநராகவும் சிங்களவர் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சுகளின் ஆறு செயலாளர்களில் மூவர் சிங்களவர், இருவர் தமிழர், ஒருவர் முஸ்லிம்.

திருமலை மாவட்டத்தில் அரச ஊழியர்களுக்கான விடுதிகளில் தங்கியிருந்த தமிழ் அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு அங்கு சிங்களவர்களை தங்க வைக்கும் நடவடிக்கைகளில் கிழக்கு மாகாண ஆளுநர் இறங்கியுள்ளார்.

திருமலை மாவட்டத்தை துரிதமாக சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகளாகவே இவையெல்லாம் இருக்கின்றன.

அம்பாறை மாவட்டத்திலும் இன்று இதுபோன்ற நிலைமையே ஏற்பட்டுள்ளது. சிங்களவர் ஒருவரே அரச அதிபராக உள்ளார்.

74 சதவீதத்திற்கும் மேல் தமிழ் பேசுபவர்களைக் கொண்ட இந்த மாவட்டத்தையும் சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.

வடக்கு- கிழக்கு மாகாணத்தை பிரித்து விட்டு கிழக்கை சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதமடைந்துள்ளதையே இவையெல்லாம் காட்டுகின்றன.

இந்தச் செயல்களானது பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்று காணப்படும் வாய்ப்பை இல்லாது செய்துவிடப் போகிறது. இதனை இந்தியா பார்த்துக் கொண்டிராது, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறி இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.

பாரிய படை நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினை சொல்லிலடங்காது. அவர்களை அரசு முற்றாகவே கைவிட்டு விட்டது. ஓரிரு அரச சார்பற்ற நிறுவனங்களே அவர்களுக்கு உதவுகின்றன.

சொந்த இடங்களுக்கு அந்த அகதிகள் திரும்பிச் செல்ல அரசோ, படையினரோ அனுமதிக்கவில்லை. மழையாலும் வெள்ளத்தாலும் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட அகதிகளை இன்று பாடசாலைகளுக்கு கொண்டு செல்கின்றனர். நாளை பாடசாலைகளிலிருந்து இவர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டால் எங்கு செல்வார்கள்?

இலங்கை அரசு இவர்களைக் கைவிட்டு விட்டதால் இந்தியா இவர்களுக்கு உதவ வேண்டும்.

இப்படி நிலைமையிருக்கையில் வடக்கு- கிழக்கில் மிக மோசமாக மனித உரிமைகள் மீறப்படுகின்றன.

தினமும் படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதலென தமிழ் மக்கள் படும் அவலங்களை இன்று முழு உலகும் அறியும். இதனை இந்தியாவும் உணர்ந்து செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

thinakkural

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணம் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என்பதையும் திருமலை, மட்டு-அம்பாறை மாவட்டங்களில் உள்ள எல்லா ஊர்களிலும் பெளத்த விகாரைகள் தோன்றும் என்பதையும் தமிழர்கள் ஜீரணிக்கவேண்டிய காலம் விரைவில் வரும்!

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணம் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என்பதையும் திருமலைஇ மட்டு-அம்பாறை மாவட்டங்களில் உள்ள எல்லா ஊர்களிலும் பெளத்த விகாரைகள் தோன்றும் என்பதையும் தமிழர்கள் ஜீரணிக்கவேண்டிய காலம் விரைவில் வரும்!

இவ்விடங்களிலெல்லாம் 10 சிங்களவர்கள் இறந்தனர்

50 பேர் இறந்தனர்100 பெர் இறந்தனர் என்ற செய்திக்கும் குறைவிருக்காது என்று நினைக்கின்றேன்

அரசியல்வாதிகளின் ஆட்டம்

சிங்களவர்கள் இவற்றை புறந்தள்ளவேண்டும்

தனது வீடுவாசலை இழந்தவன்

அதைப்பறித்தவனை நிம்மதியாக வாழவிடுவான் அல்லது

வாழலாம் என நினைப்பதை

அதை அவன் திருப்பி எடுக்கமுயற்சிசெய்யும்போது

அதை பயங்கரவாதம் என புலமபுவதை இவ்வுலகம்

நிறுத்தவேண்டும்???

மணல்வீடு கட்டுகிறார்கள் பார்போம் எதுவரைக்கும் என்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.