Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்கழி மாதக் கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பலவருடங்களின்பின்னர் மீண்டும் ஒரு மார்கழி மாதத்தில் ஒஸ்லோ வந்திருக்கிறேன். கொட்டும் பனியும் கடும் குளிரும் என்னை முடக்கிபோட கங்கனம் கட்டியபடி. 1990 ஆண்டு டிசம்பர் மாதமும் இப்படித்தான் இருந்தது. அப்ப நான் நோர்வீஜிய அபிவிருத்தி நிறுவனமான  நோறாட் அமைப்பில் பகுதிநேர ஆலோசகராகப் பணியாற்றினேன். நிறைமாதமாக இருந்த மனைவிக்கும் இரண்டு வயசுப் பயனான என் மகனுக்கும் இன்னும் விசா கிடைக்கவில்லை என்கிற கவலை மனசில். அந்த சமயத்தில் எழுதிய கவிதை. இக்கவிதையை எனது நண்பர் பேராசிரியர் ஒய்வின் புக்ளரூட் நோர்வீஜிஜ மொழி ஆக்கம் செய்தார். கவிதை நோராட் சஞ்சிகையில் வெளிவந்தது. குடிவரவு அலுவலக்த்தில்  புதிதாக பதவிக்கு வந்திருந்த செல்வி.நினிரொப் அவர்களை இக்கவிதை கவர்ந்தது. அவர் நோர்வீஜிய மொழியாக்கம் செய்யபட்ட எனது  கவிதைகளையும் செக்குமாடு குறுநாவலையும்  பிரதிகள் எடுத்து வெளிவிவகார அமைச்சு  மற்றும் நீதிஅமைச்சுக்கு அனுப்பிவைத்தார். அதேசயம் நோராட் என்னை தென்னாசிய நிபுணன் என்றும் என்னக்கு பிரதியீடாக தங்களிடம் வேறு யாரும் இல்லையென்றும் குடிவரவு அலுவலகத்துக்கு கடிதம் கொடுத்து அதை தொழில் அமைச்சும் அங்கீகரித்ததால் எனக்கு குடியேற்ற விசா தரப்பட்டது. அதனால் என் மனைவி மக்களுக்கும் விசா கிடைத்தது. எனினும் நாட்டு நிலவரங்களில் ஏற்பட்ட முரண்களாலும் என் இயல்பான கட்டற்ர போக்காலும்  தொடர்ந்தும் நோராட் நிறுவனத்தில் பணி செய்ய முடியவில்லை.   

விசாவுக்காக மொழிபெயர்க்கபட்ட  எனது `செக்குமாடு` குறு நாவல் பின்னர் புகழ் பெற்றது. செக்குமாடு குறுநாவலின்  நோர்வீஜிய மொழிபெயர்ப்புக்கு விருது தருவதற்க்காகவென்று நோர்வீஜிய எழுத்தாளர்  சங்கம்  சிறந்த வெளிநாட்டு எழுத்தாளருக்கான புதிய விருதை உருவாக்கி மகிழ்சிதந்தது.

சன்னல்: -இது ஒஸ்லோவில் 1990 டிசம்பர் எழுதப்பட்ட கவிதை. நண்பர் பேராசிரியர் ஒய்விண்ட் புக்ளரூட் சன்னல் கவிதையை நோர்வீஜிய மொழியாக்கம் செய்தார். சன்னலின் நோர்வீஜிய மொழியாக்கம் நோர்வீஜிய வெளிவிவகார அமைச்சின் ’நோராட்’ இதழில் வெளிவந்தது. இலக்கிய ஆர்வமுள்ள பெண்மணி செல்வி. நினி ரொப் எனது விசா அலுவலராக அமைந்தது அதிஸ்ட்டம் என்றே சொல்ல வேண்டும். சன்னல்கவிதை அவரைக் கவர்ந்ததது. அதனால் அவர் இக்கவிதையை குடிவரவு திணைக்கள் அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சு நீதி அமைச்சு அதிகார்களுக்கு பிரதி அனுப்பினார். இதனால் என் செல்வாக்கு உயர்ந்ததது. மட்டக்களப்பு அபிவிருத்தி தொடர்பான என்கட்டுரையின் பங்களிப்பின் அடிப்படையில் நோராட் என்னை தென்னாசிய நிபுணர் என கடிதம் தந்தது, அதன் அடிப்படையில் எனது கலைஞர்களுக்கான விசாவை வெளிநாட்டு நிபுணர்களுக்கான விசாவாக மாற்றபட்டது. அதைத் தொடர்ந்து எனது மனைவிக்கும் எனது மூத்தமகன் ஆதித்தனுக்கும் நோர்வே வர விசா அனுமதி வளங்கப்பட்டது. கவிதைக்கும் சக்தி உண்டு. 
.
சன்னல்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
துயில் நீங்கி
கனத்த மெத்தைப் போர்வைதனைப் புறம்தள்ளி
சோம்பல் முறித்தபடி எழுந்து
சன்னல் திரை தன்னை ஒதுக்கி விட்டேன்
இன்று கிறிஸ்மஸ் விடுமுறை நாள்.
.
புராணத்துப் பாற்கடலில்
சூரியனின்
பொற்தோணி வந்தது போல்
வெண்பனி போர்த்த உலகில் பகல் விடியும்.
வெள்ளிப் பைன் மரங்கள்.
இலையுதிர்த்த வெள்ளிப் பேச் மரங்கள்.
வெள்ளி வெள்ளிப் புல்வெளிகள்.
.
என்ன இது
பொன்னாலே இன்காக்கள் *
பூங்கா அமைத்ததுபோல்
வெள்ளியினால் வைக்கிங்கள்**
காடே அமைத்தனரோ.
காடுகளின் ஊடே குதூகலமாய்
பனிமேல் சறுக்கி ஓடுகின்ற காதலர்கள்.
பின் ஓடிச் செல்லும் நாய்கூட மகிழ்ச்சியுடன்.
.
நான் மந்தையைப் பிரிந்து வந்த தனி ஆடு.
போர் என்ற ஓநாயின்
பிடி உதறித் தப்பிய நான்
அதிட்டத்தால்
வாட்டும் குளிர் நாளில் கூட
வாழ்வை ரசிக்கும் கலையை அறிந்தவரின்
நாடு வந்தேன்.
.
வெண்பனியின் மீது சூரியன் விளையாடும்
நாட்கள் எனக்கு உவகை தருகிறது.
என் மைந்தன் என்னோடிருந்தால் இவ்வேளை
நானும் அவனும் இந்த
வெள்ளி வெள்ளிக் காடுகளுள்
விளையாடக் கூடுமன்றோ.
.
“சூரியனைப் பிடித்துத் தா” என்று அவன் கேட்டால்
வெண்பனியில் சூரியனை வனைந்து நான் தாரேனோ.
“ஏனப்பா இலங்கையில் வெண்பனி இல்லை” என்பானேல்
முன்னர் இருந்ததென்றும்
கொதிக்கின்ற சூரியனார் அதன்மீது காதலுற்று
அள்ளி அணைக்க அது உருகிப் போனதென்றும்
பின்னர் துருவத்தை வந்து அது சேர்ந்த தென்றும்
அதனாலே சூரியனார் துருவம் வரும்போது
வெப்பத்தை நம் நாட்டில் விட்டு விட்டு வருவதென்றும்
கட்டி ஒரு நல்ல கதை சொல்ல மாட்டேனோ ?
.
கருவில் இருந்தென் காதல் மனையாளின்
வயிற்றில் உதைத்த பயல்
நினைவில் இருந்தென் நெஞ்சிலன்றோ உதைக்கின்றான்.
நமக்கிடையே
ஏழு கடலும் இணைந்தன்றோ கிடக்கிறது
விசா என்ற பெயரில்.
வெண்பனி மீது
இன்னும் அந்தக் காதலரும் நாயும் களிப்போடு.

1990 Disamber

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2018 at 9:10 AM, poet said:

 


கருவில் இருந்தென் காதல் மனையாளின்
வயிற்றில் உதைத்த பயல்
நினைவில் இருந்தென் நெஞ்சிலன்றோ உதைக்கின்றான்.
 

 

அருமையான வரிகள் இவை! உங்கள் கவிதைகளை ரசிக்க யாழில் பலர் இல்லையென்றாலும், உங்கள் குடும்பத்தின் தற்போதைய வாழ்வையே அவை உறுதி செய்திருக்கின்றன என்று அறிந்து மகிழ்ச்சி!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கும் சக்தியுண்டு என்று புரியவைத்த மார்கழிமாதக் கவிதை உங்கள் அப்போதைய உள்ளக்கிடக்கையை அழகாக எடுத்துரைக்கின்றது. சுற்றாடலின் அழகை அழுதுகொண்டே ரசிப்பதற்கும் அதற்கென்று ஒரு மனம் வேண்டும். கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரின் கவிதைகள் எப்போதுமே பிடிக்கும். ஆழமான கவிதைகளை தொடர்ந்தும் எழுதவேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.