Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கைப் பறித்தெடுக்கும் பாதகம்

Featured Replies

கிழக்கைப் பறித்தெடுக்கும் பாதகம் `

கிழக்கு மாகாணத்தை, மிகக் குறிப்பாக திரு கோணமலையை, முற்றுமுழுதாகச் சிங்கள மயப் படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் முழு மூச் சில் செயற்பட்டு வருகிறது. எல்லோரும் அறிந்த இந்த விடயத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் இந்தியாவின் கவ னத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

1987ஆம் ஆண்டில் கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, ஒரே மாகாண சபை நிர்வாகம் கொண்டுவரப்பட்டது.

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மூலம் கிடைத்த சொற்ப விளைச்சலாக, பத்தொன்பது வருடங்களாக அது துளி அளவான அதிகாரப் பகிர்வு முறைக்கு வழி செய்தது.

நிர்வாக அதிகாரத்தின் நாணயக் கயிறு மத் திய அரசிடம் இருந்தமையால், மாகாணசபை வடக்கு கிழக்கில் தோல்வி கண்டது. எதுவா யினும் தமிழர்களின், தமிழ் பேசும் மக்களின், தாய கப் பூமி முழுமை வடிவமாக (Entity) இருக்கின் றது என்று ஓரளவு மனத்திருப்திகொள்ள முடிந்தது.

தமிழர்கள் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர் அல்லர் என்ற பௌத்த சிங்கள மேலாண்மைக் கடுங்கோட்பாட்டாளர்களின் கண்ணை, உறுத் திக் கொண்டே இருந்தது இந்த இணைப்பு.

ஏன், இலங்கை அரசியலில் தான் நினைத் தது எதனையும் செய்து முடிக்கும் சர்வ அதிகா ரம் கொண்ட ஜே.ஆர். ஜெயவர்த்தனாவே, வடக்கு கிழக்கு இணைப்பை மனமார விரும்பாமல், அதற்கென சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண் டும் என்ற தீக்குச்சியை இலங்கை இந்திய ஒப் பந்தத்திற்குள் செருகிவிட்டுப் போனார்!

மஹிந்த அரசு காலத்தில் அந்தத் தீக்குச்சியை தட்டிப் பற்றவைப்பதற்கு மேலாண்மைத் திமிர் பிடித்தவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. நீதிமன் றத்துக்குச் சென்று, தாம் விரும்பியதைப் பெற்றுக் கொண்டார்கள். வடக்கு, கிழக்கை 19 வருடங் களின் பின்னர் இரண்டு துண்டுகளாக்கிவிட்டனர்.

அரசமைப்பு, நாடாளுமன்றம், நிர்வாக அதி காரம், சட்டங்கள் எல்லாமே தமிழர்களை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல், அவர்களது விருப்பு வெறுப்புகளை, நியாயமான கோரிக்கைகளை ஏறெ டுத்தும் பார்க்காமல் ஆக்கப்பட்டவை அவர் களுக்குக் கேடு செய்வதற்கென்றே உருவாக்கப் பட்டவை என்பது சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல. மிகவும் தெட்டத்தெளிவானது, வெளிச் சமானது.

மாகாணசபைகளை நிறுவுவதற்கும், வடக்கு கிழக்கை இணைக்கவும் வகை செய்த இலங்கை இந்திய ஒப்பந்தம், இரண்டு நாடுகளுக்கிடையே அந்த நாடுகளின் அரசுகளுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்.

ஆனால், இந்தியா என்ற ஓர் அங்கம் ஒப்பந் தத்துடன் சம்பந்தப்பட்டது என்பது எமக்கு எந் தப் பொருட்டுமல்ல என்ற வீம்புடன், மகிந்த அரசு தான் தூர நிற்பதாகக் காட்டிக்கொண்டு, வடக்கு கிழக்கை வெகு கெட்டித்தனமாகப் பிரித்துவிட்டது.

இது எமது நாட்டு விவகாரம்; இந்தியாவைப் பொருட்படுத்த வேண்டும் என்ற அவசியம் எமக் கில்லை; என்ற அகங்காரத்தோடு, தான் நினைத் ததை நிறைவேற்றி உள்ளது. எங்களைத் தட் டிக்கேட்ட இந்தியா யார்? என்ற மமதையை வெளிக் காட்டி நிற்கிறது. அந்த நாடு எங்களைச் சீண்ட முடியாது என்ற இறுமாப்புடன்!

வடக்கு கிழக்குப் பிரிப்பை நிதர்சனமாக் கும், இருப்பாக்கிவிடும், மென்மேலும் இறுக்க மாக்கி பலப்படுத்தும் முழு வீச்சிலான செயற்பாடு களில் இலங்கை அரசு, அசுர வேகத்தில் செயற் பட்டு வருகிறது. வடக்கு கிழக்கு ஒன்றாக மாகாண சபையாக இருந்தவேளை, நத்தை வேகத்தில் நகர்ந்த கொழும்பு நிர்வாகம், இப்போது கிழக்கை, அதிலும் மிகக் குறிப்பாக திருகோண மலையை இயற்கைத் துறைமுகம் என்ற அருங் கொடையான வரப்பிரசாதம் நிறைந்துள்ள தமிழர் பூமியை அதிவேகமாக தனிச் சிங்களப் பிரதேசமாக் கும் அநியாயத்தில் அக்கிரமத்தில் காட்டுத்தீ பரவும் வேகத்தில் செயற்பட்டு வருகிறது. பேரின வாதமும், மேலாண்மைத் திமிரும் மேலோங்கி நிற்க, எங்களைக் கேட்க எவருமில்லை; எவரும் எதுவும் செய்ய இயலாது என்ற அகங்காரத்துடன் அலுவல்கள் காரியங்கள் செயற்பாடுகள் நடந்தேறிவருகின்றன.

"தட்டிக்கேட்க எவருமில்லை என்றால் தம்பி தண்டப்பிரசண்டம்' என்ற போக்கில் இலங்கை அரசு வீச்சுக்காட்டி வருவது தெரியாதது போன்று, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு தரப்பான இந்தியா, கண்மூடி மௌனியாக இருந்து வருகிறது.

தனக்குள்ள "தார்மீக'க் கடமையை இந்தியா உணர வேண்டும் என்று சுட்டிக்காட்டும் வகை யில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியத் தூதுவரைச் சந்தித்து உத்தியோக பூர் வமாக நினைவுபடுத்தியமை காலத்தின் தேவை.

இது விவகாரத்தில் இந்தியாவின் மௌனம், கொழும்புக்கு மேலும் ஊக்கம் அளித்து, தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்யும் அதன் சதிக்கு மறைமுக ஒத்தாசை வழங்குகிறதா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக நிலவுகிறது.

எங்களுக்கு எவரும் உத்தியோகபூர்வமாக "முறைப்பாடு' செய்யவில்லை என்று இந்தியா இதுவிடயத்தில் சாட்டுச் சொல்லாமல் ஒரு "பூட்டு'ப் போடப்பட்டிருகிறது.

அதன் சிந்தனையும், அணுகுமுறையும், உண்மை நிலையும், நோக்கமும் எத்தகையன என்பது இனியாவது வெளிப்படுமா? பொறுத் திருந்து தான் பார்க்கவேண்டும்.

uthayan.com

Edited by வானவில்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கைப் பறித்தெடுக்கும் பாதகம்

பறிகொடுத்திட்டு... பறித்தெடுக்கிறது என்பதுதான் மகா பாதம்..! சிங்களவன் என்ன பறிகொடுக்கவா வந்திருக்கான் பறித்தெடுக்கத்தானே..! அப்புறம் என்ன புலம்பல்..அதுவும் உதயனுக்கு..! :unsure::lol::blink:<_<

தலைவரிட்ட முறையிட்டாப்போச்சு :P

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரிட்ட முறையிட்டாப்போச்சு :P

தலைவரிடம் முறையிட்டால் தான்... <_<:unsure::(:blink::D :angry: :lol::o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.