Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படையினரால் பத்து வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படையினரால் பத்து வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு.

- பண்டார வன்னியன் Friday, 13 April 2007 11:31

தீவகத்தில் உள்ள மண்கும்பான் பகுதியில் சிறுமி மீது கடற்படையினர் பாலியல் வல்லுறவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். வீட்டிலிருந்து வெளியே விளையாடச் சென்ற பத்து வயது சிறுமி மீது அப்பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே இந்தப் பாலியல் வன்செயல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதனை இரண்டு கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். கடற்படையினரின் கட்டுபாட்டில் உள்ள மண்கும்பான் பகுதியில் இருந்து இந்த குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் தமது வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்திற்கு வர முயற்சித்த போதிலும் கடற்படையினர் அவர்களை பயமுறுத்தி யாழ்ப்பாணம் செல்ல அனுமதிக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை நண்பகல் நேரம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் கடற்படைத் தலைமைக்கு முறையிட்ட போதிலும் எந்த வகையான நடவடிக்கையும் எடுக்கப்படாததுடன் பயமுறுத்தி பெற்றோர்கள் விரட்டப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவோ அன்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லவோ கடற்படையினர் அனுமதிக்கவில்லையென்பதும் குறிப்பிடதக்கதாகும்.

மூலம் - சங்கதி

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி இராணுவத்தை ஆக்கிரமிக்கவிட்டிட்டு அது செய்யுறான் இது செய்யுறான் என்று புலம்பி எதுவும் வேலைக்கு ஆகப்போறதில்லை..! தமிழர்களின் மானம் உயிர் உடமை எல்லாம் இப்ப செய்திக்கு என்று போச்சு..! தீர்வும் இல்ல விடிவு தரும்.. இறுதிப் போரையும் காணேல்ல..! :lol::unsure:<_<:blink:

10 வயது பாலகி!!! கடற்படையா அல்லது காட்டுமிராண்டிகள் படையா?

  • கருத்துக்கள உறவுகள்

பேய்கள் ஆட்சியில் நாய்கள் பினம் தின்னும். :icon_mrgreen::blink:

இப்படி இராணுவத்தை ஆக்கிரமிக்கவிட்டிட்டு அது செய்யுறான் இது செய்யுறான் என்று புலம்பி எதுவும் வேலைக்கு ஆகப்போறதில்லை..! தமிழர்களின் மானம் உயிர் உடமை எல்லாம் இப்ப செய்திக்கு என்று போச்சு..! தீர்வும் இல்ல விடிவு தரும்.. இறுதிப் போரையும் காணேல்ல..! :D:lol::icon_mrgreen::blink:

அது சரி நெடுக்காலபோவான் அந்த நேரத்தில (90-94) 40,000 சிங்களப்படைகள் யாழ் குடாநாட்டை சுற்றி ஆக்கிரமிப்பு முனைப்பில் நிற்கிறார்கள் வீட்டுக்கொருவர் விரைந்து வாருங்கள் என்று சந்திக்கு சந்தி ஓவியக்கண்காட்சிகள், போர்க்கால கருத்தரங்குகள் வைத்து அறை கூவல் விடுத்த போதும் அதற்கு செவிசாய்க்காது வெளிநாடு ஓடியோர் ஓட மிகுதிப்பேரில் சிலர் ஊருக்குள் பெண்கள் பின்னால் சுற்றி காதல் இன்னும் இதர இதர இச்சைகளினால் அலைய மீதிப்பேர் தாம் உண்டு தங்கள் குடும்பம் உண்டு என இருக்க ஒரு சிலரே போராளிகளாக மாறினர். ஈற்றில் நடந்தது என்ன? அதன் விளைவுகளில் ஒன்று தான் இது. இருந்தும் 2000 ம் ஆண்டுகளில் தொடங்கிய புலிப்பாய்ச்சல் சில நிர்ப்பந்தங்களால் இடைநிறுத்தப்பட்டு சமாதான ஓட்டமெனும் நிழல் யுத்தத்தில் புலிகள் அரசியல் சாணக்கிய யுத்தத்தால் சர்வதேச அரங்கில் சிங்கள அரச முகத்திரை கிழிக்கப்பட்டு இன்று மீண்டுமோர் நெடிய மண்மீட்பு பாய்சலுக்கு தயாராகுகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களூக்கெல்லாம் புலம்பிறதை விட்டா வேறு என்ன தெரியும்?! களத்தில நிற்கிறவங்களைப் பற்றி ஒரு கணமாவது சிந்திச்சுப் பார்த்திருப்பமா/ மிகச் சுலபமா..ஏன் திருப்பி அடிக்கேல்லையாம் ஏன் இன்னும் பிடிக்கேல்லையாம்? ! என்ற கேள்விகள் மட்டும் கேட்கத் தெரியும்!

சிங்கள வெறியர்களுக்கு! குழந்தை என்ன கிழவி என்ன?! தின்ற தீனி செரிக்க வேணும் என்றதற்காக பிஞ்சுகளை உறிஞ்சுகின்றான்...! தமிழரெல்லாம் ஒன்றுபட்டால் அன்றி என்ன முடிவு வரும் சொல்லுங்கோ?!

'செயலால் வளர்ந்த பின்பு பேசத் தொடங்க வேண்டும் என்பது அண்ணையின் கொள்கை"..நாங்கள் வெறும் பேச்சைத்தானே பேசிக்கொண்டிருக்கிறம்?!!..பிறகு எப்ப விடியும் எப்ப விடியும் என்றால்?!...என்ன முடிவு?!

இந்த குரங்குக்கு இருக்கும் ஈரம் கூட உனக்கில்லையா?உனக்கு குடும்பம் அம்மா பிள்ளை ஏதும் இல்லையா?முறை தவறி பிறந்தாயா?மிருகமே பத்தே பத்துவயது பாலகன்?அந்த மழலையின் சிரிப்பையே கெடுத்துவிட்டீர்களா?காலத்தின் சுழற்சியில் உனக்கு வெகுதூரமில்லை.நீராகாரமற்று துடிதுடித்து சாவாயாக!

செய்தியாக வாசித்து உணர்ச்சிவசப்படுவதுடன் நின்றுவிடாமல் இவற்றுக்கு முடிவுகாண என்ன எம்மால் செய்யமுடியும்? என்பதை யோசித்து செயல்படுத்தினால் மிகுதி மக்களையும் காப்பாற்ற கூடியவர்களை பலப்படுத்தினால் , உற்சாகம் கொடுப்பதன் மூலம் விடுதலைப்பயணத்தை விரைவு படுத்தல்லாம்.

பேய்களின் கைகளில் நமது அப்பாவி மக்கள் தமிழிழத்தில் எங்கும்.

போயை வெளினாட்டுக்காரன்களுடன் முறையிட்டு எமது காலத்தை வீணக்கிவிட்டோம்....

நமது பேயோட்டி ஆயத்தமாக இருக்கிறார்.

போயோட்டி கலைக்கும் போது வெளியுலகம் நாம் போய் கலைப்பது சரி என்று சொல்லவேண்டும்

இப்படியான நிகழ்வுகள் கொலைகள் நடக்கும் போது உடனடியாக வெளியுலகத்திற்கு அறியத்தரப்படவேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள் மௌனமாக இருக்கிறோம்

குற்றம் புரிவன் சுதந்திரமாக ஒன்றும் நடவாத மாதிரி புலிகளை பூச்சாண்டி காட்டுகிறான் உலகத்திற்கு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.