Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அலைபேசி பயன்பாடு குழந்தைகளின் உடல்நலனை பாதிக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அலெக்ஸ் தெரியன் & ஜேன் வேக்ஃபீல்ட் பிபிசி
 
அலைபேசி பயன்பாடு குழந்தைகளின் உடல்நலனை பாதிக்குமா?படத்தின் காப்புரிமை Getty Images

குழந்தைகள் அலைபேசி போன்ற தொழில்நுட்ப கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக குழந்தை நல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்ப கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவர பரிசோதித்த பெற்றோர்கள் பெரியளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் எப்போதெல்லாம் அலைபேசி போன்ற தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க வரப்புகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டுமென்றும், குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.

தொழில்நுட்ப கருவிகளுடன் குழந்தைகள் செலவிடும் நேரமானது, அவர்களது தூக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை எந்த வகையில் பாதிக்காத வகையில் இருக்கவேண்டுமென்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

'பிஎம்ஜே ஓபன்' என்னும் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த முடிவுகள் குறித்த விவாதம் குழந்தைகள் நல மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் இடையே எழுந்துள்ளது.

இந்த ஆராய்ச்சிக்காக தொலைக்காட்சி பெட்டி, அலைபேசி, கணினி போன்ற பல்வேறு தொழில்நுட்ப கருவிகளில் குழந்தைகள் செலவிடும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அலைபேசி பயன்பாடு குழந்தைகளின் உடல்நலனை பாதிக்குமா?படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், 14 வயதுடைய இருபாலின குழந்தைகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்றில், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சிறுவர்களை விட சிறுமிகளுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

'குறிப்பிடத்தக்க ஆதாரம் இல்லை'

பிரிட்டனிலுள்ள ராயல் குழந்தைகள் நல கல்லூரி, 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது.

அந்த அறிக்கையில், அடிக்கடி பல தளங்களில் கூறப்படுவதைப்போன்று தொழில்நுட்ப கருவிகளின் திரைகளில் நேரத்தை செலவிடுவது உடல்நலனுக்கு "மோசமான" விளைவை உண்டாக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், வரம்பை மீறி அதிகளவிலான நேரத்தை மின்னணு திரைகளில் நேரத்தை செலவிடுவதற்கும், உடற்பருமன், மனஅழுத்தம் போன்றவற்றிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மேற்கண்ட முடிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராயல் காலேஜ், உடற்பருமன், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை கொண்டுள்ளவர்கள் அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுகிறார்களா அல்லது அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிட்டதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை என்று தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் உடலநலனுக்கும் அவர்கள் மின்னணு திரைகளில் நேரத்தை செலவிடுவதற்கும் தொடர்புள்ளதாக கூறும் வகையிலான ஆதாரங்கள் இல்லை என்பதால் தங்களது பரிந்துரையில் அதற்கான வரம்புகள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் "உலகை நன்றாக தெரிந்துகொள்வதற்கு" பயன்படும் அலைபேசிகள், கணினிகள் போன்றவை குறித்து பெற்றோர்களுக்கு கவலை உண்டாக்கும் வகையிலான தவறான செய்திகள் அடிக்கடி பரப்பப்படுகின்றன என்று ராயல் காலேஜை சேர்ந்த மருத்துவர் மாக்ஸ் டேவ் கூறுகிறார்.

அலைபேசி பயன்பாடு குழந்தைகளின் உடல்நலனை பாதிக்குமா?படத்தின் காப்புரிமை Getty Images

"நாங்கள் இந்த ஆய்வுக்காக உருவாக்கிய கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில்கள் உங்களுக்கு திருப்திகரமாக இருந்தால் கவலை ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருங்கள்."

"ஒருவேளை கேள்விக்கான பதில்கள் சங்கடத்தை ஏற்படுத்தினால், மின்னணு திரைகளில் செலவிடும் நேரம் குறித்து நீங்கள் ஆழ்ந்து யோசிக்க வேண்டுமென்று" அவர் மேலும் கூறுகிறார்.

மின்னணு காலத்திற்கேற்ற குழந்தை வளர்ப்பு குறிப்புகள்

  • குழந்தைகள் எவ்வளவு நேரம் மின்னணு திரைகளில் செலவிடலாம்; எவற்றையெல்லாம் பார்ப்பதற்கு அனுமதியுண்டு என்று திட்டமிட்டு தெளிவுற குழந்தைகளுக்கு விளக்குங்கள்
  • குழந்தைகள் இணையதளத்தில் என்ன செய்கிறார்கள் என்பது குறித்தும், என்ன பார்க்கிறார்கள் என்பது குறித்தும் விளங்க வையுங்கள்.
  • குழந்தைகளிடம் அவர்களுக்கு தெரிந்த நண்பர்களுடன் சமூக இணையதளங்களில் தொடர்புகொள்வதற்கு ஊக்குவியுங்கள்.
  • இணையத்தில் ஒன்றை கிளிக் செய்வதற்கு முன்னர் சிந்திக்க வேண்டியதன் அவசியம் குறித்து குழந்தைகளுக்கு கற்பியுங்கள்.
  • குழந்தைகள் தெரிந்தோ, தெரியாமலோ தவறான விடயங்களை இணையதளங்களில் பார்ப்பதை தடுக்கும் மென்பொருள்களை பயன்படுத்துங்கள்.
  • சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை பகிர்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து குழந்தைகளுக்கு தெளிவாக விளக்குங்கள்

https://www.bbc.com/tamil/science-46774197

  • கருத்துக்கள உறவுகள்
 
கேள்வி:- வணக்கம் டொக்டர். எனக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கின்றாள்.    அவள் அழும்போதெல்லாம் ஸ்மார்ட் போனைக் கொடுத்தால் அழுகையை நிறுத்திவிடுவாள். அதுவே என் மகளுக்கு இப்போதும் பழக்கமாகிவிட்டது. இப்போது 3 வயதுதான் ஆகிறது. ஆனால் பெரியவர்கள் போல போனும் கையுமாக இருக்கின்றாள். நாங்களும் அந்தப் பழக்கத்தில் இருந்து அவளை மீட்க முயற்சிக்கின்றோம்.  முடியவில்லை. நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும்.  ஏ. அமுதா யாழ்ப்பாணம்
 
Smartphones-Stressing-Children-350x234.jpg
 
 
பதில்:- குழந்தையை ஸ்மார்ட் போன் பழக்கத்திலிருந்து மீட்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று சொன்னால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். 
 
ஆனால் அதற்கு முதல் இப் பழக்கத்தால் குழந்தைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் எவை என்பதை அறிவது முக்கியமாகும். குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் கொடுப்பதானது கொகெயின் கொடுப்பதற்கு சமன் என்கிறார் ஒரு சிகிச்சையாளர். உண்மைதான் மோசமான போதை அதற்கு அடிமையாவது.
குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போனைக் கொடுத்தால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உங்கள் குழந்தையின் பேச்சு ஆற்றல் விருத்தியடையும் காலம் இது. ஸ்மார்ட் போனில் மூழ்கி இருக்கும் குழந்தைகளின் பேச்சு ஆற்றல் விருத்தியடைவது தாமதம் அடையும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சொல்லாற்றல் குறைவதுடன் அவர்கள் மற்றவர்களுடன் கலந்துரையாடுவது குறைந்துவிடும்
அதே போல அவர்களது எழுத்து ஆற்றலும் பாதிக்கப்படும். விரல் நுனிகளால் போனைத் தட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் தங்களது விரல்களை வளைத்து எழுத்துக்களை உறுப்பாக எழுதுவதில் ஆர்வம் விட்டுப் போய் எழுதும் ஆற்றல் பாதிக்கப்படும்.
 
குழந்தைகளுக்கு தூக்கம் பெரியவர்களைவிட அதிக நேரம் தேவை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் ஸ்மார்ட் போனில் ஆர்வம் கொண்டு அதில் நேரத்தை செலவழிக்கும் குழந்தைகள் தூங்கும் நேரம் குறைந்துவிடுகிறதாம். அண்மைய ஆய்வு முடிவுகளின்படி குழந்தை ஒரு மணிநேரம் ஸ்மார்ட் போனில் செலவிட்டால் 15 நிமிடங்கள் தூக்கம் குறைகிறதாம்.
 
இவற்றை விட, ஸ்மார்ட் போனில் பார்க்கும் விடயங்களால் உடலியல் மற்றும் உளவியில் தாக்கங்களும் குழந்தைக்கு ஏற்படுகிறது. 
 
ஸ்மார்ட் போனில் இருந்து நீலக் கதிர் வீச்சு ஏற்படுகிறது. நீலக் கதிர்களால் உடற் கடிகார இயங்கங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். அதாவது தூங்கும் நேரம் விழித்தெழும் நேரம் போன்ற எமது நாளாந்த செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் அந்தக் கதிர்கள் கண்களினுள் ஆழப் புகுந்து நுண்பார்வைக்கு முக்கியமான மக்கியூலா பகுதியை பாதிக்கும் (ஆயஉரடயச னநபநநெசயவழைn).  இது குணப்படுத்த முடியாத பாதிப்பு ஆகும்.
கிருமித் தொற்று நோய்கள் குழந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. ஏனெனில் 90 சதவிகிதத்திற்கு மேலான போன்களில் கிருமி பரவியிருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
குழந்தையை ஸ்மார்ட் போனிலிருந்து விடுவிப்பதற்கு நீங்கள் முக்கியமாகச் செய்ய வேண்டியது என்னவெனில் நீங்கள் முன்மாதிரியாக இருப்பதுதான். நீங்கள் ஸ்மார்ட் போன் பாவனையை கட்டுப்படுத்து அவசியம். முக்கியமாக குழந்தையின் கண்பார்வை படும் இடத்திலிருந்து பாவிக்க வேண்டாம். அதில் அழைப்பு வந்தால் அதற்கு மறுமொழி கொடுத்துவிட்டு உடனடியாகவே அதை குழந்தையின் கைபடாத இடத்தில் வைத்து விடுங்கள்.

 
images.jpg
நீங்கள் ஸ்மார்ட் போனில் நோண்டிக் கொண்டிருப்பது குழுந்தையின் கவனத்தை ஈர்த்து, அதன் ஆவலைத் தூண்டி குழந்தையையும் அதில் கைபோட வைக்கும். இந்த விடயத்தில் பெற்றோர் முன்மாதிரியாக இருப்பது அவசியம். அத்துடன் பெற்றோர் ஸ்மார்ட் போனில் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பதானது குழந்தை தான் அலட்சியப்படுத்தப் படுவதான உணர்வைக் கொடுத்து அதை ஏக்கமடையச் செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
குழந்தையுடன் பேசுவது, அதற்கு விருப்பமான கதைகளைக் கூறுவது, அதனுடன் சேர்ந்து விளையாடுவது, அதன் வயதிற்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது ஆகியவற்றைச் செய்யுங்கள்.
குழந்தையை வெளியே அழைத்துச் செல்வதும், அதன் வயதுள்ள குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவையும் உங்கள் குழந்தையின் கவனத்தை ஸ்மார்ட் போனிலிருந்து விடுவிப்பதற்கு உதவும்.
 
பொதுவாக இரண்டு வயதுவரை குழந்தைகள் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பழகிப் புரிந்து கொள்ள வேண்டிய காலம். பெற்றோருடனும் மற்றவர்களுடனும் ஊடாட வேண்டிய காலம். ஸ்மார்ட் போன் ஆகவே ஆகாது. மூன்று வயதில் அவர்கள் ஸ்மார்ட் போன் ஊடாக சிலவற்றைக் கற்கக் கூடிய காலம். கண்காணப்போடு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ஸ்மார்ட் போனைக் கொடுக்கலாம்.
 
உங்கள் குழந்தைக்கு என சொந்தமாக ஒரு ஸ்மார்ட் போன் எப்போது கொடுக்கலாம்?. பதினொரு வயதிற்கு மேலேயே நல்லது என 2017 வந்த ஒரு ஆய்வு கூறியது.
 
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.