Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலுவலகம் இல்லை.. நடுத்தெருவில் நிற்கிறேன்.. நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் வேதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

i have no office,idol wing special officer pon.manickavel expressed his displeasure in court

அலுவலகம் இல்லை.. நடுத்தெருவில் நிற்கிறேன்.. நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் வேதனை.

அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்க வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல் வழக்குகளை ஐ ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வருகிறது. ஆனால் அவர் மீது சக அதிகாரிகளே கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. பணியின் போது பல்வேறு இடையூறுகளையும், நெருக்கடிகளையும் அளிப்பதாக புகார் தெரிவித்தனர்.

இந் நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது. விசாரணையின் போது பொன்மாணிக்கவேல் ஆஜரானார்.

அப்போது, கிண்டியில் அலுவலகம் தர முடியாது என உயரதிகாரி கூறுவதாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார். நீதிமன்றம் உத்தர விட்டும் வழக்கை விசாரிக்க அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன்.

போலீஸ் அதிகாரிகள் யாரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. எனக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்களை எனக்கு எதிராக புகார் தர செய்கின்றனர் என்று வேதனை தெரிவித்தார்.

அப்போது இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ''ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நீதிமன்றம்தான் நியமித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீறப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி நிலை குறித்து விளக்க தலைமைச் செயலாளரை ஆஜராக உத்தரவிட வேண்டும்.

பொன்மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என கண்டனம் தெரிவித்து, விசாரணையை 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். வரும் 9ம் தேதி தலைமை வழக்கறிஞர் கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/i-have-no-office-idol-wing-special-officer-pon-manickavel-expressed-displeasure-338387.html

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்க டாடி குதிருக்குள் இல்லை... வாண்டடாக வந்து வண்டியில் ஏறிய 2 அமைச்சர்கள்..!

aiadmk.gif

சிலை கடத்தல் விவகாரத்தில் எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் வந்து இரண்டு அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த போது செய்யாத விஷயங்களை எல்லாம் சிறப்பு அதிகாரியான பிறகு அதிரடியாக செய்து வருகிறார் பொன் மாணிக்கவேல். அந்த வகையில் அறநிலையத்துறையின் உயரதிகாரிகளை கம்பி எண்ண வைத்த அவர் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வெளிநாடுகளில் இருந்து சிலையை மீட்க விடாமல் தடுத்ததாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் புதன்கிழமை அன்று ஒரு குண்டை தூக்கி போட்டார் பொன் மாணிக்கவேல். அதாவது சிலை கடத்தல் விவகாரத்தில் அமைச்சர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் கூறி அதிர வைத்தார் பொன் மாணிக்கவேல். உடனடியாக அதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்யும் படி நீதிபதி கூற, தாராளமாக என்று கூறி மிரள வைத்தார்.

இந்த நிலையில் பொன் மாணிக்கவேல் கூறிய அமைச்சர்கள் 2 பேர் யார் என தமிழகத்தில் பெரிய பட்டிமன்றமே நடைபெற்றது. அவர்கள் பெயரை வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். ஆனால் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் பேச முடியாது என்று ஜெயக்குமார் நழுவிச் சென்றார்.

இந்த நிலையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், பொன் மாணிக்கவேல் சிலை கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். ஆனால், அதற்குள் எங்களுக்கு தான் இதில் தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளியிடுகிறார்கள். எங்களுக்கும் சிலை கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பதறியபடி பேட்டி அளித்துள்ளனர்.

பொன் மாணிக்கவேல் பெயரை வெளியிடுவதற்குள் செய்திகள் வெளியானதாக கூறி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், சேவூர் ராமச்சந்திரனும் பதறியிருப்பது எங்க டாடி குதிருக்குள் இல்லை என்கிற கதையை நினைவுபடுத்துவதாக சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டுவருகிறது.

அதே சமயம் தங்கள் மீதான அபாண்ட புகாருக்கு அவர்கள் விளக்கம் மட்டுமே கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் சிலை கடத்தல் வழக்கை மையமாக வைத்து தமிழகத்தில் மிகப்பெரிய சூறாவளி வீசுவது உறுதி என்பது மட்டும் தெரிகிறது.

https://tamil.asianetnews.com/politics/idol-smuggling-dindigul-sreenivaasan-and-sevvoor-ramachandran-denies-pv8h5z

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.