Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் மனம்

Featured Replies

காதல் மனம்

தனியே சிரித்திருக்கும்.

தனிமையில் நிலைத்திருக்கும்.

காணுமிடமெல்லாம் தன்

காதலையே பார்த்திருக்கும்.

ஊனுள் உருகிநிற்கும்.

உள்ளத்தை மறைத்து வைக்கும்.

தாம் மட்டுந்தானென்றே

தம்மையே புகழ்ந்து நிற்கும்.

காலத்தால் அழியாது என்றும்

காவியத்தி உள்ளோமென்றும்

போதை தலைக்கேறினாற் போல்

பொய்களும் உரைத்து நிற்கும்.

அன்னைக்கு அடங்கேனென்றும்

தந்தை சொற் கேட்கேனென்றும்

இன்பம் காதல் ஒன்றே என்று

எப்போதும் இறுமாந்திருக்கும்.

உங்கள் காதல் மனங்களையும் அவிழ்த்து விடுங்கள்.

  • தொடங்கியவர்

காதலில் தோற்ற மனம்.

தனிமையில் அழுது நிற்கும்.

தற்கொலைக்கும் துணிந்துவிடும்.

உயிராய் நினைத்த காதல்

உதவாதென்றே சொல்லும்.

துன்பத்தால் துவண்டு நிற்கும்.

இன்பத்தை வெறுத் தொதுக்கும்

எத்தகைய உலகமென்றே

தத்துவங்கள் பேசிக் கொள்ளும்.

முகத்தில் முடிவளர்க்கும்.

முடிந்ததையே எண்ணியேங்கும்.

அகத்தில் தன் துயரம் போக்க

அனுதினமும் மதுவை யருந்தும்.

தன்னழகைக் கலைத்து நிற்கும்.

தனக்குள்ளே வெதும்பி நிற்கும்.

காதலின் தோல்வியிங்கு

தனக்கென்றே நினைத்து வாடும்.

மௌனத்தால் தனை வாட்டும்.

கவனத்தைத் திசைதிருப்பும்.

மனத்தினிடை வளர்த்த காதல்

மதி கெட்ட தென்றே தேறும்.

தோற்ற அனுபவங்கள் இருந்தால் அதையும் அவிழ்த்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் காதலிச்சு ஏமாறனும் என்றீங்க..! மனம் தான் எல்லாவற்றிற்கும் காரணம்.. காதலிக்கவும் அதுதான் காரணமும்.. ஏமாற்றவும் அதுதான் காரணம்..! அதை அடக்கி ஆளத் தெரிஞ்சிட்டா.. காதலின் சுகமும் இல்ல ஏமாற்றத்தின் வலியுமில்ல..! என்ன செய்வம்.. நாமல்லாம் தெரிஞ்சும் சீரழியுறமே...! எவர் சொல்வழி கேட்கிறம்..மனப் போன போக்கில தான போக நிற்கிறம்..! அதுவும் காதலிச்சிட்டு கூசாம காதலிக்கல்ல என்று சொல்லுறாங்க பாருங்க..அவங்களைப் போல மனசு வாய்க்கனுங்க.. வாழ்க்கைல பிழைக்க...! :lol::unsure::lol:

Edited by nedukkalapoovan

பிள்ளைப் பருவத்தில் துள்ளி நான் திரிந்தேன்

இளமை வந்தவுடன் குறும்பு பல செய்தேன்

காளை வயதினிலே மங்கையை மணந்திருந்தேன்

இல்லறமாய் இருந்திங்கு பெண்குழந்தை பெற்றெடுத்தேன்

அன்பாலே சேர்ந்து நாம் இன்பமுடன் வாழ்ந்திருந்தோம்

இதயத்தை பகிர்ந்து நாம் பங்காக்கி வீடு செய்தோம்

அதை ஆளுக்கு ஒன்றாக ஆசையாய் பிரித்தெடுத்தோம்

அவள் நோயுற்ற போது நான் நோயாளி ஆகிடுவேன்

முற்றத்து பந்தாட்டம் எனக்கு ஒலிம்பிக்காய் களியாட்டம்

பள்ளியில் சித்திதனை பட்டம் பெற்றதென்றே கொண்டாட்டம்

விதம் விதமா சட்டை தைச்சு என் மனைவி போட்டிடுவா

தலைமுழுக்க பூச்சுட்டி நாள் கணக்கா பாத்து நிப்பா

பிள்ளையின் பிறந்த நாள் தினந்தினம் ஏன் வாராதோ

தாமரை போல் முகம் காண ஒரு வருடம் போகாதோ

இன்பத்தில் நாம் மகிழ எத்தனை நாள் பார்த்திருக்க

பதினாறு தாண்டிவர இனி பக்குவமாய் காதல் வரும்

பாசத்தில் பங்கெடுக்க ஒரு பையனுக்கும் சேதி செல்லும்

பெற்றவரின் பேச்சுக்கு அவள் தருவாள் மௌனம் பதில்

பெற்றோம் பெயரிட்டோம் பொட்டுவைத்தோம் பூச்சூட்டி

இனி தள்ளாமை தூரமில்லை நினைவுகள் தான் மீதம் வரும்

இயற்கையின் விதிதானே இல்லறமாய் வாழ்வதிங்கு

இது சக்கரமாய் சுழன்று வரும் கதை மீண்டும் பாரிங்கு

அப்பன் மகன் பிள்ளை பேரன் வழி போகவே இங்கு

மானிடத்தின் மாயை இதை யார் தடுப்பார் பாரில் வந்து

வாழத் தான் வாழ்கையென்று வாழ்த்தியே நீ அனுப்பு!

Edited by Norwegian

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote name='Iraivan' date='Apr 15 2007, 01:58 AM' post='286465']

காதலில் தோற்ற மனம்.

தனிமையில் அழுது நிற்கும்.

தற்கொலைக்கும் துணிந்துவிடும்.

உயிராய் நினைத்த காதல்

உதவாதென்றே சொல்லும்.

துன்பத்தால் துவண்டு நிற்கும்.

இன்பத்தை வெறுத் தொதுக்கும்

எத்தகைய உலகமென்றே

தத்துவங்கள் பேசிக் கொள்ளும்.

முகத்தில் முடிவளர்க்கும்.

முடிந்ததையே எண்ணியேங்கும்.

அகத்தில் தன் துயரம் போக்க

அனுதினமும் மதுவை யருந்தும்.

தன்னழகைக் கலைத்து நிற்கும்.

தனக்குள்ளே வெதும்பி நிற்கும்.

காதலின் தோல்வியிங்கு

தனக்கென்றே நினைத்து வாடும்.

மௌனத்தால் தனை வாட்டும்.

கவனத்தைத் திசைதிருப்பும்.

மனத்தினிடை வளர்த்த காதல்

மதி கெட்ட தென்றே தேறும்.

நல்லா இருக்கு உங்க 2 கவிதையும்..

கவிதை எழுத தெரிந்தால் அவிழ்த்து விடலாம்தான்...ஆனால் எழுத தெரியாதே... :lol:

நோர்வேயியம் உங்கள் கவிதை மிகவும் அழகு...ரசிகன் நீங்கள்..

நல்ல கவிதைகள்..தொடருங்கள் உறவுகளே..

  • கருத்துக்கள உறவுகள்

காதல் மனம் எப்போதுமே அழகு.

வானத்தில் சிறகடித்து பறக்கும் மனம்.

  • தொடங்கியவர்

மொத்தத்தில் காதலிச்சு ஏமாறனும் என்றீங்க..! மனம் தான் எல்லாவற்றிற்கும் காரணம்.. காதலிக்கவும் அதுதான் காரணமும்.. ஏமாற்றவும் அதுதான் காரணம்..! அதை அடக்கி ஆளத் தெரிஞ்சிட்டா.. காதலின் சுகமும் இல்ல ஏமாற்றத்தின் வலியுமில்ல..! என்ன செய்வம்.. நாமல்லாம் தெரிஞ்சும் சீரழியுறமே...! எவர் சொல்வழி கேட்கிறம்..மனப் போன போக்கில தான போக நிற்கிறம்..! அதுவும் காதலிச்சிட்டு கூசாம காதலிக்கல்ல என்று சொல்லுறாங்க பாருங்க..அவங்களைப் போல மனசு வாய்க்கனுங்க.. வாழ்க்கைல பிழைக்க...! :D:D:D

அநுபவங்கள் இலகுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதைத் தாமே அநுபவித்து உணரும்வரை அதன் தன்மைகளை அறிந்து கொள்ள முடிவதுமில்லை. காதலில் வென்றாலென்ன ஃதொற்றாலென்ன மகிழ்ச்சி துக்கம் ஏக்கம் எல்லாம் நீங்கள் சொல்வது போல் மனதின் வழிப்பட்டவைதான். ஆனால் இந்த அநுபவம் என்பது எப்போதும் புதுமையானதொன்று. உங்கள் அநுபவத்தையும் கொஞ்சம் அவிழ்த்துத்தான் விடுங்களேன். இன்பமென்றாலும் துன்பமென்றாலும் அதைச் சுவைக்கலாம்.

  • தொடங்கியவர்

காதல் மனம் எப்போதுமே அழகு.

வானத்தில் சிறகடித்து பறக்கும் மனம்.

.கறுப்பி அந்த அநுபவத்தை கள உறவுகளும் இரசிக்கலாமா? அல்லது உங்களுக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ளப் போகின்றீர்களா? அவிழ்த்து விட்டால் சுவைப்போம்.

  • தொடங்கியவர்

quote name='Iraivan' date='Apr 15 2007, 01:58 AM' post='286465']

காதலில் தோற்ற மனம்.

.நல்லா இருக்கு உங்க 2 கவிதையும்..

கவிதை எழுத தெரிந்தால் அவிழ்த்து விடலாம்தான்...ஆனால் எழுத தெரியாதே... :D

தெரியாது என்று கைவிட்டால் அது தெரியாமலே போய்விடும். படைப்புக்களம் உங்கள் படைப்புகளுக்கு இடந்தரும். அதில் கிடைக்கின்ற பாராட்டுக்கள் உங்களுக்க உற்சாகத்தைத் தரும். கவிதை எழுதுவது ஒன்றும் சிரமமான விடயமல்ல. சொற்களைத் தோர்ந்தெடுத்துத் தொகுப்பதிலேதான் உங்கள் கவிதையின் வெற்றியிருக்கும். எனது கவிதையைப் பாராட்டியதற்கு நன்றிகள். நிச்சயம் உங்கள் கவிதைகளுக்கும் பாராட்டு வரும். முயற்சித்துப் பாருங்கள்.

ஜெனனி, இறைவன் சொல்வது முற்றிலும் உண்மை. உங்களுக்கு கவிதை எழுத வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் தெரியாது என்று சும்மா இருந்துவிடாதீர்கள்.

தொடங்குவதற்கு மிகவும் இலகுவான வழி:

சிறிய அல்லது எளிமையான விடயமொன்றைத் தேர்ந்தெடுத்து அதைப் பற்றி ஒரு வரியில் இவ்விரண்டு சொற்கள் வரும்படியாக 4 அல்லது 6 வரிகள் எழுதுங்கள்.

பிறகு பாருங்கள் எப்படி வருமென்று. கவிதைக் களத்தில் உங்கள் கவி ஆக்கங்களுடன் சந்திப்போம்.

  • தொடங்கியவர்

பிள்ளைப் பருவத்தில் துள்ளி நான் திரிந்தேன்

இளமை வந்தவுடன் குறும்பு பல செய்தேன்

காளை வயதினிலே மங்கையை மணந்திருந்தேன்

இல்லறமாய் இருந்திங்கு பெண்குழந்தை பெற்றெடுத்தேன்

அன்பாலே சேர்ந்து நாம் இன்பமுடன் வாழ்ந்திருந்தோம்

இதயத்தை பகிர்ந்து நாம் பங்காக்கி வீடு செய்தோம்

அதை ஆளுக்கு ஒன்றாக ஆசையாய் பிரித்தெடுத்தோம்

அவள் நோயுற்ற போது நான் நோயாளி ஆகிடுவேன்

முற்றத்து பந்தாட்டம் எனக்கு ஒலிம்பிக்காய் களியாட்டம்

பள்ளியில் சித்திதனை பட்டம் பெற்றதென்றே கொண்டாட்டம்

விதம் விதமா சட்டை தைச்சு என் மனைவி போட்டிடுவா

தலைமுழுக்க பூச்சுட்டி நாள் கணக்கா பாத்து நிப்பா

பிள்ளையின் பிறந்த நாள் தினந்தினம் ஏன் வாராதோ

தாமரை போல் முகம் காண ஒரு வருடம் போகாதோ

இன்பத்தில் நாம் மகிழ எத்தனை நாள் பார்த்திருக்க

பதினாறு தாண்டிவர இனி பக்குவமாய் காதல் வரும்

பாசத்தில் பங்கெடுக்க ஒரு பையனுக்கும் சேதி செல்லும்

பெற்றவரின் பேச்சுக்கு அவள் தருவாள் மௌனம் பதில்

பெற்றோம் பெயரிட்டோம் பொட்டுவைத்தோம் பூச்சூட்டி

இனி தள்ளாமை தூரமில்லை நினைவுகள் தான் மீதம் வரும்

இயற்கையின் விதிதானே இல்லறமாய் வாழ்வதிங்கு

இது சக்கரமாய் சுழன்று வரும் கதை மீண்டும் பாரிங்கு

அப்பன் மகன் பிள்ளை பேரன் வழி போகவே இங்கு

மானிடத்தின் மாயை இதை யார் தடுப்பார் பாரில் வந்து

வாழத் தான் வாழ்கையென்று வாழ்த்தியே நீ அனுப்பு!

இளமையிலிருந்து முதுமை வரையான உங்கள் காதல் மனத்தில் இடையூறுகள் வரவில்லையா? இடையூறு என்பது வெறும் துன்பம் மட்டுமல்ல அதிலிருந்து மீளும்போது கிடைக்கின்றதே அந்த இன்பம் தடையில்லரமல் நிறைவேறும் காதலை விடவும் இன்பமானது. அதைப் படிப்பதிலும் இன்பமுண்டு. அவிழ்த்து விடுங்கள் நோர்வேஜியன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.