Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனுராதபுரம் தமிழ் பள்ளிக்கூடம் ஒன்றில் முஸ்லிம்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாணவர்கள் தமது மத, கலாசார சூழலில் கல்விகற்கும் இலட்சியத்துடன் உருவாக்கபட்ட அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் முஸ்லீம் பாடசாலையாக மாற்றும் நீண்டகால திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு அனுராதபுரம் விவேகானந்தா சபையின் தலைவரும் பாடசாலையின் முன்னாள் அபிவிருத்திசங்க செயலாளருமான வி.ஞானசந்திரன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் அமைந்துள்ள விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலத்தில் நடைபெறும் அநீதிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று வவுனியா தமிழ் ஊடக மையத்தில் நேற்றைய தினம் காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

”1961ம் ஆண்டு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் பிரகாரம் உருவாக்கபட்டதே அனுராதபுரம் விவேகானந்தா தமிழ்வித்தியாலயம். 1985ம் ஆண்டு வரை சிறப்பாக செயற்பட்ட நிலையில் 1985ம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வால் பாடசாலை மூடபட்டிருந்தது. பின்னர் மீண்டும் முஸ்லீம் அதிபர், ஆசிரியர் குழாமுடன் மீளஇயங்கியது. இந்து தமிழ் மாணவர்களின் நலன் காக்க யாருமற்ற நிலையில் சிறிது, சிறிதாக பாடசாலை நிர்வாகத்தால் எமது மாணவர்களிற்கு அநீதிகள் புரியபட்டது. இதனால் 100 வீதம் இந்துக்களாக இருந்த பலர் மதமாற்றத்திற்கு உள்ளாகினார்கள்.

1987 முதல் 2000 ஆம் ஆண்டுவரை விவேகானந்தா சபை இயங்காத நிலையில் குறிப்பிட்ட காலபகுதிக்குள் குறித்த பாடசாலையை முஸ்லீம் பாடசாலையாக மாற்றும் நீண்டகால திட்டம் முஸ்லீம் நிர்வாகத்தால் மேற்கொள்ளபட்டது.

பின்னர் 2000ஆம் ஆண்டு விவேகானந்தா சபை இயங்கஆரம்பித்தது. தற்போதுவரை பாடசாலையின் நிர்வாகம் பாடசாலையின் பழைய வரலாறுகளை அழித்து, சபை மற்றும் கதிரேசன் ஆலயத்திற்கிடையிலான தொடர்புகளை துண்டித்து முஸ்லீம் பாடசாலையாக மாற்றும் நோக்குடன்செயற்பட்டு வருகின்றது. எமது சபை கதிரேசன் ஆலயம், விவேகானந்தா வித்தியாலம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டிலேயே அமைந்துள்ளது.

தற்போதைய நிர்வாகம் வரலாறு தெரியாத இந்து தமிழ் பெற்றோர்களை மூளைச் சலவைசெய்து விவேகானந்தா சபை மற்றும் ஆலயத்துடனான தொடர்புகளை துண்டித்துவருகிறது. இந்துமாணவர்களிற்கும் விவேகானந்தா சபைக்கும் அநீதி ஏற்படும்போது பௌத்தமதகுருக்கள், சிங்கள அறிஞர்கள், அரசியல்வாதிகள் எமக்கு உதவிவருகின்றனர்.

தற்போதுவரை இந்துமத விடுமுறை நாட்களில் பாடசாலை நடாத்தபடுகின்றது. வீபூதி தரிக்க அனுமதி மறுக்கபடுகின்றது. இந்துசமய பிரார்தனைகளிற்கு தடைவிதிக்கபடுவதுடன், இந்துசமயம் கற்பிப்பதற்கு வகுப்பறைகொடுக்காமல் மரங்களின் கீழேயே நடைபெற்றுவருகிறது. விவேகானந்தன் என்ற பெயரில் இருந்த சஞ்சிகையின் பெயர் விவேகி என மாற்றபட்டது. விவேகானந்தரின் படம் அகற்றபட்டது, இந்து மாணவர்கள் பர்தா அணிவிக்கபட்டார்கள், சிவராத்திரி தினத்தில் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது . பாடசாலையில் கற்பிக்கும் 11 தமிழ் ஆசிரியர்களும் கதிரேசன் ஆலயத்திற்கு வருவதில்லை. அவர்களிற்கு தடை விதிக்கபடுவதாக உணர்கின்றோம். இவ்வாறான விடயங்கள் தற்போது பாடசாலையில் நிகழ்ந்து வருகிறது. இது அநீதியான செயற்பாடு.

தற்போது எமது முயற்சியின் விளைவாக வவுனியாவில் இருந்து இந்து அதிபர் ஒருவரை பாடசாலைக்கு நியமித்தோம். எனினும் அவரை பிரதி அதிபராகவே மாகாணகல்விப் பணிப்பாளர் அங்கு நியமித்துள்ளார். பாடசாலைக்கு இந்து அதிபர் நியமிக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோள். இது தொடர்பாக ஆளுநர், அரச அதிகாரிகளுடன் ஒரு கலந்தரையாடலை மேற்கொண்டு வருகிறோம். அத்துடன் எமது பிரச்சினைகளை அனைவரும் புரிந்துகொள்ளுமாறு அனைத்து தரப்புகளுக்கும் தெரியப்படுத்துகின்றோம்.” என்றார் அவர்.

https://www.ibctamil.com/srilanka/80/112355?fbclid=IwAR0DaOsC5OQRW1cjFIK_xuJBfUCT_5WDDM8t5NxikxNdBJAXkEUfnTM_iGc

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.