Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் ஈழ ஆதரவும், இந்திய உளவுத்துறையினரின் திட்டமிட்ட சதிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஈழ ஆதரவும், இந்திய உளவுத்துறையினரின் திட்டமிட்ட சதிகளும்

நேற்று 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாருக்கு வீரவணக்கமும் நாட்டுப்பற்றாளர் தினமும் சிட்னியில் நடைபெற்ற போது பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும் 'புரட்சி பெரியார் முழக்கம்' ஏட்டின் ஆசிரியருமான 'விடுதலை' க.இராசேந்திரன் அவர்களின் உரையில் இருந்து

20070415005vp3.jpg

தமிழகத்தில் இன உணர்வு இன்னும் மங்கிவிடவில்லை என்று எடுத்துக் கூறியதுடன், அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளையும் அதன் பின்னணி விவரங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உணர்வினை சுட்டிக்காட்டியதுடன் அண்மையில் இந்தியா - சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலுக்கு உடன்பட்ட முதல்வரை அவருடன் இணைந்திருக்கின்ற பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தேர்தலில் போட்டியிடாத தமிழின உணர்வுக் கட்சிகள் சுட்டிக்காட்டியவுடன் மறுநாளே கூட்டு சுற்றுக்காவல் நடவடிக்கைக்கு எதிராக அறிக்கை விட்டதன் ஊடாக மக்களின் உணர்வுகளை உள்வாங்கக்கூடியவராக முதல்வர் கருணாநிதி இருக்கின்றார் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவின் தலைவரான ஜெயலலிதா, தொடர்ந்து ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக செயற்படுவதுடன், கருணாநிதி ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தீவிர பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதனையும் 'விடுதலை' இராசேந்திரன் விளக்கினார்.

அண்மைக்காலத்தில் தமிழக கடற்பரபில் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் கடத்தல் சம்பவங்கள் அனைத்துமே இந்திய உளவுத்துறையினரின் திட்டமிட்ட சதி நாடகம் என்பதனையும், அதன் உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்தும் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக காய்களை நகர்த்தி வருவதனையும் விவரங்களோடு அவர் எடுத்துரைத்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமான புளொட் இயக்கத்தினால் நடத்தப்பட்ட மாலைதீவு சதிப்புரட்சிக்குப் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருந்ததனையும் அதன் பின்னணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் இலங்கை இனப்பிரச்சனையில் இன்றளவும் புதுடில்லி அதிகாரிகளின் சதிகள் பற்றி புதுடில்லியில் இருந்து வெளிவரும் 'தெகல்கா' ஏடு வெளியிட்ட தகவல்களையும் எடுத்துக் கூறி இது போன்ற பல வெளிவராத தகவல்கள் உள்ளன என்பதனையும் இதனை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறும் கடமை தமிழின உணர்வாளர்களாகிய தங்களுக்கு இருப்பதையும் இராசேந்திரன் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு பாரிய பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் இஸ்ரேலிய மக்கள் தமது மண்ணுக்கு செய்த பங்களிப்பு போன்று புலம்பெயர் ஈழத் தமிழர்களும் செய்ய வேண்டும் என்றார் அவர்.

'மாமனிதர்' ஜெயக்குமார் ஆற்றிய பணியினை எடுத்துக் கூறியதுடன், 'நாட்டுப்பற்றாளர்' அன்னை பூபதியைப் பற்றி மாவீரர் கஸ்தூரி எழுதிய கவிதையின் வரியினை அவர் சுட்டிக் காட்டிப் பேசினார்.

வான் புலிகளின் தாக்குதலால் அனைத்துலக மட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்களையும், தமிழக ஊடகத்தில் வெளிவந்த கட்டுரைகள் பற்றியும் மாறி, மாறி வந்த சிறிலங்கா அரச தலைவர்களையும் இராணுவத் தளபதிகளையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், தொடர்ந்து எதிர்கொண்டு வருவதனையும் தாம் கொண்ட இலட்சியமான தமிழீழக் கோரிக்கையில் தேசியத் தலைவர் அவர்கள் இம்மியளவும் பிசகாது உறுதியுடன் இருப்பதனையும் தனது உரையில் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.

நிகழ்வின் தொகுப்பினை வாசிக்க http://www.eelampage.com/?cn=31448

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தமிழக உறவுகளின் ஈழ அதரவு, இந்திய உளவுப்படைகளின் சதிகள், மாமனிதர் ஜெயக்குமார் பற்றிய தகவல்கள் ஆகிய மேலதிக விபரங்களை அறிய 'விடுதலை' க. இராஜேந்திரனின் பேட்டியின் முழுமையான ஒலிவடிவம்.

http://www.tamilnaatham.com/speeches20060220.html

கந்தப்பு... வீட்டில் இருந்து கூட்டத்திற்கு சென்றவர்கள் மூலம் இந்த செய்தியை அறிந்தேன்...

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஈழ அதரவு, இந்திய உளவுத்துறையின் திட்டமிட்ட சதிகள் - மாலைதீவு சம்பவம், தற்போதைய சதிகள், தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களுக்கு ஏற்படுத்திய நெருக்கடிகள் போன்றவற்றை வாசிக்க

http://www.tamilnaatham.com/special/viduth..._in_sydney.html

ஈழத்திற்கான ஆதரவோ தமிழினத்திற்கான ஆதரவோ தமிழகத்தில் எப்போதும் நிரந்தரமானது. தீய சக்திகளும் உளவுப்பிரிவினரின் சதி நடவடிக்கைகளும் இடையியே வந்துபோபவை. இந்தசக்திகளின் நோக்கங்கள் அவ்வப்போது வெற்றிபெறுவது போல் தோன்றினாலும் ஈழத்தில் விடுதலைப்புலிகளின் வெற்றிகளினால் அவைகள் முறியடிக்கப் பட்டுவிடும். தமிழின உணர்வாளர்கள் தமிழகத்தில் இருக்கும்வரை இந்த தீயசக்திகள் எது செய்தாலும் அது தற்காலிக நிகழ்வுதானே தவிர பின்னடைவில்லை என்பது என் கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.