Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏன் இந்த ஏமாற்றுக் கதை டீ.ஆர்.பாலு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராமநாதபுரம்: ராமர் பாலம் என்பதே முழுக்க முழுக்க கட்டுக்கதை தான். மன்னார் வளைகுடா மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் ஏதுமில்லை என மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திர திட்ட பணிகளை நேரில் பார்வையிட்ட அவர் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்,

இத் திட்டத்தில் இதுவரை 13.1 மில்லியன் கன அடி அகழ்வுப் பணி முடிந்துள்ளது. ஆதாம் பகுதியில் இப்போது அகழ்வுப் பணி நடந்து வருகிறது.

இந்த பகுதியில் சுற்று சூழல் பாதிக்கப்படுமா என 2,424 முறை பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். கடலுக்கு அடியிலும் 2,003 மீட்டர் ஆழத்திற்கு பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

ராமர் பாலம் என்பதே இது முழுக்க முழுக்க கட்டுக்கதை தான். இந்தப் பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் ஏதுமில்லை என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துவிட்டன.

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடப்பதால் அரசியல் நோக்கத்தில், ஓட்டு வாங்குவதற்காக இந்த பிரச்சனையை பாஜக இப்போது கிளப்புகிறது.

பாஜக ஆட்சியின் போது வகுத்த திட்டத்தின்படிதான் இந்த சேது சமுத்திர திட்ட பணிகள் நடந்து வருகிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறன்.

ஆதாம் பாலம் (ராமர் பாலம்) கடல்-நில மாற்றங்களால் ஏற்பட்டது என மன்னார் வளைகுடா ராமர் பாலம் ஆய்வுகள் தெரிவித்துவிட்டன.

இந்தப் பணி திட்டமிட்டபடி 2008ம் வருடத்திற்குள் முடிக்கப்படும் என்றார் பாலு.

நன்றி தற்றிஸ்தமிழ்

----------------------------------------------------

எங்கோ பிறந்த வான்முகியும், கம்பனும் பார்த்து விட்ட இராமர்பாலம் கதை எழுதினார்கள். அவர்களுக்கு எப்படி கடல் மாற்றங்கள் எல்லாம் தெரிந்தது? சொல்லப் போனால், தமிழன் தனித்துவமானவன் என்று காட்டுவதற்காகப் பொய்யும், ஏமாற்றுக்கதைகளும் சொல்ல வெளிக்கிட்டார்கள். அதனால் தான் சம்பந்தமே இல்லாத ஆதாம் பாலம் என்று சொல்லத் தெரிந்த பாலுவிற்கு இராமர் பாலம் என்று சொல்லத் தெரியவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசியல் ஒரு சாக்கடை. அதில் ஆர்கிஜோலொகி என்ன எதுவுமே நிலைக்காது..காசுக்கு ஏற்ப அதுவும் மாறும்..அரசியல் செல்வாக்கு எல்லா இடமும் மிகுந்துவிட்டிருக்கிறது..!

இராமர் அணைகட்டினாரோ இல்லையோ நாசா எடுத்த செய்மதிப்படத்தில் தோன்றும் தரைத்தோற்றத்துக்கான புவியியல் விளக்கம் என்ன..??! அதை திமுக அதிகாரபூர்வமாக வெளியிடுமா..???! எதை வைத்து இந்தத் தீர்மானங்கள் எடுப்பட்டன என்ற ஆய்வுக்கட்டுரையை ரி ஆர் பாலு சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறாரா..??! அதன் பின்னர்தான் இதைப் பற்றி பேசனும்..! இது இந்திய அரசியல் உள்ள சாதாரண அரசியல் சித்துவிளையாட்டுக்கள்..! இதில் ஆர்கிஜோலொஜியும் சிக்கிச் சின்னாபின்னாமாவது.. கவலைக்கிடமானது.

இந்த தரைத்தோற்றம் பற்றி இன்னும் உருப்படியான ஆய்வுகள் எதுவும் செய்யப்பட்டதாக இல்லை..! சர்வதேச அளவில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளும் இல்லை..! அப்படி இருக்க அப்பாவி மக்களை குழப்பியடிக்கும் பணியை கற்பனைகளையும் அரைகுறை றிப்போட்டுக்களையும் வைச்சுச் செய்கின்றனர் அதுவும் அரசியல் ஆதாயத்துக்காக. காங்கிரஸுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் பாலு..அதுதான் உண்மை..! டெல்லி மாநகர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி உத்தரப் பிரதேசத்திலும் ஏற்பட்டிருமோ என்ற அச்சத்தில் இருக்கும் காங்கிரஸுக்கு...திமுக நன்றிக்கடன் செலுத்துகிறது..! இதற்குள் அர்கிஜோலொஜியும் சிக்கித் தவிக்கிறது..!

ramabridgehl9.jpg

ஆடம்ஸ் (Adam's) பாலம் என்றுதான் இது அழைக்கப்படுகிறது..! இராமர் அணை என்பது இராமாயனத்தின் அடிப்படையில் ஒரு கட்டத்தில் வழங்கப்பட்டிருக்கக் கூடும்.

எது எப்படியோ,

கீதையில் இருந்து ஒரு வரி

" ஏமாற்றுவதும் தமிழனே,

ஏமாறுவதும் தமிழனே"

அது பாலமல்ல தமிழகத்துக்கும் ஈழத்துக்குமான தொப்புள் கொடி

நெடுக்காலபோவான்!

இந்த தரைத் தோற்றத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அது எப்படி உருவாகி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நெடுக்காலபோவான்!

இந்த தரைத் தோற்றத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அது எப்படி உருவாகி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அது தெரியா சபேசன் அங்கிள் ஆனா இந்த இராமன் என்ற கடவுள் எவளவு சுயநலவாதி

தண்ட ஆத்துகாரியை மிட்பதுக்காக அப்பாவி பொதுசனத்தை கொண்டு பாலம் போடுவிச்சு போட்டு

மனிசியை காப்பாற்றி கொண்டு தனது படைகளை இலங்கையில் இருந்து பின் வாங்கிய பின் இந்த பாலத்தை குண்டு வைத்து தகர்த்து விட்டார் இந்த பாலம் மட்டும் இப்ப இருந்து இருந்தால் எங்கள் உறவுகள் எவளவு சுலமாக அகதியாக் நடந்து இந்தியா என்று இருப்பார்கள்......

புலிகளும் சயிக்கிள் போல்ஸ் சுகமாக ஒவரு போராளிகளும் ஒவரு முட்டையாக தலையில் சுமந்தே வந்து இருப்பார்கள் :):o:blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.