Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்னாலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னாலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல்

January 31, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_3781.jpg?resize=720%2C405

படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் பொன்னாலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது-

பொன்னாலையில் கடற்றொழிலுக்குச் சென்றபோது படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 தொழிலாளர்களின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வு பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (29) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.

நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் செ.றதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிதிநிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தினர்.

;மேற்படி படுகொலையில் தனது தந்தை மற்றும் இரு சகோதரர்களை இழந்த நா.தேவராசா பிரதான சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து திருவுருவப் படங்களுக்கு அவர்களின் உறவினர்கள் சுடர்களை ஏற்றி மலர் மாலைகளை அணிவித்தனர். தொடர்ந்து ஏனையோர் மலரஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளர் ந.பொன்ராசா பிரதான நினைவேந்தல் உரை ஆற்றினார். தொடர்ந்து ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத் தலைவர் த.பாஸ்கரன், ஸ்ரீ கண்ணன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் க.ஸ்ரீஜெயராமச்சந்திரஅருட்சோதி, வெண்கரம் செயற்பாட்டாளர் மு.கோமகன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினர்.

கடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி கடற்றொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் பொன்னாலை கொத்தத்துறை படை முகாமுக்கு முன்பாக பாஸ் பெறுவதற்காகக் காத்திருந்தபோது அப்பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்து படையினரின் தாக்குதலில் 09 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதேபோன்று, 1985 ஆம் ஆண்டு கடற்றொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலில் 2 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

IMG_3779.jpg?resize=720%2C405  IMG_3782.jpg?resize=720%2C405IMG_3785.jpg?resize=720%2C405IMG_3786.jpg?resize=720%2C405

 

http://globaltamilnews.net/2019/111795/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.