Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலின் இரட்டை வேடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் இரட்டை வேடம்

[17 - April - 2007]

-வி.திருநாவுக்கரசு-

ஆட்கடத்தல்கள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், காணாமற் போதல்கள் போன்ற கொடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவன ஈர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கு முகமாக மக்கள் கண்காணிப்பு ஆணைக்குழு (C.M.C) அழைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மனோகணேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்று 2007.04.09 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றதல்லவா? அக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய ரணில் விக்கிரமசிங்க பிரதான உரையினை நிகழ்த்தினார். காணாமற் போன அல்லது கடத்தப்பட்ட தமது அன்பிற்குரியவர்களை காணத்துடிக்கும் அப்பாவி உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளித்தனர்.காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க தான் கடுமையாக உழைக்கப் போவதாக விக்கிரமசிங்க உறுதியளித்தார். ஐ.தே.க ஆட்சிக்காலங்களில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் தொடர்பாக இக் கட்டுரையில் நாம் ஆராயவில்லை. அவற்றிற்கு பிராயச்சித்தமாகவோ என்னவோ அக் கட்சியின் இந் நாள் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்டு சோகத்தின் மேல் சோகத்தினால் நொந்து போயிருக்கும் மக்களின் துயர்துடைப்பதற்கு அவர் உறுதி பூண்டிருப்பதாக பலர் எண்ணியிருக்கலாம். ஆனால், அவர் தனது உரையாற்றி 24 மணித்தியாலங்கள் கழிவதற்கு முன்னர் ஐ.தே.க தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற தொழிற்சங்க சம்மேளனக் கூட்டத்தில் தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதாவது, குறிப்பாக விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் 2007.03.26 திகதி மேற்கொண்ட வான் தாக்குதலானது பாதுகாப்பு அமைச்சின் கையாலாகாத் தனத்தினால் ஏற்பட்ட நிகழ்வு என அடித்து கூறியதோடு, பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை அப் பதவியில் இருந்து நீக்கி விட்டு, முன்னாள் மூத்த இராணுவ அதிகாரியான தற்போதைய இந்தோனேசிய தூதுவர் ஜானக பெரேரா அப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியிருந்தார். ஏனென்றால் இராணுவ வெற்றிகள் ஈட்டப்பட்டு அரசாங்கத்தின் கை மேலோங்கிய நிலையிலேயே அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் அவர் முன் வைத்துள்ள வாதமாகும்.

அவர் கூறியது பின்வருமாறு;

"பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.ஆனால், நாம் பேச்சுவார்த்தை மேசைக்கு போகும் போது பலமான நிலையில் இருக்க வேண்டும். கோதாபயா ராஜபக்ஷவின் செயற்பாடானது எமது நிலையினை பலவீனப்படுத்தியுள்ளது. அவர் எமது படையினரை கிழக்கில் குவித்ததன் மூலம் விடுதலைப்புலிகள் விரித்த வலையில் வீழ்ந்து விட்டார். அன்று ஐ.தே.க அரசாங்கம் கிழக்கை கைப்பற்றுவதற்கு நாட்கணக்கில் பாடுபடவில்லை. சில மணித்தியாலங்களில் அது நிறைவேற்றப்பட்டது என்றே சொல்லலாம். இன்று எமது போர் வீரர்கள் வீரதீரமாக போரிட்டுக் கொண்டிருந்தும் கூட தனது தவறான திட்டமிடல் காரணமாக கோதாபய நிலைமையை பாழாக்கிவிட்டார்.

விக்கிரமசிங்க தனது உரையில்;

மேலும், கூறியதாவது, `விமான நிலையத்தினதும் விமானப்படைத் தளத்தினதும் பாதுகாப்பிற்கு தானே பொறுப்பு என கோதாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். இப்பொழுது என்னவென்றால் நிலைமை தலைகீழாகியுள்ளது. விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் நடத்தி விட்டு இலகுவாக தப்பிச் சென்றுள்ளனர்.மனித உரிமைகள் விடயத்திலும் சர்வதேச சமூகம் கொடுக்கும் அழுத்தத்திற்கும் அவர் தான் பாத்திரவாதியாவார். ஏனென்றால் சில அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்கள் கடத்தப்படுவதில்லை என அவர் முன்னர் கூறி வைத்ததன் மூலம் கடத்தல்கள் இடம்பெறுவதை ஒப்புக் கொண்டு விட்டார். எனவே, அவர் ஒரு சுமையாகி விட்ட நிலையில் பதவி நீக்கப்பட்டு திறமைசாலியாகிய ஜானக் பெரேரா நியமிக்கப்பட வேண்டும்".

ஜானக பெரேரா முந்திய காலங்களில் யுத்தத்தில் ஈட்டிய வெற்றிகளையும் விக்கிரமசிங்க விபரித்ததோடு அந்த வகையில் பெரேரா போர் வீரர்களால் மட்டுமன்றி, சிங்கள, பௌத்த மக்கள் பிரிவினராலும் வெகுவாக போற்றப்படுவர் என்றும் பாராட்டுத் தெரிவித்தார். மணலாறு பகுதியை அண்டிய கிராமம் ஒன்றிற்கு ஜானக பெரேராவை பாராட்டும் முகமாக ஜானகப்புர என பெயரிடப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

யுத்தம், ஒன்று நடைபெறுவதன் காரணமாகவே ஆட்கடத்தல்கள், காணாமற் போதல்கள், படுகொலைகள் போன்ற ஈனச் செயல்கள் மலிந்துள்ளன என்பது கண்கூடு. அரசாங்கத்தின் கையை மேலோங்கச் செய்வதற்கு யுத்தம் மேலும் திறமையாக நடத்தப்பட வேண்டும் என்று கூறும் ரணில் விக்கிரமசிங்க தான் மேற்படி மனித உரிமை மீறல்களுக்கு பரிகாரம் தேடப் போவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறார். அரசியல் இலாபம் கருதி இவ்வாறாக இரட்டை வேடம் போடுவது அப்பட்டமானதொரு மோசடி என கூறலாம். இதை வேறு என்னவென்று சொல்வது?

ஒன்று இலங்கையில் மனித உரிமை மீறல் கொடுமைகள் முன் எப்போதும் இல்லாதளவில் நடைபெறுவது பகிரங்கரகசியம் என்று கூறினால் இது மிகையல்ல. இந்த நிலை நாட்டின் மேம்பாட்டிற்கும் நற்பெயருக்கும் பங்கம் விளைவித்து வருவதையிட்டு நாட்டு நலன் விரும்பும் மக்கள் பெரிதும் கவலை கொண்டுள்ளனர்.நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக சில வட்டாரங்கள் விசமத்தனமாக பொய்ப் பிரசாரங்களை செய்து வருகின்றன என்று யாரும் வாதிட்டால் அது தன்னைத் தானே ஏமாற்றுவது தவிர வேறொன்றல்ல.

சர்வதேச மட்டங்களிலான/ கருத்துகள்

மிக அண்மையில் குறிப்பாக, சர்வதேச அரங்கில் இருந்து வெளிக் கொணரப்பட்ட சில விடயங்களைப் பார்ப்போம். அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவரும் கலிபோர்னியாவில் ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் பிரதிநிதியுமான ரொம் லன்ரொஸ் என்பவர் இலங்கையில் ஆட்கள் காணாமல் போதல்கள் அதிகரித்து வருவதையிட்டு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.அத்

இதனிடையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி ஆகியோர் மிகவும் ஏற்புடையவர்கள் என ஆட்சியாளர் கூறிவருவதைக் காண்கின்றோம்.

ஆயினும் அவ்விருவரும் முன்வைத்து வரும் கோரிக்கைகளை, அதாவது; வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் இந்திய மாதிரியிலான தீர்வு என்பவற்றை தானும் பரிசீலிப்பதற்கு நிச்சயமாக அரசாங்கம் தயாராக இல்லை என்பது நன்கு தெரிந்த விடயமாகும். எனவே, ஒரு பல்லின, பல் கலாசார நாட்டுக்கு பன்மை சமுதாயத்திற்கு ஒற்றையாட்சி முறைமை நிச்சயமாக ஒவ்வாதது என்பதை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மலர்ந்துள்ள புத்தாண்டில் சிந்திக்கத் தொடங்கட்டும்.

இவர்கள்ள் இருவரும் யார் எம் அபிலாசையை நிவர்த்தி செய்ய எமக்கேன ஒரு தனி நாடு இருக்குது தனிப்படை இருக்குது அது பார்த்துக்கொள்ளும்

இக்கடுரைய்யில் வடிவாகரணிலின்ன் மூகமூடி கிழிக்கப்ப்பட்ட்டிருக்குது.

இவர்கள்ள் இருவரும் யார் எம் அபிலாசையை நிவர்த்தி செய்ய எமக்கேன ஒரு தனி நாடு இருக்குது தனிப்படை இருக்குது அது பார்த்துக்கொள்ளும்

இக்கடுரைய்யில் வடிவாகரணிலின்ன் மூகமூடி கிழிக்கப்ப்பட்ட்டிருக்குது.

வான் தாக்குதலுடன் மகிந்த செல்வாக்கு சரிய

இது தான் சந்தர்ப்பம் அரசியலில் மீண்டும் செல்வாக்கு பெற என இரட்டைவேடம் போட்டு பதவிக்கு வருவதுதான் ரணில் நோக்கம்....

நெ சில் உரமுன்றி நேர்மைத்திறனும் இன்றி வன்சனை செய்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி. தமிழர் எப்போதும் பந்து, பகடைக்காய்கள்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தியால் யாராவது ஏமாற்றமடைந்தீர்களா? இல்லைதானே!

ரணிலை யார் நம்பினது அவரது இரட்டை வேடம் கலைந்துவிட்டது என்று துாக்கி பிடிப்பதற்கு..

இது ஒரு அரசியல் நரி தந்திரம்...

இன்றைக்கில்லை என்றைக்குமே சிங்களவன் தமிழனை ஒரு தேசிய இனமாக ஆதரிக்கப்போவது இல்லை.. இதை எல்லோரும் நினைவு வைத்திருச்தால் ச

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.