Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமகனின் காதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைமகனின் காதல்

_18678_1550148537_CDE764F5-25B9-41FF-A04E-A182B541EC8F.jpeg

(அவதானி)

 அந்த ஒரு நிமிடம் வரைக்கும் அவர்கள் இருவருக்குமிடையில் எதுவும் இல்லை என்பது நிச்சயம்.

தென்னிலங்கை மற்றும் மலையகப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களை யாழ். மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுமாறு அரசிடம்  கோரிக்கை விடப்பட்டது. இதனை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஏற்றுக்கொள்ளவில்லை.  இதனால் யாழ். பல்கலைக்கழகத்தில் சுழற்சிமுறையில் உண்ணாவிரதம் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. பல்கலைக்  கழக மாணவர்களுக்கு ஆதரவாகக் குறிப்பிட்ட நேரம்  வாகனங்களினால் ஒலி (ஹோர்ண்) அடிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. முதல் நாள் அந்த ஏற்பாடு சரியாக நடந்தது.

அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்துக்கு யாழ். நகரப்பகுதிக்கு வந்த சகல வாகனங்களையும் மறித்து யாழ். முற்றவெளிப்பகுதிக்குக் கொண்டு சென்றனர் பொலிஸாரும் படையினரும். அந்நேரம் வந்ததும் ‘‘சரி இண்டைக்கு ஹோண் அடியுங்கோ பாப்பம்” என்றனர். அத்துடன் அந்த நடவடிக்கை முடிவுற்றது. புலிகளைத் தவிர ஏனைய  இயக்கங்கள் யாவும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவளித்தன. ஜே .ஆர். அரசு  இம்மாதிரியான போராட்டங்களுக்கு மதிப்பளிக்காது என்ற சாரப்பட தமது நிலைப்பாட்டை துண்டுப்பிரசுரம் மூலம் புலிகள் வெளிப்படுத்தினர்.

தமது கோரிக்கையை அரசு அலட்சியப்படுத்து

கின்றது என்றவுடன் சாகும் உண்ணவிரதம் வரை என மாற்றுவது என்று மாணவர்கள் முடிவெடுத்தனர்.  இந்த முடிவெடுத்ததும் புலிகள் ‘ஆபத்தான வேலையில் இறங்குகின்றீர்கள்| ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்கள்தான் பொறுப்பு’ என எச்சரித்தனர்.

குடாநாட்டு மக்கள் பெருமளவில் உங்களுக்கு ஆதரவு வழங்குவதைக் கண்டே இந்த விஷப்பரீட்சையில் இறங்குகிறீர்கள் என யாழ். பல்கலைக் கழக மாணவரவைத் தலைவர் ஸ்ரீஸ்கந்தராசாவுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. (அவர் புலிகள் இயக்கத்துக்குச் சார்பாகத்தான் இருந்தார். பின்னர்தான் முழு நேர உறுப்பினராகி மாவீரரானார்.)

எதிர்பார்த்தது போல ஜே. ஆர் இறங்கி வரவில்லை. உண்ணாவிரதமிருந்தோரில் லலிதா என்ற மாணவிக்கு விக்கல் எடுத்தது. அந்த நேரம் தான் சூழ்நிலையின் விபரீதம் புரிந்தது மாணவர்களுக்கு. புலிகளிடம் ஓடிவந்தனர்.  அவர்களைச் சாக விடமுடியாது. உண்ணாவிரதத்தை இடைநிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஏனைய இயக்கங்களுடன் கதைத்து உடனே முடிவெடுக்கவேண்டிய நிலை. ரெலோவில் மட்டுமே முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் உள்ளோர் அங்கு நின்றனர்.  “நாங்கள் இந்த உண்ணாவிரதத்தை நிறுத்தி அவர்களைக் காப்பாற்றப் போகிறோம்’’  என புலிகள் தங்கள் முடிவைச் சொன்னார்கள். ரெலோ சம்மதித்தது. நல்லவேளை சித்தாந்தங்களால் வறுத்தெடுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட் போன்றவை அங்கு நிற்கவில்லை.  நின்றிருந்தால் அவர்களது சித்தாந்த விளக்கங்கள் முடியுமுன், யாராவது ஒருவர் உயிரிழந்திருப்பார்.புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த சுகந்தன் (ரவிசேகரம்) எல்லா மாணவர்களிடமும் கையெடுத்துக் கும்பிட்டு இந்தப் போராட்டத்தை நிறுத்துங்கள் என வேண்டினார்.  ரகு உட்பட மேலும் சில போராளிகள் உண்ணாவிரதமிருந்தோரை வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள். ஓரிடத்தில்  வைத்து அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. உண்ணாவிரதமிருந்தோரில் நால்வர் மாணவிகள் . இதில் ஜெயலட்சுமி, வனஜா ஆகியோர் ஈ.பி.ஆர்.எல்.எவ். வைச் சார்ந்தவர்கள். லலிதா மற்றும் மதிவதனிக்கு எந்த இயக்கத்துடனும் தொடர்பிருந்திருக்கவில்லை.  அடுத்தநாள் புளொட், ஈபி.ஆர்.எல்.எவ். இந்த நடவடிக்கையை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டின. துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டன. தமது

தோழிகளைத் தம்மிடமே ஒப்படைக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ். கோரியது. அந்தக் கால கட்டத்தில் எந்தநேரமும் எங்கும் படையினர் சென்று வரக்கூடிய நிலை இருந்தது. மாணவிகள் கைதானால் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டினர் உட்படப் பலருக்கும் சிக்கல் வரலாம். இந்த ஆபத்தை விளக்கியபோதும்,  தோழர்கள் இதனைப் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை. சந்தோஷம், சுகந்தன் போன்ற பொறுமையானவர்களே சினமடைந்துவிட்டனர். இங்கே கையளிக்க முடியாது. இந்தியாவிடம்தான் ஒப்படைப்போம் எனக் கூறினர்.  அனைவரும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  மாணவர்களில் படிகலிங்கம், ஜனகன் ஆகியோர் புலிகளுடன் இணைந்து கொள்ளச் சம்மதித்தனர். ஏனையோர்  அவர்கள் குறிப்பிட்டவர்களிடம் கையளிக்கப்பட்டனர்.  மாணவிகள் அன்ரன் பாலசிங்கம் தம்பதியினர் தங்கியிருந்த திருவான்மியூர் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்குதான்பிரபாகரன் தங்கியிருந்தார். வைத்திய சிகிச்சைக்காகச் சென்ற இன்னொரு போராளியும் அங்கு கொண்டு செல் லப்பட்டார். அங்கேயே எல்லோருக்கும் சமையல். ஈ.பி.ஆர்.எல்.எவ்.வைச் சேர்ந்த இருவரையும் அவர்களிடம் ஒப்படைப்பதற்காக சங்கர் (சொர்ணலிங்கம்) அவர்களின் பணிமனை   ஒன்றுக்குச் சென்றார். சென்னையில் உள்ள செய்தித் தகவல் மையத்தில் அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவர் அங்கு பொறுப்பில் இருந்தார்.

 

“எங்கிருந்து வருகிறீர்கள்” என்ற அவரது கேள்வி வில்லங்கத்தின் ஆரம்பம் எனப் புரிந்தார் சங்கர். “ரைகேஸில் இருந்து” என்று பதிலளித்தார். “எந்த ரைகேர்ஸ்” என்று அடுத்த கேள்வி. “ரைகேஸ் என்று சொல்லுறதுக்கு எந்த இயக்கத்துக்கு உரிமை இருக்கோ அதில இருந்துதான் வாறன்’’ என மீண்டும் பொறுமையாகப் பதிலளித்தார். தொடர்ந்தும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் விதண்டாவாதங்கள், சித்தாந்தங்கள் சங்கர் திரும்பிவிட்டார். பிரபாகரனிடம் நடந்ததைக் கூறினார்.

இதனை ஜெயலட்சுமியும் வனஜாவும் கேட்டுக்கொண்டிருந்தனர். “எங்கட விசயமா பேச வந்ததெண்டு சொன்னவுடனேயே நாங்கள் சுகமா இருக்கிறமோ எண்டுதான் அவை கேட்டிருக்கவேணும். எங்கட நலனை விட அவைன்ர பிரச்சினைதான் பெரிசா இருக்கு. ஆனபடியா நாங்கள் அங்க போக விரும்பேல்ல. இனி எங்கட விசயமா அவையோட கதைக்காதேங்கோ.” என்றனர்.

***

 

அடுத்தது மதிவதனி.  அவரின் உறவினர் சென்னையில் இருந்தனர். அவர்களிடம் மதிவதனியை ஒப்படைக்குமாறு ராகவனிடம் சொன்னார் பிரபாகரன்.  அப்படியே நடந்தது. ஆனால், அதற்கடுத்த நாளே மதிவதனி அங்கு திரும்பி வந்துவிட்டார்.. “இவ்வளவு பேரோட ஒண்டா இருந்திட்டு அங்க தனிய இருக்க விசராக் கிடக்கு” என்பது அவரது கூற்று.

இக்காலப்பகுதியில் ஹோலிப்பண்டிகை வந்தது. வீதியில் மஞ்சள் கலந்த  (பல்வேறு வர்ணம்) நீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றுவர் இப்பண்டிகையின்போது. இதனைக் கண்ணுற்ற மதிவதனி அந்த வீட்டில் மஞ்சள் பொடியைக் கரைத்தார். வேறு எங்கே முக்கிய அலுவலாகப் போகவேண்டியிருந்த பிரபாகரன், இந்த வீட்டுக்கு வந்து கதவைத் திறந்ததும் மஞ்சள் நீரை அவர் மீது ஊற்றினார் மதிவதனி. வெள்ளை வெளீரென்ற சட்டையுடன் வந்த அவர் இதனை எதிர்பார்க்கவில்லை. இந்தமாதிரி அவருடன் எவரும் பழகியதில்லை. தனது சட்டையைப் பயன்படுத்த முடியாதே என்ற கோபமும் அவருக்கு. பாடசாலை வாழ்வு, தலைமறைவுக் காலம் எதிலும் இவ்வாறான உரிமையை அவரிடம் எவரும் எடுத்ததில்லை. கோபத்தில் திட்டிவிட்டார் அவர்.

மதிவதனி  அழுதுகொண்டே ஓடினார். தானும் அவசரப்பட்டுப் பேசிவிட்டேன். பொறுமையாக இருந்திருக்கலாம் எனஅவர்நினைத்திருக்கிறார் போலும்...தனியே அழுதுகொண்டிருந்த மதிவதனியைச் சமாதானப்படுத்தினார். அந்தக் கணத்தில் தான் அந்தப் பொறி விழுந்தது. விழுந்துவிட்டேன் காதலில் என உணர்ந்தார தலைவர். அதைப் பின்னர் மதிவதனியிடம் தெரிவித்தார்.   அவரும் சம்மதித்தார். பாலா அண்ணரிடம் இதைத் தெரிவித்தார் பிரபாகரன். மாப்பிள்ளைத் தோழனாக கே.பி. இருக்க, வடபழனி கோயிலிலே அவர்கள் திருமணம் நடந்தது. போராட்டத்தின் ஆரம்பத்தில் போராளிகளாக இருப்பவர்கள் திருமணம் முடிப்பதில்லை என்ற நிலை இருந்தது. அப்பையா அண்ணன், இளங்கோ போன்ற ஏற்கனவே திருமணமானவர்களைத் தவிர, ஏனையோர் திருமணமாகாமலே இருந்தனர். ஆதரவாளராக இருந்த குடும்பஸ்தரான தேவா அண்ணாவும் இணைய நேர்ந்தது. தொடர்ந்து பல போராளிகள் தமக்கிடையே மலர்ந்த காதலால் தம்பதியாகினர். சில பெண் போராளிகள் சிவிலியன்களாக இருந்தவர்களைத் திருமணம் முடிக்குமளவுக்கு நிலைமை மாறியது. பிரபாகரன், பொட்டு, சங்கர் போன்றோரைத் திருமணம் செய்ததால் அவர்களது துணவியரும் தம்மை அழித்துக்கொண்டனர். பல போராளிகளின் துணைவியரும் கொல்லப்பட்டனர். இறுதியில் சரணடைந்த போராளிகளின் துணைவியரும் அவர்களுடன் சென்று காணாமல் போயினர். திருமணமான பெண் போராகளிகளும் தம்மை அழித்துக்கொண்டனர். சில மாவீரர்களின் பிள்ளைகள் போராளிகளாகினர். சில போராளிகளின் பிள்ளைகள் மாவீரர்களாகினர். சில மாவீரரின் பெற்றோர் போராளிகளாகினர்.பல்கலையில் உண்ணாவிரதம் இருந்தோரில் லலிதா என்பவர் போராளியாகி செஞ்சோலையின் பொறுப்பாளராக மாறினார். கிளிநொச்சியுடன் அவரும் ஆயுதத்தைக் கட்டிக்கொண்டு தான் வளர்த்த பிள்ளைகளைப் பிரிந்துசொன்றார். ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பாக ஆரம்பத்தில் இருந்த ஜெயலட்சுமி புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தார். மாவீரர்நாள் பாடல் உருவாக்கவேண்டுமென்பது இவரது சிந்தனையே. இதனை புதுவையண்ணை செயற்படுத்தினார்.

 

_18678_1550148630_CB2235BC-526B-49FA-87D

http://www.battinaatham.net/description.php?art=18678

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.