Jump to content

மக்­கள் வழங்­கிய ஆணையை மீறு­வது நாட்­டுக்கு நல்­ல­தல்ல!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்­கள் வழங்­கிய ஆணையை மீறு­வது நாட்­டுக்கு நல்­ல­தல்ல!!

பதிவேற்றிய காலம்: Feb 18, 2019

அரச தலை­வ­ருக்­கும் தலைமை அமைச்­ச­ருக்­கும் இடை­யி­லான முறு­கல் நிலை தீவி­ர­ம­டைந்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. ரணில் விக்­கி­ர­ ம­சிங்க யாழ்ப்­பா­ணத்­துக்கு வரு­வ­தற்கு முன்­னர் அவ­ரது பாது­காப்பை உறு­தி­செய்து கொள்­வ­தற்­காக அவ­ரது பாது­காப்­புப் பிரி­வி­னர் இங்­கு­வந்து நில­மையை ஆராய்ந்­துள்­ள­னர். இந்­தப் பாது­காப்­புக் குழு­வி­னர் காங்­கே­சன்­துறை கடற்­படை முகா­முக்­குள் செல்­வ­தற்கு முயற்­சி­செய்­த­போ­தி­லும் அதற்­கு­ரிய அனு­மதி அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. பாது­காப்பு அமைச்­சுப் பொறுப்பை அரச தலை­வர் வகிப்­ப­தால் இந்த விட­யம் அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அரச தலை­வ­ரால் குழப்­பங்­கள்
சமீப கால­மாவே அரச தலை­வர் திட­மான முடிவு எதை­யும் எடுக்­க­மு­டி­யாத நிலை­யில் குழம்பி வரு­கின்­றார். இத­னால் அர­சி­ய­லி­லும் குழப்­ப­நிலை தோன்­றி­யுள்­ளது. அவர் மகிந்­த­வு­டன் இணைந்து விடு­வா­ரெ­னக் கூறப்­பட்ட போதி­லும் அதில்­கூட நிரந்­த­ர­மாக எந்­த­வி­த­மான முடி­வும் இது­வரை எட்­டப்­ப­ட­வில்லை. அரச தலை­வர் வேட்­பா­ளர் தெரி­வி­லும் குழப்­பங்­கள் நீடிப்­ப­தைக் காண முடி­கின்­றது. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே அரச தலை­வர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டு­வா­ரென அவர் தலைமை தாங்­கும் கட்­சி­யின் கூறு­கின்­ற­னர். ஆனால் மறு­பு­றத்­தில் பார்த்­த­தால் தாமரை மொட்­டுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­களே மகிந்த அணி சார்­பில் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யு­மெ­னத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தற்­போ­தைய நிலை­யில் அர­சி­யல் சூழ்­நி­லையை மதிப்­பீடு செய்து பார்க்­கும்­போது தேர்­த­லில் போட்­டி­யிட்­டா­லும் மைத்­தி­பால சிறி­சே­ன­வின் வெற்றி வாய்ப்பு பிர­கா­ச­மா­கத் தென்­ப­ட­வில்லை. சிறு­பான்­மை­ யின மக்­கள் அவர் மீதான நம்­பிக்­கைய முற்­றாக இழந்­து­விட்­ட­னர் என்றே கூற­ வேண்­டும்.

 

அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ ளுக்­குத் தீர்­வைக் காண்­ப­தில் அவர் முற்­றா­கத் தவ­றி­யுள்­ள­மையே இதற்­கான கார­ண­மா­கும். அது­மட்­டு­மல்­லாது சிறு­ பான்­மை­யின மக்­க­ளின் வாக்­கு­க­ளால் தாம் பத­விக்கு வந்­ததை மறந்து விட்­ட­வர் போன்­றும் அவர் செயற்­ப­டு­கின்­றார்.

மகிந்த சொல்­லும்
பொய்ப் பரப்­புரை
அதே­வேளை மகிந்த ராஜ­பக்­ச­வின் சமீ­ப­கால நட­வ­டிக்­கை­கள் ஏற்­றுக்­கொள்­ளத் தக்­க­ன­வாக அமை­ய­வில்லை என்­ப­தைக் கூறத்­தான் வேண்­டும். தமி­ழர்­க­ளுக்­குத் தம்­மால் அர­சி­யல் தீர்­வைத் வழங்­க­மு­டி­யு­மென அவர் கூறி­யது நம்­பத் தகுந்­த­தா­கத் தெரி­ய­வில்லை. தாம் பத­வி­யில் இருந்­த­போது வழங்­க­மு­டி­யாத ஒன்­றைப் பத­வி­யில் இல்­லா­த­போது எவ்­வாறு வழங்­கப்­போ­கி­றார்? எனப் பல­ரும் கேள்வி எழுப்­பு­கின்­ற­னர். அது மட்­டு­மல்­லாது இறு­திப்­போர் தொடர்­பாக அவர் தெரி­வித்த சில கருத்­துக்­க­ளும் முரண்­பாட்­டைத் தோற்­று­வித்­துள்­ளன. அவர் பொய்­யு­ரைக்­கி­றார் என்றே போரின் வடுக்­க­ளைத் தாங்கி நிற்­கும் மக்­கள் கரு­து­கின்­ற­னர். இந்த நிலை­யில் இவர்­க­ளி­ரு­வ­ரும் இணைந்து செயற்­ப­டும்­போது இந்­த­மக்­கள் இவர்­களை ஆத­ரிப்­பா­ளர்­க­ளென எதிர்­பார்க்­க­மு­டி­யாது.

தற்­போது தலைமை அமைச்­ச­ரு­டன் அவர் முரண்­பட்டு நிற்­பது ஏற்­க­னவே மோச­மான நிலை­யில் காணப்­ப­டும் நாட்­டின் அபி­வி­ருத்­திக்­குக் குந்­த­க­மா கவே அமைந்­து­வி­டும். அடுத்த ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லும் இடம்­பெ­ற­வுள்ள நிலை­யில் அரச தலை­வர் அவ­ச­ரப்­ப­டு­வ­தன் கார­ணத்­தைப் புரிந்­து­ கொள்ள முடி­ய­ வில்லை. அவர் எதற்­கா­கவோ பதற்­றப்­ப­டு­வ­தும் தெளி­வா­கத் தெரி­கின்­றது.

சந்­தி­ரி­கா­வின்
மறு வருகை
அதே­வேளை சந்­தி­ரி­கா­வின் அர­சி­யல் மீள்­வ­ருகை மைத்­தி­ரிக்­கும் மகிந்­த­வுக்­கும் சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தவே செய்­யும். சில­வேளை சந்­தி­ரிகா தமது ஆத­ரவை ரணி­லுக்­குத் தமது ஆத­ரவை வழங்­க­மாட்­டா­ரென்­ப­தற்கு எவ்­வித உத்­த­ர­வா­த­மும் கிடை­யாது. இத­னால் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­கவே நன்­மை­ய­டை­வார். ஆனால் அரச தலை­வ­ரும் தலைமை அமைச்­ச­ரும் முரண்­பட்டு நிற்­பது நாட்­டுக்­குத் தீமை­யா­கவே முடி­யும். இந்த நாட்­டின் அர­சி­யல் தலை­வர்­கள் தமது சொந்­தப் பிரச்­சி­னை­க­ ளுக்கு வழங்­கு­கின்ற முக்­கி­யத்­து­ வத்தை நாட்­டின் நல­னுக்கு வழங்­கு­வ­தில்லை. இதன் கார­ண­மா­கவே நாடு சகல துறை­க­ளி­லும் பின்­ன­டைவை எதிர்­கொண்டு வரு­கின்­றது. நாட்­டுக்கு வழி­காட்ட வேண்­டிய இவர்­கள் தாமே தவ­றான வழி­க­ளில் செல்­வதை எவ்­வாறு அனு­ம­திக்­க­மு­டி­யும்?

அதி­லும் முழு­நாட்­டுக்­கும் பொறுப்­பா­க­வுள்ள தலைமை அமைச்­ச­ரும் அரச தலை­வ­ரும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பகையை வளர்த்­துக்­கொள்­வ­தும் பகி­ரங்­க­மா­கவே முரண்­பா­டு­களை வெளிக்­காட்­டு­வ­தும் முழு நாட்­டை­யுமே பாதித்­து­வி­டும். இவர்­க­ளின் முரண்­பா­டு­கள் நாட்­டில் குழப்ப நிலை­யொன்­றைத் தோற்­று­வித்­து­வி­டும். நாட்­டின் அபி­வி­ருத்­தி­யை­யும் பறித்­து­வி­டும். இத­னால் பொரு­ளா­தார ரீதி­யான பாதிப்­பும் அதி­க­மா­கி­வி­டும். இப்­போதே மக்­கள் பொரு­ளா­தா­ரச் சுமை­க­ளைச் சுமைக்க முடி­யாத நிலை­யில் துன்­பங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். அண்­மை­யில் எரி­பொ­ருள்­க­ளின் விலை­க­ளும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளமை பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தப்­போ­கின்­றது. இதை­யும் மக்­கள்­தான் தாங்­கிக்­கொள்­ள­வேண்­டும்.

ஆகவே நாட்­டின் நல­னை­யும் மக்­க­ளின் நல­னை­யும் கருத்­தில்­கொண்டு அரச தலை­வ­ரும் தலைமை அமைச்­ச­ரும் தமக்­கி­டை­யி­லான முரண்­பா­டு களை மறந்து ஒற்­று­மை­யா­கச் செயற்­ப­டு­தல் அவ­சி­ய­மா­ன­தா­கும். கடந்த 2015ஆம் ஆண்டு இதற்­கான ஆணை­யைத்­தான் மக்­கள் இவர்­க­ளுக்கு வழங்­கி­னார்­கள். இதை மறந்து இவர்­க­ளி­ரு­வ­ரும் தமது எண்­ணம்­போன்று செயற்­ப­டு­வதை மக்­கள் ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள்.

 

 

https://newuthayan.com/story/10/மக்­கள்-வழங்­கிய-ஆணையை-மீறு­வது-நாட்­டுக்கு-நல்­ல­தல்ல.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.