Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாபிரிக்கா - இலங்கை இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உபாதை காரணமாக  லசித் அம்புள்தெனிய போட்டியில் இருந்து விலகினார்

உபாதை காரணமாக லசித் அம்புள்தெனிய போட்டியில் இருந்து விலகினார்

 

இடது பெருவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இலங்கை அணி வீரர் லசித் அம்புள்தெனிய, தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 ரி 20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. 

2 வது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெறுகின்றது. 

நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. 

இலங்கை அணி சாரபில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களும் ராஜித 3 விக்கெட்டுக்களையும் பெற்றனர். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இதுவரையில் 3 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

1 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

தடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்

 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 222 ஓட்டங்களை பெற்றுள்ளது.

kok.jpg

தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதில் முதலாவதாக இடம்பெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிய‍ை இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ள நிலையில் தென்னாபிரிக்காவின் முதல்முறையாக தொடரை வென்று வரலாறு படைக்கும் முனைப்புடன் இலங்கை அணி 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று களம் இறங்கியுள்ளது.

அதன்படி போர்ட்எலிசபெதில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதற்கிணங்க முதலாவதாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 15 ஓட்டத்துக்குள் மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. எல்கர் 6 ஓட்டத்துடனும், அம்லா மற்றும் பவுமா எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் தென்னாபிரிக்க அணி தொடக்கத்திலேயே தடுமாற ஆரம்பித்தது. இருப்பினும் அணித் தலைவர் டூப்பிளஸ்ஸி மற்றும் மர்க்ரம் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தினால் அணியின் ஓட்ட எண்ணிக்கை விக்கெட் இழப்பின்றி அதிகரிக்க ஆரம்பித்தது.

Dz7EmyKXQAARgbG.jpg

எனினும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 73 ஆவவிருந்தபோது டூப்பிளஸ்ஸி 25 ஓட்டத்துடன் திமுத் கருணாரத்னவின் முதல் ஓவரின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதையடுத்து ஐந்தாவது விக்கெட் 130 ஓட்டத்திலும் (மக்ரம் 60), ஆறவாது விக்கெட் 145 ஓட்டத்திலும் (முல்டர் 09), ஏழாவது விக்கெட் 157 ஓட்டத்திலும் (மஹாராஜ் டக்கவுட்) வீழ்த்தப்பட்டது.

இதேவேளை ஆடுகளத்தில் மறுமுணையில் நின்று டீகொக் நிதானமாக நின்று நிலைத்தாட 9 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ரபடா அவருக்கு தோள்கொடுத்தாட  அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஐ கடந்தது.

எனினும் டீகொக் 86 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ரபடாவும் 22 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த ஒலிவரும் எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் தென்னாபிரிக்க அணி 61.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்களை பெற்றது.

Dz6_TmvWsAABKVc.jpg

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் விஷ்வ பெர்னாண்டோ, கசூன் ராஜித ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 2 விக்கெட்டுக்களையும், திமுத் கருணாரத்ன ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

 

 

http://www.virakesari.lk/article/50434

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்க மண்ணில் புதிய சகாப்தம் படைக்குமா இலங்கை?

 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்று வெற்றியிலக்காக 197 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

sl1.jpg

போர்ட்எலிசபெதில் நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸுக்காக 222 ஓட்டங்களை பெற்றது.

இதையடுத்து பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் இலங்கை அணி 68 ஓட்டங்களினால் பின்னடைவை சந்தித்து.

இதையடுத்து 68 ஓட்ட முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி வீரர்களும் இலங்கை அணியின் பந்து வீச்சுகளுக்கு முகங்கொடுக்க முடியாது அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியமையினால், தென்னாபிரிக்க அணி 44.3  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

மக்ரம் 18 ஓட்டத்துடனும், எல்கர் 2 ஓட்டத்துடனும், அம்லா 32 ஓட்டத்துடனும், பவுமா 6 ஓட்டத்துடனும், டூப்பிளஸ்ஸி 45 ஓட்டத்துடனும், டீகொக் ஒரு ஓட்டத்துடனும், முல்டர் 5 ஓட்டத்துடனும், மஹாராஜ் 6 ஓட்டத்துடனும், ரபடா மற்றும் ஸ்டெய்ன் டக்கவுட் முறையிலும், ஒலிவர் 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க அணித் தலைவர் டூப்பளஸ்ஸி 50 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

D0ArRM6X0AE2wUP.jpg

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 3 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித 2 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாண்டோ ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

D0ArRB3WkAAREE_.jpg

இதனால் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 197 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தென்னாபிரிக்க மண்ணில் இதுவரை ஆசிய கண்டத்தை சேர்ந்த எந்தவொரு அணியும் டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டிராத நிலையில் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டு புதிய சகாப்தம் படைக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இந்த அருமையான சந்தர்ப்பத்தை இலங்கை அணி பயன்படுத்தி வரலாற்று சாதனை படைக்குமா அல்லது நழுவ விடுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

 

http://www.virakesari.lk/article/50494

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்று வெற்றி- தொடரை கைப்பற்றியது

இலங்கை வரலாற்று வெற்றி- தொடரை கைப்பற்றியது

தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில்  வெற்றி பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது

வெற்றி பெறுவதற்கு 197 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி குசல்மென்டிஸ் மற்றும் புதிய இளம் வீரர் ஒசாட பெர்ணான்டோவின் அபாரமான துடுப்பாட்டம் காரணமாக இரண்டு விக்கெட்களை மாத்திரம் இழந்து தனது  இலக்கை அடைந்தது.

குசல்மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்றார்  அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய ஒசாட பெர்ணான்டோ  தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்ததுடன் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்றார்.

odada11.jpg

இலங்கை அணி இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்காவில்டெஸ்ட் தொடரை வென்ற ஒரெயொரு ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

 

 

http://www.virakesari.lk/article/50535

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.