Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டை ஆக்கிரமித்துவரும் `கசிப்பு' இளைஞர்களும் பெருமளவில் அடிமையாகின்றனர்

Featured Replies

குடாநாட்டை ஆக்கிரமித்துவரும் `கசிப்பு' இளைஞர்களும் பெருமளவில் அடிமையாகின்றனர்

யாழ்குடா நாட்டிற்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் மதுபான வகைகள் எதுவும் தென்னிலங்கையிலிருந்து எடுத்துவரப்படாத நிலையில் குடாநாட்டுக் "குடிமக்களின்" ஒரே தெரிவாக இன்று கசிப்பே உள்ளது.

இதன் காரணமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை என்றுமில்லாதவாறு களை கட்டியுள்ளது.

குடாநாட்டின் மூலை, முடுக்கெங்கும் கசிப்பு உற்பத்தி, விற்பனை எவ்வித தடைகளும் இடையூறுகளுமின்றி நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாணத்தில் தற்போது வெளிநாட்டு, உள்நாட்டு மதுபான வகைகளைப் பெறுவதென்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது.

திக்கம் வடிசாலையில் உற்பத்தி செய்யப்படும் பனஞ்சாராயம் மட்டும்தான் மதுப்பிரியர்களின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்து வருகிறது.

இதற்கும் பெரும் கிராக்கி நிலவி வருவதுடன், விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மதுப்பிரியர்களின் ஒரே மாற்றுத் தெரிவாக கசிப்பே உள்ளது. இதனால் கசிப்பு உற்பத்தியாளர்களின் பாடு படு கொண்டாட்டம்.

அதிகரித்துள்ள கசிப்பு பாவனையாளர்களின் எண்ணிக்கையால் கசிப்பு உற்பத்தியாளர்களின் காட்டில் பண மழை கொட்டுகிறது.

மூலை, முடுக்கெங்கும் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை பகிரங்கமாகவே நடைபெற்று வருகையில் மது வரித்திணைக்களமும் பொலிஸாரும் எவற்றையுமே கண்டும் காணாததுபோல இருந்து வருவது கசிப்பு உற்பத்தியாளர்களை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது.

ஆங்காங்கே கண்துடைப்பிற்காக ஒருசிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் தற்போது அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை இது கட்டுப்படுத்தாது என்பதே பொதுமக்களின் கருத்து.

மறுபுறத்தே கசிப்பு பாவனையால் உடலில் குறுகிய காலத்தில் ஏற்படும் பாரிய விளைவுகளை மதுப்பிரியர்கள் உணர்வதாகத் தெரியவில்லை.

போதைக்காக குடித்த கசிப்பே காலனான (விசசாராயம்), பல பேர் பதைபதைக்க மரணமானதும் பலர் பார்வையிழந்ததும் எமது சமூகத்தில் நடைபெற்ற சங்கதிகளே.

இந்த நிலையில் அதிகரித்து வரும் கசிப்பு உற்பத்தி, விற்பனை பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லையென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இக்கொடிய பழக்கத்திற்கு யாழ்ப்பாணத்தில் இளைய சமுதாயமும் மிக வேகமாக அடிமையாகி வருவதுதான் அதிர்ச்சியான செய்தி.

உரியவர்கள் இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்தும் மௌனம் சாதித்தால் இதனால் ஏற்படும் விபரீதங்களுக்கு அவர்களே பதில் கூற வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்குடா நாட்டிற்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் மதுபான வகைகள் எதுவும் தென்னிலங்கையிலிருந்து எடுத்துவரப்படாத நிலையில் குடாநாட்டுக் "குடிமக்களின்" ஒரே தெரிவாக இன்று கசிப்பே உள்ளது.

இதன் காரணமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை என்றுமில்லாதவாறு களை கட்டியுள்ளது.

குடாநாட்டின் மூலை, முடுக்கெங்கும் கசிப்பு உற்பத்தி, விற்பனை எவ்வித தடைகளும் இடையூறுகளுமின்றி நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாணத்தில் தற்போது வெளிநாட்டு, உள்நாட்டு மதுபான வகைகளைப் பெறுவதென்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது.

திக்கம் வடிசாலையில் உற்பத்தி செய்யப்படும் பனஞ்சாராயம் மட்டும்தான் மதுப்பிரியர்களின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்து வருகிறது.

இதற்கும் பெரும் கிராக்கி நிலவி வருவதுடன், விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மதுப்பிரியர்களின் ஒரே மாற்றுத் தெரிவாக கசிப்பே உள்ளது. இதனால் கசிப்பு உற்பத்தியாளர்களின் பாடு படு கொண்டாட்டம்.

அதிகரித்துள்ள கசிப்பு பாவனையாளர்களின் எண்ணிக்கையால் கசிப்பு உற்பத்தியாளர்களின் காட்டில் பண மழை கொட்டுகிறது.

மூலை, முடுக்கெங்கும் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை பகிரங்கமாகவே நடைபெற்று வருகையில் மது வரித்திணைக்களமும் பொலிஸாரும் எவற்றையுமே கண்டும் காணாததுபோல இருந்து வருவது கசிப்பு உற்பத்தியாளர்களை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது.

ஆங்காங்கே கண்துடைப்பிற்காக ஒருசிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் தற்போது அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை இது கட்டுப்படுத்தாது என்பதே பொதுமக்களின் கருத்து.

மறுபுறத்தே கசிப்பு பாவனையால் உடலில் குறுகிய காலத்தில் ஏற்படும் பாரிய விளைவுகளை மதுப்பிரியர்கள் உணர்வதாகத் தெரியவில்லை.

போதைக்காக குடித்த கசிப்பே காலனான (விசசாராயம்), பல பேர் பதைபதைக்க மரணமானதும் பலர் பார்வையிழந்ததும் எமது சமூகத்தில் நடைபெற்ற சங்கதிகளே.

இந்த நிலையில் அதிகரித்து வரும் கசிப்பு உற்பத்தி, விற்பனை பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லையென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இக்கொடிய பழக்கத்திற்கு யாழ்ப்பாணத்தில் இளைய சமுதாயமும் மிக வேகமாக அடிமையாகி வருவதுதான் அதிர்ச்சியான செய்தி.

உரியவர்கள் இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்தும் மௌனம் சாதித்தால் இதனால் ஏற்படும் விபரீதங்களுக்கு அவர்களே பதில் கூற வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தினக்குரல்

வருத்தமான மற்றும் அபாயகரமான செய்தி.

மதுவுக்கு அடிமயானால், இளைய தமிழ் சமுதாயம் உணர்விழந்து விடும்.

பின் அவர்களுக்கு சுதந்திரமும் தேவையில்லை, மாணமும் தேவையில்லை.

பீப்பீ.ஆர்.எல்.எவ் கூலிக்குழு கசிப்பு உற்பத்திக்கு பெயர் போனது! இப்போது அதுவும் குடாநாட்டை ஆக்கிரமித்துள்ள சிங்களக் குண்டர்களுடன் நிற்பதாகக் கேள்வி! எனவே, இந்த கூலிகுழுவும் இதன் பின்னணியில் இருக்கலாம்!

போலிசார் பணத்தினை வாங்கிகொண்டு இப்பாவத்திற்கு துணைபோகிறார்கள். அவர்களுக்கு எம் மக்களை பற்றி என்ன கவலை. அரசியல் துறை இருந்தவரை தடை செய்திருந்தார்கள் செய்வதற்கும் அஞ்சினார்கள். இப்போது?

திருந்தாத nஐன்மங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.