Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலகோட் விமான தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியாது: இந்திய தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலகோட் விமான தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியாது: இந்திய தளபதி

ஆர்.ஜி.கே. கபூர்படத்தின் காப்புரிமைDD

இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் எல்லை தாண்டி விமானத் தாக்குதல் நடத்திய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்திய முப்படைகளின் பிரதிநிதிகள், எல்லையில் பதற்றம் தணியும் என்று கூறுவதைத் தவிர்த்தனர்.

அதைப் போல வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்து பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானி அபிநந்தனை அமைதி நிமித்தம் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவிப்பதையும் அவர்கள் தவிர்த்தனர்.

அதைப் போல, இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் பாலகோட்டில், ஜெய்ஷ்-இ-மொஹம்மது அமைப்பின் தளத்தின் மீது நடத்தியதாக கூறப்பட்ட தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர், விரும்பிய இலக்கு தாக்கப்பட்டது. ஆனால், எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவில்லை என்றார்.

பாகிஸ்தான் விமானப்படை இந்திய விமான தளங்களை தாக்க முயற்சித்தது. ஆனால், எந்த சேதமும் ஏற்படவில்லை என்று கபூர் மேலும் தெரிவித்தார்.

அபிநந்தன் திரும்புவது பற்றி கேட்டபோது, "மகிழ்ச்சி" அடைவதாக அவர் கூறினார். ஆனால், அமைதிக்கான நல்லெண்ண நடவடிக்கையாக அவரை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் கூறியுள்ளதுபற்றி கேட்டபோது, அவர், "ஜெனிவா ஒப்பந்தத்தின்படியே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்".

பாகிஸ்தான் தொடர்ந்து தவறான தகவல்களை வழங்கியது. முதலில் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தினோம், மூன்று பேரை கைது செய்தோம் என்றது. பின் இரண்டு பேர் என்றது. இறுதியில் ஒரு விமானி மட்டுமே தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்தது என்றார் அவர்.

அபிநந்தன்படத்தின் காப்புரிமைTWITTER.COM/OFFICIALDGISPR

"இந்திய கப்பற்படை தயார்நிலையில் உள்ளது. இந்திய மக்களின் பாதுகாப்புக்காக ராணுவம் மற்றும் விமானப்படையுடன் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்" என்று ரியர் அட்மிரல் டல்பிர் சிங் குஜ்ரால் தெரிவித்தார்.

ராணுவத்தின் மேஜர் ஜெனரல் சுரேந்தர் சிங் பஹால், விமானப்படையின் வைஸ் மார்ஷல் ஆர்ஜிகே கபூர் மற்றும் கப்பற்படையின் ரியர் அட்மிரல் டல்பிர் சிங் குஜரால் ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் கும்பலாக நுழைந்து ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்க முயன்றதாகவும், இந்திய விமானங்கள் பதிலடி தந்ததாகவும் கூறிய கபூர், பாகிஸ்தான் அமெரிக்கத் தயாரிப்பான F16 ரக விமானங்களை தாக்குதலில் பயன்படுத்தவில்லை என்று மறுத்தது. ஆனால், F16 ரக விமானங்களை பயன்படுத்தியதற்கான டிஜிடல் பதிவுகள் இருப்பதாக கபூர் குறிப்பிட்டார்.

அத்துடன், புதன்கிழமை நடந்த மோதலில் இந்திய விமானம் மட்டுமில்லாமல் பாகிஸ்தானின் F16 ரக விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கு ஆதாரமாக உடைந்த அம்ராம் ஏவுகணையின் உடைந்த பாகம் ஒன்றையும் அவர் செய்தியாளர்களிடம் காட்டினார்.

https://www.bbc.com/tamil/india-47403320

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

''தவறான தகவலைப் பரப்பும் பாகிஸ்தான்; எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்'': முப்படைத் தளபதிகள் கூட்டாக அறிவிப்பு

 
armyJPG
 
பாகிஸ்தான் தாக்குதலை விவரித்து இந்திய ராணுவத்தின் முப்படை அதிகாரிகளும் இன்று கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது விமானப்படை தாக்குதல் தொடர்பாக தவறான தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருவதாகவும், எந்த ஒரு சவாலையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது. இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்துள்ளது.

இரு நாடுகள் இடையே பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில் அதனைத் தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கியுள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இதுதொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து அபிநந்தனை விடுவிக்க சில நிபந்தனைகளை விதிக்க பாகிஸ்தான் முயலுவதாகத் தகவல்கள் வெளியாகின. இதனிடையே அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று மாலை அறிவித்தார்.

 இந்திய விமானப்படையின் முப்படைத்தளபதிகள் இன்று டெல்லியில் கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது எல்லையில் நடந்த சம்பவங்களை விவரித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

''பாகிஸ்தான் விமானங்கள் எல்லையைத் தாண்டி அத்துமீறி தாக்குதல் நடத்தின. விமானப்படை தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. இந்திய நிலைகளைக் குறி வைத்தே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. எனினும் அந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

அப்போது இந்திய விமானம் ஒன்று துரதிர்ஷ்டவசமாக தகர்க்கப்பட்டது. இந்திய விமானி பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டார். பாகிஸ்தான் படைகள் இல்லாத பகுதியில் தான் அவர் கீழே விழுந்துள்ளார். அதன் பிறகே பாகிஸ்தான் படைகள் அவரைக் கைது செய்துள்ளன. எனினும் அவரை விடுவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. அவர் விடுதலை செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது''.

இவ்வாறு முப்படைத் தளபதிகள் கூறியுள்ளனர்.

https://tamil.thehindu.com/india/article26398264.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.