Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கரி - சித்தார்த்தன் - பத்மநாபா அணி ஐக்கியப்பட்டு செயற்படுவதற்கு முடிவு ஏனைய தரப்புகளுக்கும் அழைப்பு.

Featured Replies

சங்கரி - சித்தார்த்தன் - பத்மநாபா அணி ஐக்கியப்பட்டு செயற்படுவதற்கு முடிவு ஏனைய தரப்புகளுக்கும் அழைப்பு.

வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, த.சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) ஆகியன ஐக்கியப்பட்டுச் செயற்படத் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கின்றன.

தங்களது நிலைப்பாட்டுடன் இணைந்து செயற்பட விரும்பும் அனைத்து அரசியல், சமூக சக்திகளுடனும் தாங்கள் ஐக்கியமாகச் செயற்ப்படத் தயார் என இந்த அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக புளொட் தலைவர் என்ற வகையில் த.சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்ற வகையில் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ். பொதுச்செயலாளர் என்ற வகையில் தி.சிறிதரன் ஆகியோர் ஒப்பமிட்டு கூட்டு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டனர்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக மேற்படி மூன்று கட்சிகளும் விடுக்கும் கூட்டறிக்கை என்ற தலைப்பில் அது அமைந்திருந்தது. அதன் முழு விவரம் வருமாறு: எமது மக்களின் அவல நிலையையும், வன்முறைக் கலாசாரத்தையும், ஏற்பட்டுவரும் அழிவுகளையும் கருத்திற்கெடுத்து, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எய்துவதை அடிப்படை இலக்காகக் கொண்டு முதற்படியாக தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) ஆகிய மூன்று கட்சிகளும் ஐக்கியப்பட்டுச் செயற்பட்டு வருகின்றோம்.

இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அடிப்படையான சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். அதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி இந்திய அமைப்பு முறையில் அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும் என்பதை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றார். தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் சர்வகட்சிக் குழுவின் முன்னால் நேரில் சமுகமளித்து சமஷ்டி முறையிலான தீர்வினை வலியுறுத்தினார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) ஒரு விரிவான அரசியல் தீர்வுத் திட்டத்தை அனைத்துக் கட்சிக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. மேற்படி யோசனைகள் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான, அதிகாரப் பகிர்ந்தளிப்பு தொடர்பான கலந்துரையாடல்களை செயற்பாடுகளை மேலும் செழுமைப்படுத்திச்செல்ல அடிப்படைகளாக அமையும்.

-Uthayan-

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஐக்கியப்பட்டுத்தானே காட்டிக்கொடுக்கினம்.

3 நடமாடும் பிணங்களை ஒன்றுசேர்த்து அதை தமிழர்களின் பிரதிநிதகள் ஆக்கப் பார்க்கிறது சிங்களம்.

மகிந்தா பொழுதுபோக்குவதற்கும் சர்வதேசத்திதை திருப்திப் படுத்துவதற்காகவும் அடிக்கடி கூறிவரும் தீர்வுத் திட்டத்தினை வெளியிட வேண்டிய காலம் வந்துவிட்டது. இத் தீர்வுத் திட்டத்தினை தமிழர் சார்பாக இந்த மூன்று பிணங்களும் கண்களை மூடிக்கொண்டு ஆமோதிக்கப் போகின்றன.

இந்த நாடகத்திற்கான முன்னேற்பாடுதான் இந்த ஐக்கியப்பாடு.

பிணங்களின் கையில் தமிழனின் வாழ்வா அடி நாயை செருப்பால

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் ரூபா ஒவ்வொருவருக்கும் அனுப்பி தனக்கு வாக்களிக்கச் சொன்ன ஆனந்தசங்கரி( கடைசியில் 5000 வாக்குகளைக் கூடத் தாண்டவில்லை), மாணிக்கதாசன் வவுனியாவில் கொட்டமாடியபோது, பயந்து முகவரியே தெரியாமல் ஒளித்திருந்த சித்தாத்தன், இந்தியா இராணுவம் வெளியேற முன்பு, அவர்களை முந்திக் கொண்டு ஓடிய வரதராசப்பெருமாள் அணி கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களுக்கு என்னத்தைச் சாதிக்கப் போகின்றார்கள்.

முந்தி வரதர் அணி என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். அது வெட்ககேடான நிலைக்குப் போன பிறகு, இப்போது பத்மநாபா அணி என்கின்றார்கள். இடையிடையே இப்படி ஏதும் நடத்தினால் தான், இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள் என்று சனம் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

பிணங்களின் கையில் தமிழனின் வாழ்வா அடி நாயை செருப்பால

நாயாவது நன்றியுள்ளது ஆனால் இங்கு நீர் குறிப்பிட்டுள்ளவைகள் பன்றிக்கூட்டங்கள் இவை மலம் திண்ணும் இனம் எனவே இவைகள் எல்லோரும் நாய் என்ற வார்த்தைக்குள் அடக்கப்பட முடியாதவைகள்???????????????????????????????

நன்றி ஈழவன்

நன்றியுடன் நாதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.