Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலிடம் தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் பதில்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலிடம் தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் பதில்கள்

[19 - April - 2007]

ஜனாதிபதியின் சகோதரர் கோதாபய ராஜபக்‌ஷ போரையும் நாட்டின் பாதுகாப்பு நிலைவரத்தையும் தவறாகக் கையாளுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து அகற்றவேண்டுமென்று விடுத்த கோரிக்கை அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. விக்கிரமசிங்க அந்தக் கோரிக்கையை விடுத்ததுடன் நின்றுவிடவில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக யாரை நியமிக்க வேண்டுமென்று அரசாங்கத்துக்கு ஆலோசனையும் வழங்கியிருக்கிறார். 1990 களில் போரில் பல சமர்களை வென்றவர் என்று வர்ணிக்கப்படுகின்ற ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவையே பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு நியமிக்கவேண்டுமென்பதே எதிர்க்கட்சித்தலைவரின் விருப்பமாகும்.

முன்னைய காலகட்டங்களில் அரசியல் குறுக்கீடுகள் இருந்த காரணத்தினால் படையினரால் போரை உருப்படியாக முன்னெடுக்க முடியவில்லை என்றும் தற்போது ஜனாதிபதி ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் படையினருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கி அரசியல் தலையீடுகளைச் செய்யாமல் இருப்பதால் அவர்களால் போர் முனையில் பல வெற்றிகளை அடையக் கூடியதாக இருக்கிறது என்றும் அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறைக்கு சார்பான தென்னிலங்கை அரசியல் சக்திகள் கூறுவதைக் காண்கின்றோம். அத்துடன் இச் சக்திகள் ஜனாதிபதி ராஜபக்‌ஷவை புகழுகின்ற அளவுக்கு அல்லது சில சந்தர்ப்பங்களில் அதையும் விடக் கூடுதலாக அவரது சகோதரர் கோதாபய ராஜபக்‌ஷவை புகழுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அதற்குக் காரணம் பாதுகாப்புச் செயலாளர் போர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் காட்டிவருகின்ற கடுமையான முனைப்புத்தான்.

இன நெருக்கடிக்கு இராணுவ ரீதியான தீர்வை முன்னெடுப்பதில் வெற்றி காணமுடியுமென்று சிங்கள மக்களை மீண்டும் நம்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்ற சக்திகளுக்கு கோதாபய ராஜபக்‌ஷவின் போக்கு அனுகூலமானதாக இருக்கிறது. விடுதலைப் புலிகளை இரண்டு அல்லது மூன்று வருடங்களில் தோற்கடித்துவிட முடியுமென்று கோதாபய ராஜபக்‌ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். போர் நிறுத்த உடன்படிக்கை மீது பற்றுறுதி கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறுவதெல்லாம் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்கே தவிர, வேறு ஒன்றுக்குமேயல்ல என்று கூட அவர் கூறியிருந்தார். அந்த அளவுக்கு சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயத்தைக் கேலி செய்து போரை முழு மூச்சாக முன்னெடுப்பதில் முனைப்புக் காட்டும் கோதாபய ராஜபக்‌ஷவை போரைத் தவறாகக் கையாளுபவராக சிங்கள மக்களுக்குக் காண்பிக்க எதிர்க்கட்சித் தலைவர் முயற்சிக்கிறார்.

ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அரசாங்கம் அரசியல் தீர்வு பற்றி வெறுமனே ஒப்பாசாரத்துக்கு பேசிக்கொண்டு இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதன் காரணத்தினால் தான் படுமோசமான மனித உரிமை மீறல்கள் நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்கள், நீதி விசாரணைக்குப் புறம்பான கொலைகள் என்று மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருப்பது குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தவண்ணமிருக்கின்றன. இந்த மனித உரிமை மீறல்களினால் பெருமளவுக்குப் பாதிக்கப்படுபவர்கள் தமிழ் மக்களே என்ற காரணத்தினால் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) போன்ற பேரினவாத அரசியல் சக்திகள் அரசாங்கத்தின் போர் முனைப்புக்கு ஆதரவைத் தெரிவித்து வருகின்றன.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் விக்கிரமசிங்கவோ மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒருவராகத் தன்னைக் காட்டிக் கொள்பவர். அதேவேளை, சமாதான முயற்சிகளின் உறுதியான ஆதரவாளர் என்று வெளியுலகில் பெயரெடுத்தவர். அத்தகைய விக்கிரமசிங்க தற்போதைய நிலைவரங்களுக்கு பெருமளவுக்குப் பொறுப்பானவர் என்று நம்பப்படும் கோதாபய ராஜபக்‌ஷ போரைத் தவறாகக் கையாளுகின்றார் என்று தெரிவிக்கும் குற்றச்சாட்டின் அர்த்தம் என்ன? கோதாபய ராஜபக்ஷவை விடவும் தீவிரமாக இராணுவ நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டக்கூடிய ஒருவர் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட வேண்டுமென்பதா விக்கிரமசிங்கவின் எதிர்பார்ப்பு?

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா வடக்கு, கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்த காலகட்டங்களில் படுமோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தன என்பது ஒன்றும் உலகம் அறியாததல்ல. இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் முதலில் அவுஸ்திரேலியாவுக்கும் பின்னர் இந்தோனேசியாவுக்கும் இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டவர். தற்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்று போர் விவகாரத்தில் கடும்போக்கான நிலைப்பாட்டைக் கொண்டவர்தான் ஜானக பெரேரா. சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாசையையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதித் தேர்தலில் அதன் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஜானக பெரேராவை நாடியிருந்தது. அந்தளவுக்கு பேரினவாத சக்திகளினால் விரும்பப்படுகின்ற ஒருவரை பாதுகாப்பு செயலாளராக நியமிக்க வேண்டுமென்று எதிர்க் கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்திருக்கிறார் என்றால், தற்போது கோதாபய ராஜபக்ஷ காட்டுகின்றதைவிட கூடுதலான தீவிரம் போர் நடவடிக்கைகளில் காட்டப்பட வேண்டுமென்று அவர் விரும்புகிறாரா? போரில் வெற்றி பெறமுடியாது என்று கூறிவந்த விக்கிரமசிங்க இப்போது அந்த நிலைப்பாட்டை மாற்றி விட்டாரா? அவரிடமிருந்து இக்கேள்விகளுக்கு தெளிவான பதில்களை தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தினக்குரல்

அணில் விக்கிரமாதித்தனையோ அல்லது மற்றைய சிங்கள பேரினவாத தலைவர்களையோ தமிழ் மக்கள் கணக்கில் எடுப்பதில்லை என்பது தினக்குரலுக்கு தெரியாதோ?

அணிலின் பதில்கள் தென்னிலங்கையில் அணில் அரசியல் செய்வதற்கு உதவக்கூடும், ஆனால், தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவாது...

தினக்குரல் இப்போ வர வர கூலிக்கு மாரடிக்க தொடங்குது போலயிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

தினக்குரல் இப்போ வர வர கூலிக்கு மாரடிக்க தொடங்குது போலயிருக்கு

தினக்குரலின் கேள்வி சரியானதே

ரணில் இப்போது இரட்டை வேடம் போடுகின்றார். எதிரியை விட இப்படியான குள்ளநரிகளைத் தான் நம்பக் கூடாது. இலங்கையின் பாதுகாப்புப் பற்றிக் கதைத்த அவர், மறுநாளோ, முதன்நாளோ மனோ கணேசன் நடத்திய மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்குப் பரிந்து பேசுவது போல நடித்தார். இதை;த தான் தினக்குரல் கேட்டிருக்கின்றது

பாதுகாப்பைக் கூட்டச் சொல்லி தமிழரின் கைதுகளை ஒரு பக்கம் ஆதரித்துக் கொண்டு மறுபக்கம் இப்படி நடிப்புத் தேவையா?

தினக்குரலின் கேள்வி சரியானதே

ரணில் இப்போது இரட்டை வேடம் போடுகின்றார். எதிரியை விட இப்படியான குள்ளநரிகளைத் தான் நம்பக் கூடாது. இலங்கையின் பாதுகாப்புப் பற்றிக் கதைத்த அவர், மறுநாளோ, முதன்நாளோ மனோ கணேசன் நடத்திய மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்குப் பரிந்து பேசுவது போல நடித்தார். இதை;த தான் தினக்குரல் கேட்டிருக்கின்றது

பாதுகாப்பைக் கூட்டச் சொல்லி தமிழரின் கைதுகளை ஒரு பக்கம் ஆதரித்துக் கொண்டு மறுபக்கம் இப்படி நடிப்புத் தேவையா?

இப்ப இல்லை எப்பவே இரட்டை வேடம் போட தொடங்கிட்டாரு, சமாதான ஒப்பந்ததம் கூட ரணில்ட குள்ள நரி தந்திரம், அதை வைத்து புலிகளை பலவீனப்படுத்த போட்ட திட்டம், ஆனால் அதற்க்குள் இப்போ இலங்கை அரசே விழுந்து விட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரணிலின் ஆட்சியில் உயிரிழப்புக்கள் குறைவுதான்! ஆனால் ரணில் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி! எங்கள் விரலைக்கொண்டே எங்கள் கண்ணைக் குத்திவிட சதி செய்ததே ரணில்தானே!.

ஈழத்தமிழனின் பிரச்சனைக்குத் தீர்வு! தலைவரின் வழிதானே அன்றி! இவர்கள் யாரும் எமக்கு உதவப் போவதில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.